குருடன் பர்திமேயு
 BLIND BARTIMAEUS
61-0124
வில்லியம் மரியன் பிரன்ஹாம்
 

குருடன்   பர்திமேயு  
இந்த செய்தியானது  சகோதரன் வில்லியம் மரியன் பிரன்ஹாம் அவர்களால் 1961 - ம் வருடம் , ஜனவரி மாதம் 24 - ம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று, அமெரிக்காவில் டெக்சாஸ் பியூமண்டில் உள்ள லெஜியன் ஹாலில்   பிரசங்கிக்கப்பட்டது. ஒலிநாடா ஒலிப்பதிவிலிருந்து அச்சிடப்பட்ட ஆங்கில புத்தகத்திலிருந்து ஏட்டிதழின் பக்கத்திற்கு சொல்வடிவமான செய்தியாக மாற்ற ஒவ்வொரு முயற்சியும் துல்லியமாக செய்யப்பட்டு, இப்புத்தகத்தில் முழுமையாக அச்சிடப்பட்டு, Word of Life Ministry  மூலமாக இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.
வெளியிடப்பட்டது: டிசம்பர் 2023



 
         
குருடன்  பர்திமேயு
 Blind Bartimaeus
61-01-24
   நன்றி சகோதரரே...?... நீங்கள் உட்கார்ந்துக் கொள்ளலாம். இன்றிரவு உங்களை மறுபடியும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சமீபத்தில் நான் என் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தேன்,  அவளிடம் சொன்னேன், "நீ  பொறுமையாக இருக்க வேண்டும், தேனே". ஏனென்றால் அவள் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும், அவர்கள் சிறு குழந்தைகள் பள்ளியில் படிக்கிறார்கள்,. மேலும் அவளிடம் சொன்னேன்; "டெக்சாஸ் லூசியானா மற்றும் அந்த தெற்கு பகுதியில் மிகச் சிறந்த சில மனிதர்களை நீ சந்திக்க வேண்டும் " என்றேன். நான் உங்கள் ஒவ்வொருவருடைய வீட்டிற்கும்  செல்ல முடியும் என நம்புகிறேன். காலை உணவிற்கு சோளப் பொறி சாப்பிடுவேன் என நம்புகிறேன். மிகவும் நல்லது; மிகவும் அருமையானது. கறுப்பு-கண் பட்டாணி, மற்றும் டர்னிப் கீரைகள், சோள ரொட்டி ஆகியவை மிகவும் நல்லது... அதைவிட எனக்கு தெரிந்து அருமையானது எதுவும் இல்லை. 
 2. தேவனின் அன்பு நமக்கு எவ்வளவு வினோதமான காரியங்களை செய்கிறதில்லையா? நம்மனைவரின் இருதயங் களையும்  கட்டுபடுத்தி  நம் எல்லோரையும் தேவ அன்பு  ஒன்றிணைக்கிறது. 
நாளை  இரவு இந்த கூட்டம் முடிவடைகிறது,  அதன்பின் நான் அநேக சகோதரர்களை சந்திக்க வேண்டும். இந்த  பிரசங்க கூட்டம் முடிவடைவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அனைவரும் என்னுடன் நன்றாக பழகினார்கள். இங்கு உள்ள ஒவ்வொருவரும் மிகவும் அருமையானவர்கள். 
என் அம்மா டெக்சாஸில் உள்ள  பாரிஸைச் சேர்ந்தவர். அதனால் நானும் கொஞ்சம் டெக்டாஸில் உள்ளவர்கள் போன்றவன் என நினைக்கிறேன். அதனால் நீங்கள் ஒரு அருமையான தேசத்தை சேர்ந்தவர்கள் என நம்புகிறேன். எந்தவொரு நாட்டையும் உருவாக்குவது அதில் உள்ள மக்கள் தான். நல்லது.. லூசியானா மற்றும் ஜார்ஜியா, மற்றும் அலபாமா மற்றும் அவற்றின் தெற்கு பகுதியின் மாநிலங்கள் யாவும் அங்குள்ளவர்களின் உபசரிப்பு பற்றி பேசுகிறது. அது உண்மை தான் என நம்புகிறேன்.
3. இப்போது நாங்கள் இன்றிரவிற்காக திட்டமிட்டு கொண்டிருக்கிறோம். சகோதரர் மூரிடம் எனக்காக கொஞ்சம் பேச சொன்னேன்...?. அதனால் நான் பிரசங்கிக்க  . நேற்று இரவு, நாம் ஒரு நாடகம் பார்த்தோம், ஒரு சிறிய கதையும். நான் சுகம் இல்லாதவர் களுக்காக ஜெபிப்பதற்கு முன்பாக, இன்றிரவும் அதில் சிறியதொன்றை பார்க்கலாம். 
பின்பு கர்த்தருக்கு சித்தமானால், நாளை இரவு நான் உங்களிடம் நிறைவு பிரசங்க கூட்டத்தில் மீண்டும் பேசுவேன் என நினைக்கிறேன். நீங்கள் செய்த எல்லா காரியங்களுக்கும் நாங்கள் நிச்சயமாக பாராட்டுகிறோம். நீங்கள் மிகவும் நன்றாக செய்தீர்கள். 
4. தேவனின் அன்பு நம்மனைவரையும் ஒன்றிணைத்ததில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முன்பு பார்த்திராத விஷயங்களை நாம் இன்று பார்க்கலாம். இதுபோன்ற கூட்டங்கள் மூலமாக தான் தேவனின் செல்வாக்கு என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த கூட்டங்கள் தேவனின் தொலைநோக்கு என்ன என்று ஜனங்கள் அறிய மிகவும் உதவுகிறது என நினைக்கிறேன். இப்போது வேதத்தைத் திறப்பதற்கு முன்பாக, நான் அதைச் சொல்ல விரும்புகிறேன்... 
நான் சுகம் இல்லாதவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பிக்கும் முன் இந்த சிறிய கைக்குட்டைகள், மேலாடைகள் மற்றும் இதுபோன்ற வற்றிற்காக ஜெபிக்க விரும்புகிறேன். அதுவரை நீங்கள் காத்திருக்க வேண்டுகிறேன். இப்போது, இங்கே இருக்கும் பொருட்களை பெற்றுக் கொள்ள தவறவிட்டால் நீங்கள் அவற்றை எப்படியாவது எங்களிடமிருந்து அனுப்ப பட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இவைகள் எல்லாம் இலவசம் தான். நாங்கள் எதற்கும் கட்டணம் வசூலிக்கவில்லை. எங்கள் புத்தகங்களைக் கூட வேறு யாரோ தான் அச்சிடுகிறார்கள்; மேலும் அவற்றை நாற்பது சதவிகித தள்ளுபடியில் வாங்குகிறோம், அவற்றை உங்களுக்கு தருகிறோம், நீங்கள் அதற்காக ஒன்றும் செய்ய வேண்டாம். 
நிச்சயமாக அவர்கள் அந்த புத்தகங்களில் எந்த லாபமும் பெறவில்லை.  ஏனென்றால் நமக்கு அவர்கள் தரும் சலுகையின் நிமித்தம் அவர்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சேதம் காரணமாக எந்த லாபமும் இருக்காது. யாராவது அந்த புத்தகங்களை பெற விரும்பி அவர்களிடம் பணம் இல்லை என்றால் அவர்களுக்கு அதைக் கொடுத்து விட வேண்டும் என சகோதரர்களுக்கு சொன்னேன். பாருங்கள்?  அவர்கள் அதை எப்படியாவது பெற்றுக் கொள்ளட்டும். அச்சடிக்கப்பட்ட புத்தகளில் ஒன்று (Julius Stadsklev) ஜூலியஸ் ஸ்டாட்ஸ்க்லேவ் (அவர்கள் இரண்டு அல்லது மூன்று நபர்கள்), மேலும் சகோதரர் லிண்ட்சே ஆகியோரால் அச்சிடப்பட்டது. அந்த புத்தகங்களை நாற்பது சதவிகித தள்ளு படியில் வாங்குகிறோம், அப்படி தான் நினைக்கிறேன். எவ்வாறாயினும் அந்த காரியங்களை சகோதரர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். 
5. எங்களிடம் பணத்திற்கான திட்டம் எதும் இல்லை. பணம் என்பது எங்கள் திட்டத்தில் எப்போதும் இருந்ததே இல்லை. ஒருநாள் அரசு அதிகாரி என்னை அழைத்து, "இப்போது பணத்திற்கான உங்களுடைய திட்டம் என்ன? உங்களிடம்  எங்களுடைய பணம் எவ்வளவு இருக்கிறது?"  எனக்  கேட்டார்.  
நான் சொன்னேன், "எதுவுமில்லை. " 
அதன்பின் அவர் சொன்னார், "சரி, அன்றாட வாழ்விற்கு என்ன செய்கிறீர்கள்? " என்றார். 
நான் சொன்னேன், "வழக்கமாக கூட்டங்களின் முடிவில் அவர்கள் அன்பான காணிக்கைகளை என்னிடம் தருவார்கள்,"  "அவர்கள் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்கள் அப்படி செய்யவில்லை என்றால் அதுவும் பரவாயில்லை". "அவர்கள் அந்த செலவுகளை பார்த்துக் கொள்ளவில்லை என்றால், அதை செலவு கணக்கில் வைத்து விட்டு, அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம். அவர்களால் செய்ய முடியவில்லை என்றால் அதை எங்கள் ஆலயத்திற்கு அனுப்புவோம் அவர்கள் அதற்கானவற்றை பார்த்துக் கொள்வார்கள். எங்களால் எப்போதும் முடியும் என்ற பெயரை கொண்டு செல்ல விரும்புகிறோம்.
6. எங்களில் ஒருவரையும் ஒருபோதும் பணத்திற்காக பிச்சை எடுக்க அனுமதிக்க மாட்டேன். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் போது, நான் ஊழியத்தை விடநேரிடும். பாருங்கள்? நமக்கு தேவையான அனைத்தையும் தேவன் தரவில்லை என்றால், அதை விட்டுவிட வேண்டிய நேரம் அது. பல கூட்டங்கள் பாழாகி விடுவதின் காரணம், "யார் பத்து ரூபாய்க் கொடுப்பார்? யார் ஐந்து ரூபாய் கொடுப்பார்?" என கேட்பது தான் என்று நினைக்கிறேன். எனக்கு அப்படி கேட்பது பிடிக்கவும் இல்லை. எனக்கு ஒன்றே ஒன்றைப் பற்றி கேட்பது மட்டும் தான் பிடிக்கும். அதாவது… 
நான் ஏதாவது தவறாக சொல்லிவிட்டேனா?  நான்-நான் தவறாக எதுவும் சொல்லவில்லை என நம்புகிறேன். நான் என் மனதில் இருப்பதை எப்படி சொல்ல நினைக்கின்றேனோ அப்படியே வெளிப்படுத்துகிறேன். ஆனால் நீங்கள் ஒன்றை மட்டும் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.  உங்கள் இருதயங்களை கிறிஸ்துவுக்கு கொடுங்கள். அவ்வளவு தான் எனக்கும் தேவை. உங்கள் இருதயங்களை கிறிஸ்துவுக்கு கொடுங்கள். அதற்காக தான் நாங்கள் இங்கே இருக்கிறோம். நீங்கள் அதை மட்டும் செய்தால் போதும், மீதமுள்ளவற்றை தேவன் கவனிப்பார்  என நம்புகிறேன். 
7. இப்போது, இன்றிரவில் வார்த்தைக்கு செல்லும் முன், நம்முடைய தலைகளை தாழ்த்தி ஜெபிப்போம். இன்றிரவில்  யாரெல்லாம் ஜெபத்தில் நினைத்தருளும் என்று  சொல்கிறீர் களோ “கர்த்தாவே என்னையும் நினைத்தருளும், எனக்கு தேவையுள்ளது எனது வேண்டுதல்களை நினைத்தருளும் கர்த்தாவே.”
எங்கள் பரலோக பிதாவே, நாங்கள் உமது இரக்கத்தின் சிங்காசனத்தை நெருங்கி வருகிறோம். நாங்கள் உம்முடைய நீதிக்கு நேராக வர முடியாது, ஏனென்றால் அதற்கு முன்பாக நிற்க எங்களால் முடியாது. உம்முடைய சட்டத்திற்கு நேராகவும் எங்களால் வர முடியாது, ஏனென்றால் அதனிடமிருந்து எங்களுக்கு மீட்பு இல்லை. ஆனால் நாங்கள்  இயேசுவே, உம்மிடம் இரக்கத்தை கேட்கிறோம். நாங்கள் அனைவரும் உம்முடைய தெய்வீக கிருபையை வேண்டி உம்மிடத்தில் வருகிறோம். 
எங்களை மன்னியும் எங்கள் குறைகள், தவறுகள் மற்றும் நாங்கள் செய்த, சொன்னவைகள் அல்லது மனதால் நினைத்த குற்றங்கள் யாவையும் மன்னித்தருளும். 
கர்த்தாவே, நாங்கள் பரிசுத்தவான்கள் அல்ல. இது பரிசுத்தமான  மலையும் அல்ல. இங்கு இருக்கிறவர்கள் பரிசுத்தமான மக்களும் அல்ல. ஆனால், இங்கு இருக்கிறவர் பரிசுத்தமானவர்; இது பரிசுத்தமான ஆலயம் அல்ல, ஆனால் இந்த ஆலயத்தில் இருக்கிறவர் பரிசுத்த ஆவியானவர். ஆகையால், பிதாவே, நாங்கள் ஜெபிக்கிறோம். இன்றிரவு பரிசுத்த ஆவியானவர் தாமே எங்களுடன் இருந்து துன்பப்படு வோருக்கும், நோயாளி களுக்கும் விடுதலை அளிக்க வேண்டும். ஆண்டவரே, இவர்கள் எளிமையானவர்கள்… மேலும் வியாதி யுள்ளோர் மற்றும் தேவையுள்ளவர்கள். 
8. எங்களுக்கு தெரியாது எப்படி செய்வது…என்ன செய்வது கர்த்தாவே. இந்த நேரத்தில் இரண்டு கருத்துகளுக்காக நான் நிற்கிறேன், உம்முடைய வார்த்தையை எப்படி சொல்வது என்றும், அந்த வார்த்தையை நீர் ஜனங்களுடைய இருதயத்திற்கு எப்படி ஆசீர்வாதமாக வைக்கப் போகிறீர் எனவும் யோசிக்கிறேன். விசுவாசத்தை ஊக்குவிக்கும் ஒன்றை சொல்லக்கூடியவனாக நான் இருக்கவும், அது ஜனங்களுக்குள் இருக்கும் விசுவாசத்தை தூண்டிவிட்டு, அதனால் இன்றிரவு அவர்கள் சுகத்தை பெறுவார் களாக. 
எல்லாவற்றிற்கும் மேலாக, கர்த்தாவே, பாவத்தினால் பாதிக்கப்பட்ட ஆத்துமாவை உடையவர்கள் இங்கு எங்கிருந் தாலும் அவர்களுக்காக ஜெபிக்கிறோம்.இன்று உம்முடைய ஒளியின் மூலம் பாவங்களை உடைத்தெரிவதைக் காண்பர்களாக, பிதாவே, அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் ஒருங்கிணைக்கப்படுவார்களாக. அதை அவர்களுக்கு அளித் தருளும்.
கர்த்தாவே, கல்வாரியால் சம்பாதிக்கப்பட்ட எனக்கு பின்னா லிருக்கும் உம்முடைய அநேக ஊழியர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். இங்கு நிற்கும் ஊழியர்களில் மிகவும் சிறியவனாக என்னை எண்ணுகிறேன். இவர்களில் சிலர் உம்மைப் பற்றி பிரசங்கித்து கொண்டிருந்த போது,  நான் ஒரு பாவியாக இருந்தேன். தேவனே, நீர் அவர்களுக்கு ஒரு அற்புதமான இருதயத்தை தந்து ஆசிர்வதிக்க வேண்டும் என ஜெபிக்கிறேன். தேவன்பு அவர்கள் யாவரையும் ஒன்றினைத்து அவர்களை அப்படியே பற்றிக் கொள்வதாக, பிதாவே, அவர்கள் எதை செய்தாலும் அதில் செழிப்பார்களாக. இந்த உலக வரலாற்றின் இறுதி நேரத்தில் கிறிஸ்துவை ஜனங்களிடம் கொண்டு செல்வதற்கு சிறந்த ஊழியர் களாக இருப்பார்களாக. 
சுகமில்லாதோரையும், பாதிக்கப்பட்ட யாவரையும் குணப் படுத்துவீராக, அவர்கள் உடல் மற்றும் ஆத்துமாவையும் குணப்படுத்துவீராக,பிதாவே. உம்முடைய வார்த்தைக்கு காத் திருக்கும் எங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பீராக, இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 
9. பரிசுத்த லூக்கா எழுதிய சுவிஷேசக புத்தகத்தில், 18 வது அதிகாரம் 38 வது வசனம்… 
தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான். 
மற்றும் 42 வது வசனத்தில்… 
இயேசு சொன்னார்…  நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. 
இன்றிரவு  நம்முடைய சிறிய கதை தொடங்குகிறது. எரிகோவின் கிழக்கு வாயிலில் அது ஒரு குளிர்ந்த, வசந்த காலைப்பொழுதில் எருசலேமிலிருந்து கீழ் நோக்கி இறங்கும் சாலையாக இருந்தது. அங்கிருந்த அந்த ஏழை மனிதனுக்கு அது மோசமான இரவாக இருந்தது. அவரால் அன்றிரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை. அவர் அமைதியின்றி திரும்பி திரும்பி படுத்தார், பின்பு எழுந்து கொண்டார், பின்பு திரும்பப்படுத்தார். அதுபோன்ற பயங்கரமான இரவுகள், நம்மில் பலருக்கும் அப்படிப்பட்ட இரவுகளைப் பற்றி தெரிந்திருக்கும். ஒருவிதமான பதட்டத்தினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார், மேலும் அந்த இரவு ஒரு பயங்கரமான இரவாக தெரிந்தது. அவனுக்கு… 
10. அவர் எழுந்திருந்த பொழுது, தனது வேலைக்குச் செல்ல தாமதமாய் இருந்தார், அவர் பிச்சை எடுப்பதன் மூலம் தனது அன்றாட வேலைகளை அங்கே செய்து கொண்டு வந்தார். அந்த நகரத்திலும் மற்றும் அந்த நாட்டை சுற்றியுள்ள இடங் களிலும் அந்நாட்களில் அநேக பிச்சைக்காரர்கள் இருந்தார்கள்: மிகவும் ஏழ்மையான நாடு, மேலும் ரோமானியப் பேரரசின் அடிமைத்தனத்தின் கீழ் அநேக ஏழை மக்கள் இருந்தனர். பிச்சைக்காரர்கள் மிகவும் சீக்கிரமாய் வீதிக்கு வந்துவிட வேண்டும். மேலும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் தங்கியிருக்க ஒரு இடம் இருந்தது. மேலும் அது  அவர்களுக்கென்று ஒதுக்கப் பட்டிருந்த ஒரு இடம். அவர்கள் அங்கே தான் நிற்பார்கள். 
வணிகர்கள் தெருவில் வரும்போது, அவர்கள் பிச்சைக்காக கூக்குரலிடுவார்கள். அங்கு வரும் வணிகர்  ஒருவேளை முதலில் யாரை சந்திக்கிறாரோ அவருக்கு ஒரு நாணயத்தை கொடுக்கலாம். ஏன், அது அநேகமாக அந்த நாளுக்கான கடைசி நாணயமாகக் கூட இருக்கலாம், அந்த வணிகரால் அதிகமாக கொடுக்க முடியாது, ஏனென்றால் ஒவ்வொரு நாளும் ஒரு நாணயம் என அவரால் கொடுக்க முடியாது. ரோமன் தினாரியு அல்லது ஏதேனும் ஒன்று அவரிடம் அதிகமாக இருந்திருக்கலாம். எனவே அவர் தனது நாணயத்தை கொடுத்துவிட்டு, பின்னர் அவர் சென்று விடுவார். அடுத்து இருக்கும் நபருக்கு வேறு ஒருவரிடம் இருந்து நாணயம் கிடைக்கலாம். 
வணிகர்கள் தங்கள் இடத்திற்கு வருவதற்கு முன்பதாகவே, பிச்சைக்காரர்கள் தங்களின் இடத்திற்கு வருவார்கள். மேலும் சந்தைவெளிகளிலும்… பிச்சைக்காரர்கள் நிற்கக் கூடாது என பல இடங்கள் உள்ளது. ஆகவே அவர்கள் அந்தப் படை வீரர்கள் எங்கு நிற்க இடம் கொடுக்கிறார்களோ, அங்கே தான் அவர்கள் நிற்க வேண்டும். 
11. இன்றிரவு நம்முடைய நண்பர், நாம் எல்லோருக்கும் அவரை பர்திமேயுவாக தெரியும் (நம்மில் சிலர் அவரை பர்திமேயு என உச்சரிக்கின்றோம்), இன்று அவருடைய வேலைக்கு தாமதமாய் செல்வதை நாம் காண்கிறோம்… அவருடைய இடம் வடக்கு பக்கமாய் உள்ள நுழைவாயிலில் இருந்தது, அங்கே நின்று கொண்டு உள்ளே வரும் வணிகர்களின் கண்களில் முதலில் படும்படி நின்று கொண்டு இருந்தார். அதைப் பார்த்தால் அவருக்கு நல்ல இடம் கிடைத்திருப்பதுப் போல தான் தெரிகிறது. அவர் சிறு வயது முதலே கண் பார்வை இல்லாதவராய் இருந்தார். அன்றிரவு… அன்று காலையில் தாமதமாய் வந்த காரணம் என்னவென்றால் (நாம் இதை ஒரு நாடகமாய் சொல்வதற்காக இப்படி சொல்வோம்), அவர் மீண்டும் பார்க்க முடியும் என இரவு முழுவதும் கனவு கண்டு கொண்டிருந்தார். அவர் மீண்டும் வானங்களையும், நட்சத்திரங்களையும், சூரிய ஒளியையும் பார்க்க முடியும் என நினைத்தார்.
 ஆனால் இப்போது, அவர் தன்னுடைய உலகத்தில் வாழ்ந்தார்,  எல்லாம் இருளால் மூடின, பார்வை இல்லாத உலகம். மிகவும் பயங்கரமான விஷயங்களில் ஒன்று பார்வையின்மை என நினைக்கிறேன். ஒரு ஆணோ அல்லது பெண்ணோ கைகளில் வெள்ளை குச்சியை வைத்து தரையில் தட்டி கொண்டு தனியாக தெருவில் நிற்கும் பொழுது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். பல முறை நான் எனது காரை நிறுத்திவிட்டு ஓடியிருக்கிறேன்,அங்கு வயதான ஒருவர் தன்னுடைய வேலைக்கு அல்லது ஏதோவொன்றிக்காக அந்த தெருவில் சென்று கொண்டு இருக்கிறார், அவர்களுக்கு சில இளம் வயதுடைய அல்லது வயதான மனிதர்கள்  உதவினார்கள். பார்வையின்மை, இது மிகவும் பரிதாபகரமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். 
12. ஆனால் நான்…அங்குள்ளது - ஒரு குருட்டுத்தன்மை இருக்கிறது. அது நம் உடலில் உள்ள குருட்டுதன்மையை விட மோசமானது, அது ஆத்துமாவில் உள்ள குருட்டுதன்மை. கண்ணில் பார்வையில்லாதவர்களை விட அவர்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். நம்முடைய இருதயம் ஏன் அவர்களை சென்றடையவில்லை? அவர்களை கண்டிப்பதற்கு பதிலாக அவர் களை நேசிப்போம். நீங்கள் அவர்களை நேசித்தால், அவர்களும் ஒளியைக் காண்பார்கள். இந்த உலகம் மரித்து கொண்டிருக்கிறது, ஒரு சிறந்த பொருளாதாரத்திற்காக அல்ல. அந்த சபைகள் இறந்து கொண்டிருக்கிறது, சிறந்த கட்டிடங் களுக்காக அல்ல, பெரிய ஸ்தாபனங்களுக்காகவும் அல்ல. ஆனால் அது யாராவது அன்பின் கரத்தை நீட்ட வேண்டும் என்பதற்காகவும், நாம் ஒருவருக்கு ஒருவர் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் சபையானது ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டு இருக்கிறது. நாம் இவ்விதமாக ஒருவர் மேல் அன்பாயிருக்கும் போது, "நீங்கள் என் சீஷர்கள் என்பதை எல்லா மனிதர்களும் அறிந்து கொள்வார்கள் " என்று இயேசு சொன்ன அடையாளம் இது தான். 
13. நான் ஒரு பார்வையற்றவரைப் பற்றி நினைக்கிறேன்…    (நான் சொல்ல வந்த பொருளில் இருந்து இது கொஞ்சம் விலகி செல்கிறது,ஆனாலும் பரவாயில்லை). ஃபென்னி கிராஸ்பி (பெண்) (Fanny Crosby)  என்னும் பார்வையற்றவர் இருந்தார். அவளால் இரண்டு கண்கள் உள்ளவர்கள் பார்ப்பதை விட நன்றாக பார்க்க முடிந்தது.  ஒருநாள் அவர்கள் உல்லாசமான  இசை அல்லது கவிதை எழுதுவதற்காகவும், உலகத்தின் நடன பொழுது போக்கிற்காக எழுதவும் இவளிடம் அனுகினார்கள். மேலும் அவள் அதைச் செய்ய முடியாது என மறுத்துவிட்டார். எனவே, அவளை அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தார்கள். 
நான் நினைத்தேன், “இவளுக்கும், ஒரு குறிப்பிட்ட பெந்தேகோஸ்தே சிறுவனுக்கும் என்னவொரு வித்தியாசம் என்று, இவன் ராக் அண்ட் ரோல் எனும் நடனத்தின் மூலம் உலகத்தையே எரித்துவிட்டான்.” இவன் யூதாஸை விட மோசமானவன் என அடிக்கடி நினைத்து கொள்வேன். யூதாஸ்… ஏசா தனது பிறப்புரி மையை விற்றுப்போட்டார். என்ன ஒரு பயங்கரமான காரியம், நியாயதீர்ப்பு நாளில் அந்த இளைஞன் இவற்றிற்கு பதிலளித்தாக வேண்டும்: மது விற்பதால் நரகத்திற்கு செல்பவர்களை விட அதிகமான ஆத்துமாவை நரகத்திற்கு அனுப்பியதற்காக பதிலளித்தே ஆக வேண்டும். சரிதானே. 
14. அதன்பின்பு ஃபென்னி கிராஸ்பி… ஒருநாள் அவர்கள் அவளிடம் பெரிதான அளவில் பேரம் பேசும்படியாக வந்தனர்… அவளும் ஏழையாக இருந்தாள், அவர்கள் அவளிடம் வந்து, “பொழுதுபோக்கு உலகத்திற்காக பாடல்களை உருவாக்குவதற்கு உங்கள் திறமையை நீங்கள் அளித்தால் நாங்கள் இவ்வளவு கொடுப்போம்" என்று கூறினார்கள். அவள் அதைச் செய்ய மறுத்துவிட்டாள். அவள் அதைச் செய்ய விரும்பவில்லை. 
அவள், "என்னிடம் ஏதேனும் ஒன்று இருந்தால், அது கிறிஸ்துவுக்கு சொந்தமானது" என்றாள். 
அதன்பின் அவர்கள், அவளுடன் பேசிக் கொண்டிருந் தவர்கள், "அப்படியானால் நீங்கள் நித்திய ஜீவன் இருக்கும் உலகத்திற்குச் செல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? "எனக் கேட்டார். 
அவள் "ஆம் " என்றால்.
 "அப்படியானால் அந்த கிறிஸ்து என்னவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? " என்று அவர் கேட்டார். 
"அவர் ஒரு மனிதராக இருப்பார்" என்றாள்.
மேலும், "நீங்கள் இங்கே இருப்பதைப் போலவே,  அங்கேயும் இருந்தால்," “நீங்கள் அவரை ஒருபோதும் பார்க்க மாட்டீர்களே” என்று சொன்னார்கள்.
அவள், "ஓ, நான் எப்படியும் அவரை அறிவேன்." என்றாள். 
எனவே அவர்கள், "இந்த வாழ்க்கையில் உங்களுக்கு ஒருபோதும் பார்வை இல்லாதது போல, நீங்கள்  அங்கேயும் பார்வையற்றவர்களாக இருந்தால், அவரை எப்படி அறிவீர்கள்? என்றனர். 
அவள், "நான் அவரை அறிவேன்" என்றாள்.
அவர்கள் அவளைப் பார்த்து சிரித்தார்கள், அவள் திரும்பி வீட்டின் உள்ளே செல்ல ஆரம்பித்தால். அவள், முடிவெடுத்த பின் சொன்னாள் "இல்லை, ஐயா, இந்த உலகில் எனக்கு எதுவுமில்லை. என் திறமைகள் அனைத்தும் கிறிஸ்துவுக்குக் கொடுக்கப் பட்டுள்ளன"... அவள் வீட்டின் பக்கமாக திரும்பி,  கைகளை உயர்த்தி சொன்னாள்.
நான் அவரை அறிவேன், நான் அவரை அறிவேன்,
அவர் பக்கமாய் மீட்கப்பட்டேன், அவருக்காக நிற்பேன்;
நான் அவரை அறிவேன், நான் அவரை அறிவேன்
அவருடைய கைகளில் உள்ள ஆணியின் தழும்புகளால். 
15. இதுபோன்ற முக்கியமான தருணங்களில், நாம் தேவனுக்காக முடிவெடுக்கும் போது தான் தேவன் நம்மீது வைக்கப்படுகிற அழுத்தத்தின் மீது கிரியை செய்கிறார். அந்த தருணம் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் உள்ளது. அதாவது சிறிய கூர்மையான விளிம்பு. கடைசி நேரங்களில் நீங்கள் நன்றாக இருக்கமாட்டீர்கள் என  நினைக்கும் போதும் மற்றும் யாராவது உங்களை கேலி செய்வார்கள் என நினைக்கும் போதும், உங்களுடைய சாட்சியில் நிலைத்து நில்லுங்கள். அதுவே தேவன் உங்களுக்காக கிரியை செய்யும் நேரமது தான். 
16. நாம் பார்க்கும்பொழுது பர்திமேயு அன்று தாமதமாக வந்தது போல் தெரிகிறது. அது வசந்தகாலத்தின் தொடக்கம், என்று நம்புகிறேன், ஏனென்றால் அது ஏப்ரலில் வருகிற  ஈஸ்டர் பண்டிகையின் காலமாக இருந்தது. அவனுடைய உடைகள் கந்தலாக இருந்தது என்று நினைக்கிறேன். அவன் நுழைவு வாயிலின்  பக்கமாய் சென்றான். அங்கே மிகவும் அமைதியாக இருந்தது, அதனால் அவன்  சொன்னான், "நல்லது, நான் சற்று தாமதமாய் வந்துவிட்டேன் ஏனெனில் நான் அதிக நேரம் தூங்கிவிட்டேன்“ என்றான். பாலஸ்தீன தேசத்தில் சூரியன் கிழக்கே உதயமாகி விட்டது. அவன் வடக்கு திசையில் இருந்தான்… 
(ஒலி நாடாவில் காலியிடம்-ஆசி) ஒரு சுவரின் மீது, அதுதான் யோசுவா காலத்தில் தேவனால் இடிக்கப்பட்ட சுவர். 
நாம் இப்படி நினைத்து கொள்வோம், அவன் ஒரு சிறிய பாறையின் மீது, சூரிய ஒளியில் அமர்ந்து, "சரி ஒருவேளை.. யாராவது ஒரு வணிகர் தாமதமாக வரலாம்" என்று சொன்னான். ஏனென்றால் ஒருவேளை இன்று என் குடும்பத்திற்காக ஒரு நாணயத்தை பெறலாம். நாங்கள் உண்மையாகவே அந்த தேவையில் இருக்கிறோம். 
17. அவன் இப்படி யோசித்திருந்திருப்பான்… அவனுடைய கந்தலான ஆடையுடன், சூரிய ஒளியில் அமர்ந்திருந்தப் போது, தன்னுடைய கனவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான், அது எவ்வளவு உண்மையாக இருந்தது என நினைத்து கொண்டான். அதன்பின் அவனது மனம் மீண்டும் பகல் கனவில் மிதந்தது, அதுபோல… நமக்கும் இந்த அனுபவம் இருக்கும் என அறிவோம். 
பலமுறை என்னால் மலையின் உயரமான இடத்திற்கு ஏற முடிந்தது. எந்த சத்தமும் எனக்கு கேட்காத தூரத்தில் நான் இருக்கும் வரை… அங்கு விலங்குகள் மேலும் என் கனவு மட்டுமே இருக்கும், ஓ! தேவனைப்பற்றியும் அவருடைய வருகையை பற்றியுமான கனவு; பறவைகளில் தேவனுடைய சத்தத்தை கேளுங்கள், கழுகுகளில் அவரைக் கவனியுங்கள், சூரிய உதயத்திலும் சூரிய அஸ்தமனத்திலும் தேவனை பாருங்கள். தேவன் உங்களை சுற்றி தான் இருக்கிறார். தனியாக இருந்து கனவு காணுங்கள். 
18. ஒருவேளை பர்திமேயுவும் இதுபோன்ற கனவில் தான் இருந்திருப்பான். அது வசந்த கால தொடக்கமாக இருந்தது,  அவன் கூறினான், "ஓ, நேற்றிரவு எனக்கு பார்வை வந்ததைப் போல ஒரு கனவு கண்டேன். எனக்கு நினைவிருக்கிறது நான் சிறு பையனாக இருந்த போது, இங்குள்ள மலையை சுற்றியுள்ள இடத்தில் நாங்கள் வாழ்ந்தோம், என் வீட்டிற்குள் ஒரு சிறிய அறை இருந்தது… 
வசந்த காலத்தின் தொடக்கத்தில் நாங்கள் இருந்த போது எனக்கு ஞாபகம் இருக்கிறது, சிறு பூக்கள் மலரும் போது நான் எப்படியெல்லாம் ஓடி விளையாடுவேன், அம்மா என்னை பூக்களைப் பறித்து ஒரு பூங்கொத்து செய்ய அனுமதிப்பார் என்பதெல்லாம் நினைவிருக்கிறது. நான் மென்மையான புல் வெளியில் மீது படுத்துக்கொண்டு, ஏப்ரல் மாதத்தில் வெண்மை யான மேகங்கள் வானத்தில் கடந்து செல்வதையும் சூரிய ஒளி என்மீது பட்டு செல்வதையும் அப்படியே பார்ப்பேன் என்ப தெல்லாம் நினைவிருக்கிறது. 
இந்த உலகம் எவ்வளவு அழகாக இருந்திருக்க வேண்டும். ஆனால், குருட்டுத்தன்மை காரணமாக பல ஆண்டுகளாக பார்வை யில்லாமல் இருக்கிறேன், அது போன்று  என்னால்  இனிமேல் பார்க்க முடியாது என நினைக்கிறேன். ஆனால், ஒ! அந்த கனவை எப்படி பாராட்டுவேன் - நான் பார்க்க முடியும் என்று கனவு கண்டேனே என  நினைத்தான்.”
19. பின்பு மறுபடியும் அவன் சிந்திக்க தொடங்கினான். மனம் மீண்டும் அவனுடைய சிறுவயதில் சிந்தனைக் கொண்டது. (நீங்களும் உங்கள் ஆவியில் யோசிக்கும் போது இப்படி தான் நடக்கும்.) நாமனைவரும் அதைச் செய்வோம் என்று எனக்கு தெரியும்.  நானும் செய்வேன் - நான் என் சிறுவயதைப் பற்றி நினைக்கும் போது, ஒருநாள் என் தந்தை அவருடன் வேலை செய்யும் ஒரு சக நண்பரும் வந்தார்கள், அவர்கள் மரங்களை வெட்டுபவர்கள், நான் பார்த்திருக்கிறேன் அவருடைய கைகள் எவ்வளவு வலுவானதாக இருக்கும் என்று… அவர் சுமார் நூற்றிநாற்பது பவுண்ட் உள்ள மரக்கட்டையை ஆனால் அது எடையிடப்படவில்லை, அவருடன் வேலைப் பார்ப்பவர் சொன்னார் ஒருநாள் அவர் சுமார் தொள்ளாயிரத்து ஐம்பது எடையுள்ள மரக்கட்டையை அவரே தனியாக வண்டியில் ஏற்றுவதை பார்த்திருக்கிறார்.                                                                      
அவர் தனது சட்டையில் உள்ள கையை மடித்து விடுவதை பார்த்திருக்கிறேன். அங்கு ஒரு ஆப்பிள் மரம் இருந்தது, அதில் முகம் பார்க்கும் கண்ணாடியை என் அம்மா அதில் வைத்திருந்தார், அருகில் ஒரு அடிகுழாயும் இருக்கும். துடைப் பதற்காக சாக்கு ஒன்றையும் வைத்திருந்தார்கள். அந்த குழாயை அடித்து அதில் வரும் தண்ணீரில் சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும்.. அந்த சோப்பை பழமையான முறையை பயன்படுத்தி நாங்கள் தயார் செய்து உபயோகப் படுத்துவோம். அவர் தனது கைகளை உயர்த்தி தன் கடுமையான தலைமுடியை சீவுவதை பார்க்கும் பொழுது நான் சொன்னேன் , " என் அப்பா ஒருபோதும் இறந்து போக மாட்டார். அவர் மிகவும் வலிமையானவர்.” ஆனால் அவர் ஐப்பத்தி இரண்டு வயதில் இறந்துவிட்டார். 
பின்பு நான் எபிரேயர் 13 ஐப் பற்றி நினைக்கிறேன், "நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிற தையே நாடித் தேடுகிறோம்". நமக்கு இங்கு தங்குவதற்கான இடம் இல்லை. நாம் இங்கே யாத்திரீகர்களும் அந்நியருமாய் இருக்கிறோம். நாம் நிலையான நகரத்தையே நாடுகிறோம். 
20. இப்போது பர்திமேயு ஒரு சிறுவனாக என்ன நினைப்பான் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது, அவன் இதைத் தான் நினைப்பான்: " ஒ, மலையடிவாரத்தில், என் மதிய உணவின் போது என்னுடைய அழகான அம்மாவின் இனிமையான குரலைக் கேட்கிறேன், 'பர்திமேயு உன்னுடைய சாப்பாடு தயாரகிவிட்டது, மகனே.'பின்பு நான் அப்படியே வீட்டிற்குள் ஓடுகிறேன், அம்மா என் சிறிய முகத்தை துடைத்து, என் தலைமுடியை சீவி, கன்னத்தில் முத்தமிடுகிறாள், நான் அவளுடைய பெரிய, மென்மையான கண்களைப் பார்க்கிறேன். நான் என் தாயின் அழகான முகத்தைப் பார்க்கிறேன், அவள் எனக்காக மதிய உணவை எடுத்து வைத்திருந்தார். 
அந்த, மதிய உணவுக்குப் பிறகு மறுபடியும் என்னைக் கூப்பிடுவார், காரணம் அது தூங்குவதற்கான நேரம். வீட்டின் தாழ்வாரத்தில், யோர்தானைப் பார்த்தவாறு என்னை கைகளில் வைத்து அசைத்து தூங்க வைப்பார். நான் எனது பிஞ்சுக் கைகளை அவரின் கன்னத்தில் வைப்பேன். அம்மா என்னை முத்தமிடுவார். அம்மா எனக்கு வேதாகமக் கதைகளை சொல்லுவார்கள். நான் நம்முடைய யேகோவா தேவன் தம்முடைய ஜனங்களை எப்படி வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு அழைத்து வந்தார் என்ற கதையைக் கேட்பதற்கு ஆசைப்படுவேன். 
நான் அவர்களுக்காக மலையடிவாரத்தில் இருந்து கொண்டு வந்த அந்த மஞ்சள் நிற பூங்கொத்தைப் பார்த்துகொள்வார். என் அம்மா சொல்வார்,  'இவை யேகோவா வின் வாக்குறுதிகளில் சில' பர்திமேயு. இந்த அழகான நிலம் நம்முடையது. நம்மை எகிப்தின் மலைமேடுகளில் இருந்து அழைத்து வந்து இந்த தேசத்தில் வைத்தார்". 
21. அந்த மாபெரும் வலிமை மிக்க யேகோவாவைப் பற்றி அம்மா என்னிடம் இப்படி சொல்லியிருக்கிறார், கர்த்தர் தனது மக்களுக்காக எப்படி இடியிலிருந்து வெளிப்பட்டார் ; எப்படி தன் ஜனங்களுக்காக முன்சென்று பார்வோனின் படையை அவர் களுக்கு பின்னால் மூழ்கடித்தார்; தேவன் எப்படியாக அப்பங்களை வானத்திலிருந்து மழையாய் அனுப்பினார் மற்றும் வயல்களில் இருந்து எப்படியாக காடைகளை கொண்டு வந்தார், எப்படியாக தம்முடைய ஜனங்களுக்கு உணவளித்தார்; மற்றும் அநேக அடையாளங்களையும் அற்புதங்களையும் எவ்வாறு நிகழ்த்தினார் என்று என் அம்மா என்னிடம் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர்கள் தாகமாய் இருந்தபோது பெரிய தீர்க்கதரிசியான மோசே மூலமாக ஒரு பாறையை பிளந்தார், அப்போது அதிலிருந்து தண்ணீர் வந்தது. 
ஒ, நாம் தொழுது கொள்ளும் யேகோவா தேவன் எவ்வளவு பெரிய வல்லமையுள்ள மகத்துவமானவர். யேகோவா தேவன் அந்த தீர்க்கதரிசியான மோசேக்கு இப்படி ஒரு வாக்குறுதி அளித்தார், "ஒருநாள் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவார், இந்த ரோமானிய சர்வாதிகாரத்தின் கீழ் இருந்து அவர் நம்மை வெளியே அழைத்துச் செல்வார். " 
அதன் பின்பு, அவர்கள் யோர்தானைக் கடக்கும்போது (அவர்கள் இருந்த இடத்திற்கு சற்று கீழே), எப்படி யோர்தானின் தண்ணீர்களை யேகோவா குவியலாக்கினார்? ஏப்ரல் மாதத்தில் வரும் கோடை வெயிலால் அந்த நதி உருகி யூதேயா, எர்மோன் வழியாக வரும். அவர்களுடைய வலிமையான யோசுவா அங்கே யோர்தானுக்கு முன்பாக நின்று பேசினார். அங்கே யேகோவா தேவன்  அதை வறண்ட நிலமாக மாற்றினார். அவர்கள் அந்த வெட்டந்தரையிலே  நடந்து சென்றார்கள். அது சரியாக ஏப்ரல் மாதத்தில் நடந்தது.  அவர் எவ்வளவு பெரிய தேவனாக இருந்தார்.
22.பின்பு பர்திமேயு கொஞ்சம் ஒரு‌ விதமான‌ பதட்டத்துடன் காணப்பட்டான். அவன் சொன்னான், “உங்களுக்கு தெரியுமா, யேகோவா இன்னும் யேகோவா வாகவே இருக்கிறார் என்றான். எவ்வாறாயினும் அவர் அப்படித்தான் இருப்பார்‌ என நான்‌ நம்புகிறேன். ஆனால் என்னுடைய‌ போதகர் சொன்னார்‌‌, அவை எல்லாம் நடந்து முடிந்தது. அவர் சொல்வது சரியில்லை.” 
அதே நேரத்தில் ஏதோ ஒன்று வருவதை பர்திமேயு கேட்கிறான்.  கிளிக்! கிளிக்! கிளிக்!  கிளிக்! அது ஒரு சிறிய கழுதை. நல்லது, அது ஒரு பணக்காரனாகதான் இருக்க வேண்டும். ஏனென்றால் அந்நாட்களில் போக்குவரத்து என்பது ஏழைகள் வழக்கமாக காலால் நடந்து செல்வது தான். பணக்காரர்கள் கழுதை  வண்டியிலோ அல்லது கழுதை மேல் ஏறிச் செல்வார்கள். அவன் உடனே எழுந்திருந்து அந்த கற்கள் உள்ள சாலையில் இருபது அடி தூரம் ஓடினான், வேகமாக சென்று பார்வையற்றவர்களுக்கு பிச்சையிடுங்கள்   பிச்சை யிடுங்கள்  என கூக்குரலிட்டான்.”  
23. அந்த நேரத்தில் அந்த சிறிய கழுதை நின்று விட்டது அவன் ஒரு கனத்த குரலை கேட்டான், "என்னுடைய வழியிலிருந்து விலகிச் செல் பிச்சைக்காரனே. நான் கர்த்தருடைய வேலைக்காரன்.  இந்தக் காலையில், நான் எரிகோ வுக்கு சென்று  கொண்டிருக்கிறேன். அங்கு நான் ஊழியர்களை சந்திக்க போகிறேன். இங்கே குணப்படுத்தும் சேவைகள் எதுவும் இல்லையென்று அங்கே பார்க்க போகிறேன். அந்த மூட நம்பிக்கைகள் எதுவும் இல்லை. கலிலேய தீர்க்கதரிசி என்று சொல்லப்படும் யாரும் இங்கு வரப் போவதில்லை. அவருடைய மூட நம்பிக்கையும் வரப் போவதில்லை. என்னுடைய வழியை விட்டு விலகிச்செல் பிச்சைக்காரனே. நான் என் வழியில் செல்ல வேண்டும். நான் கர்த்தருடைய சேவையில் இருக்கிறேன்.”
“பரிசுத்தவானே என்னை மன்னியுங்கள்.”  என்று பின்னுக்கு சென்றான். 
அவர் அத்தகைய அனைத்து போதகங்களையும் நிறுத்துவதற்காக ஊழியர்களின் குழுவை பார்க்க எரிகோ செல்கிறான். (ஒரு வேளை அது கடினமானதாக இருக்கலாம். ஒரு வேளை நான் அப்படி சொல்லியிருக்க கூடாது.) இப்படித்தான், உங்களுக்கு தெரியுமா? ஒரு மனிதனுடைய சரீரம் இறந்து விடுகிறது.  ஆனால், அவனுடைய ஆவி இறந்து போவதில்லை.  இது மிகவும் மோசமானது தான் ஆனால், இது இப்படித்தான் இருக்க வேண்டும், ஏனென்றால் நியாயத் தீர்ப்பில் ஒவ்வொரு தலைமுறையும் ஒரே மாதிரியாகத்தான் நிற்க வேண்டும். பாருங்கள்!  நீங்களும் அதே வழியில் தான் செல்ல வேண்டும்.
24. பின்பு பர்திமேயு அந்த வழியில் இருந்து பின் சென்றான். அந்த நாள் சென்று கொண்டிருந்தது. (நாம் ஒரு சின்ன விஷயத்தை  இப்படி யோசிக்கலாம்). இப்போது சூரியன் பாறைக்கு மேலாக கடந்து வந்து நிழல் கொடுத்தது, அதனால், அவன் வேறு ஒருவர் கிடைக்கும் வரை இங்கேயே உட்காரலாம் என நினைத்தான். "சரி நான் இன்றிரவு  எதுவும் எடுத்துச் செல்ல மாட்டேன், நான் எதுவும் இல்லாமல் தான் செல்ல வேண்டும் என நினைக்கிறேன்."
அவன் கீழே உட்கார்ந்திருந்த பொழுது, அவன் யோசித் தான். "நல்லது, என்னுடைய கடந்த நாட்களை பற்றியும், யேகோவாவை பற்றியும் ஒரு அற்புதமான கனவை கண்டுக் கொண்டிருந்தேன்." அதன் பின்பு அவன் மறுபடியும் அந்த நினைவிற்குள் போனான். அவன் சொன்னான், “ஆமாம், எனக்கு பிடித்த கதைகளில் ஒன்றை அம்மா எனக்கு சொன்னது நினைவிருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று இது: எலியா தீர்க்கதரிசி பற்றி அவள் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு அந்த கதை மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அம்மா இப்படி சொல்வார், பர்திமேயு உனக்கு  திஸ்பியனாகிய எலியா பற்றியும் சூனேமில் இருந்த‌ பெண்ணைப் பற்றியுமான அந்தக் கதை பிடிக்கும் தானே?" (எலிசாவை எலியா என்று தீர்க்கதரிசி கூறுகிறார்-தமிழாக்கியோன்) 
“ஆமாம் அம்மா, ஏனென்றால், அது ஒரு சிறுவனை பற்றியது. தேவன் தன் திட்டத்தை ஒரு சிறுவனில் எவ்வாறு செயல்படுத்தினார்.” மேலும் அது பர்திமேயுக்கு மிகவும் பிடித் திருந்தது. ஏனென்றால் அவனும் யேகோவாவை நம்பியதால் பிடித்திருந்தது.
25. இந்த சூனேமியப்பெண் ஒரு புறஜாதியர். ஆனாலும், தேவன் அவளுக்கு கிருபை அளித்தார். எவ்வளவு பெரிய வலிமைமிக்க தீர்க்கதரிசியான எலிசா அந்த நகரத்திற்கு வருகிறார். அவர் ஒரு பரிசுத்தவான் என்பதை அவள் உணர்ந்தாள். அவர் மலையில் உள்ள ஒரு குகையில் வாழ்ந்தார். அவருடைய வேலைக்காரரான கேயாசியும்  அவருடன்  இருந் தார். கேயாசி ஒரு ஊழியக்காரரின் மேலாளரைப்போல் அவருடன் எல்லா இடத்திற்கும் சென்றார், மற்றும் அவர் ஊழியம் செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவன் செய்து வந்தார். எப்படியோ, அவளுக்கு இந்த மனிதரை பிடித்து இருந்தது. இவர் ஒரு அற்புதமான மனிதர் என்று அவள் நினைத்தாள். 
அவளுடைய கணவர் ஒரு வயதான மனிதர், அவளுக்கும் வயதாகிக் கொண்டிருந்தது. அவள் தன் கணவணை நோக்கி, “நான் உம்மை வேண்டுகிறேன், நாம் இந்த மனிதருக்கு உதவி செய்யலாம், ஏனென்றால் அவர் ஒரு பரிசுத்த மனிதர் என்பதை நான் தெரிந்து  கொண்டேன் என்று சொன்னாள்.” 
அவர்கள் தங்கள் வீட்டின் மேல் தளத்தில் ஒரு சிறிய அறையை கட்டினார்கள். அது தீர்க்கதரிசியின் சிறிய அறை. அங்கே ஒரு கட்டிலை வைத்தார்கள். அதனுடன் ஒரு சிறிய குடத்தில் தண்ணீரும் வைத்தார்கள் மேலும் கழிவறையும், சோர்வு நேரங்களில் கைகளையும் கால்களையும் கழுவுவதற்கு ஒரு சிறிய பாத்திரமும் வைத்தார்கள். அவள் அந்த மேல் வீட்டின்  வெளியே இருந்து கேட்கும் போது அவருடைய வேலைக்காரன் நிச்சயமாகவே அவருக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வருவான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.	
26. எலிசா இவர்களை குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார், இதனைக் கேட்கும் வரை…அவள் சொல்வதை நான் கேட்டேன். ”பர்திமேயு, எலிசா அவளிடம் என்ன வேண்டும் என்று கேட்ட பொழுது அவளுக்கு இருந்த மோசமான தேவை என்னவென்று தெரியுமா?” 
  அவர் கேட்டார் “நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? நான் ராஜாவிடம் பேச வேண்டுமா அல்லது என்னிடத்தில் ஏதாவது உதவி வேண்டுமா?”
அவள், "இல்லை நான் என் ஜனங்களுடன் வசிக்கிறேன். எனக்கு எந்த குறைவும் இல்லை” என்றாள்.  இவையெல்லாம் என் விருப்பத்துடன் செய்தேன். ஏனென்றால் நீங்கள் தொழுது கொள்ளும் தேவனை நான் மதிக்கிறேன், நீங்கள் வாழும் வாழ்க்கையை நான் மதிக்கிறேன்" என்றாள். 
அதன்பின் கேயாசி சொன்னான், “அவளுக்கு வயதாகி விட்டது, அவளுடைய கணவருக்கும் வயதாகி விட்டது. அல்லாமலும் அவர்களுக்கு குழந்தை இல்லை” என்றான். (பர்திமேயுக்கு இது பிடித்திருந்தது) 
வல்லமையான தீர்க்கதரிசி எலிசா, “போ அவளிடம் இந்த வாசற்படியில் வந்து நிற்கச் சொல்” என்றான். (அவர் ஒரு தரிசனத்தை கண்டார்). அவர் சொன்னார், "கர்த்தர் உரைக்கிற தாவது,  நீங்கள் ஒரு மகனை தழுவி அணைப்பீர்கள்” என்றார்.
அந்த சிறுவனுக்கு பன்னிரண்டு வயதாய் இருந்தது, ஓ…  அவனுடைய அப்பாவும், அம்மாவும்  அவனை மிகவும் நேசித்தார்கள்.(பர்திமேயுவும் அதே வயதில்  இருந்திருக்கலாம்). அவனுடைய  அப்பாவும், அம்மாவும் அவனை அதிகமாய் நேசித்தார்கள். அவனுடைய அப்பா அவனை வயல்வெளிகளில் அழைத்துச் சென்று தானியங்களை வளர்ப்பதற்கான எல்லா வழிகளையும் அவனுக்கு காட்டினார். ஒரு நாள் அவர் வயல்வெளியில் இருந்த போது, சிறுவனுக்கு சூரிய ஒளியினால் மயக்கம் வந்திருக்க வேண்டும். ஏனென்றால் “அவன் என் தலை நோகிறது”,” என் தலை நோகிறது” என்று சொல்லிக் கொண்டே இருந்தான். (பாலஸ்தினியாவில் சூரியனிலிருந்து வரும் நேரடி கதிர்களால் அதிகமாய் வெப்பம் இருக்கும்). என் தலை… என் தலை..
27.மேலும் அவனின்... அப்பா வேலையில் கவனித் திருந்தார். ஆகவே அந்த சிறுவனுக்கு உடல் நிலை மிகவும் மோசமானது. அந்த சிறுவனின் அப்பா தன்னுடைய வேலைக் காரனை நோக்கி "குழந்தையை அதன் தாயிடம் அழைத்துச் செல்லுங்கள்" என்றார். அந்தச் சிறுவன் மிகவும்  நோய்வாய்ப் பட்டான். மிகவும் அவதிப்பட்டான்.  கடைசியில் அவன் தாயின் மடியில் இறந்து போனான். 
கிறிஸ்துவின் ஊழியருக்கு இரக்கம் காட்டிய அந்த  புகழ் பெற்ற பெண்ணின் துணிச்சல்... அவள் சரியாக  தேவனை அறிந்திருந்தாள். அவள் என்ன செய்ய வேண்டும் என்று சரியாக அறிந்திருந்தாள். அவள் ஆவியானவரால் என்ன செய்ய வேண்டும்‌ என்று வழிநடத்தப்பட்டாள். ஓ, எனக்கு இது பிடிக்கும் பர்திமேயுவிற்கு மட்டுமல்ல எனக்கும் இது பிடித்திருக்கிறது. அவள் அவனை தீர்க்கதரிசி அறைக்கு அழைத்து சென்று தீர்க்கதரிசியின் படுக்கையில் படுக்க வைத்தாள். அது தான் அவனை படுக்க வைப்பதற்கு  சரியான இடம். 
அவள் தன் வேலைக்காரனை நோக்கி “கழுதையின் மேல் சேணம் வைத்து ஏறி, நான் உங்களுக்கு உத்தரவிடும் வரை நீங்கள் எங்கும் நிறுத்த வேண்டாம் முன்னோக்கி செல்லுங்கள்“ என்றாள். 
அவளுடைய கணவன் , "அவரை பார்க்க போவதில்  எந்த அவசியமும் இல்லை, இது அம்மாவாசையும் இல்லை ஓய்வு நாளும் இல்லை. அவர் அங்கே இருக்க மாட்டார்” என்றார்.  
அவள் சொன்னாள் “எல்லாம் நல்லது தான்” என்றாள். 
“மற்றொரு விஷயம் பர்திமேயு, தேவன் தம்முடைய ஊழியர்களுக்கு எல்லாவற்றையும் வெளிப்படுத்துவதில்லை என்பது உனக்கு தெரியுமா? அவர்கள் என்ன தெரிந்து கொள்ள  வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதை‌ மட்டுமே (பாருங்கள்?), அவர் அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். அவர்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை மட்டும்.” ஆகவே அந்த பெண்  தேவனின் வல்லமை பெற்ற தேவ மனிதனை பார்க்கச்  சென்றாள்.   
28. அவர் தனது குகை வாசலுக்கு நடந்து சென்றார். தனது ஊழியர்களை சுவற்றின் ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்தார். எலிசாவுக்கும் வயதாகி இருந்தது. அவர் இப்படியே கைகளை உயர்த்தி வெளியே பார்த்தார். அவர் "நான் யாரோ வருவதை பார்க்கிறேன் ?" என்றார். 
கேயாசி சொன்னான், “அது அந்த சூனேமியாள். அவள் துக்கம் நிறைந்தவளைப் போல் தெரிகிறாள்.” (அவள் அழுது கொண்டே வந்து கொண்டிருந்தாள்.)
அதன் பின் எலிசா சொன்னார், அவள்  இருதயம் துக்கமாய் இருக்கிறது. கர்த்தர்  அதை எனக்கு  அறிவியாமல்  மறைத்து வைத்தார்”. அவளுக்கு என்ன பிரச்சினை என்று தெரிய வில்லை.” கேயாசியை நோக்கி “போ அவளை சந்தி” என்றார். 
அவன் அவளை பார்க்கும் போது அவள்  தீர்க்கதரிசி அருகே வந்தாள். அவர் கேட்டார்  “நீ சுகமாய் இருக்கிறாயா? உன் புருஷன் சுகமாய் இருக்கிறானா? 
ஓ, அந்தப் பெண் வெளிப்படுத்திய விதம் எனக்கு பிடித்திருக் கிறது. அவள் சொன்னாள் “எல்லோரும் நலம் தான்” என்று சொன்னாள்.
29. நான் இப்போது‌ மார்த்தாவையும், மரியாவையும் பற்றி நினைக்கிறேன்.‌ மார்த்தாளோ எப்பொழுதும் தாமதமாய் புரிந்து கொள்பவள் போல் காணப்படுகிறாள். ஆனால் இந்த பெண்ணிற்கு தெரிந்த போது (அவர் இந்த பெண் சூனேமி யாளை மீண்டும் குறிப்பிடுகிறார்). ஆனால் இந்த சூனேமியாள் அந்த தீர்க்கதரிசியுடன் தேவன் இருப்பதை அறிந்திருக்கிறார். அவர் அந்த நாளுக்கான தேவனுடைய  பிரதிநிதி ‌என்பதை அவள் அறிந்திருந்தாள். தேவன் தன்னுடைய தீர்க்கதரிசியுடன் இவ்வளவாக இருந்திருந்தால், அவர் தன்னுடைய குமாரனுடன் எவ்வளவு அதிகமாய் இருந்திருப்பார்? 
அவள் (மார்த்தாள்) சொன்னாள், “ஆண்டவரே நீர் இங்கு இருந்திருந்தால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டான். ஆனால் இப்போதும் கூட தேவனிடம் ‌நீங்கள் என்ன கேட்டாலும் தேவன்  அதை உங்களுக்கு கொடுப்பார்” என்றாள்.‌‌ அவ்வளவு தான். இதுதான் யூகித்தல்.
30.  மேலும்  அந்த சூனேமியாள் “எல்லோரும் நன்றாக இருக்கிறோம்” என்றாள். ஏன்? அவளுடைய கணவன் கைகளை அசைத்துக் கொண்டும்  சத்தமிட்டுக் கொண்டும் இருக்கிறார். உறவினர்கள் அனைவரும் கதறி, அழுது கொண்டிருக்கிறார்கள்.  இப்படி நடந்து கொண்டிருக்கும் போதே, இங்கே இவள் உடைந்த இருதயத்துடன் வந்திருக்கிறாள். அங்கே தீர்க்க தரிசியின்  படுக்கையில் அவர்களுடைய ஒரே மகன்  இறந்து கிடக்கிறான் . இவளும்  வயதானவள், அவளுடைய கணவனும் வயதானவன். இவள் தன்னுடைய சிறு மகனை எவ்வளவாய் நேசித்தால். ஆனால், தேவனின் பிரதிநிதிமுன் நின்று கொண்டிருக்கும் பொழுது அவள் “எல்லோரும் நன்றாக இருக்கிறோம்” என்றாள். 
ஆனால் எலிசா அதை அறிந்திருந்தார்… தேவன் தன் பிரதிநிதியிடம்  இதை வெளிப்படுத்த முடியும் என்று அவள் அறிந்திருந்தாள். எதுவாக இருந்தாலும் தேவன் தனது தீர்க்கதரிசி மூலம் வெளிப்படுத்துவார் என்பதை அவள் அறிந்திருந்தாள். தேவன் கொடுத்தார் தேவன் எடுத்துக் கொண்டார். கர்த்தருடைய நாமம் ஸ்தோதரிக்கப்படுவதாக!. ஆனால், தேவன்  ஏன் எடுத்தார் என்று அவள் அதை அறிய‌ விரும்பினாள். நானும் அதை அறிய‌ விரும்புகிறேன்.
தேவனுக்கு இன்றும் உலகில் ஒரு பரிந்துரைப்பவர் இருக்கிறார். நாம்‌ அவரை பரிசுத்த ஆவியானவர் என்று அழைக்கிறோம். அவருடைய சமூகத்தில் வந்து நில்லுங்கள். ஓ தேவனே, ஜனங்கள் அதை பெற வேண்டும் என நான் விரும்புகிறேன். அவருடைய சமூகத்தில் வந்து நின்று அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
31. மேலும் அவள் சொன்னாள் “எல்லோரும் நன்றாக இருக்கிறோம்”. அந்த தீர்க்கதரிசியின் இருதயம் உற்சாகம் அடைந்திருக்கும் ‌என்று நான் நினைக்கிறேன். அதன் பின்பு அவள் வந்து கீழே அவருடைய காலில் விழுந்து பிடித்துக் கொண்டாள். அவருடைய வேலைக்காரன்  “இது ஒரு வித  தவறான செயல் ‌என நினைத்தான்”. இந்தப் பெண் தன் எஜமானை சுற்றி இப்படி விழக்கூடாது என ‌நினைத்தான். உடனே அவன் என்ன செய்தான் பாருங்கள். அவளைப் பிடித்து இழுத்தான்.
அப்போது எலிசா சொன்னார், “அவளை தனியாக‌ விட்டு விடு. அவளை விட்டு விடு அவளுடைய இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது. தேவன் இதை என்னிடமிருந்து மறைத்து விட்டார்”. 
அதன் பின்பு என்ன நடந்தது என்பதை அவள் விவரித்தாள். “தேவன் ஏன் இந்த மகனை எனக்கு கொடுத்தார்? என்னை ஏமாற்றும்படி ஏன் இப்படி சொன்னீர்கள்? இப்போது, அந்த மகன் இறந்து கிடக்கிறான்”.
32. எலிசாவை கவனியுங்கள். அவர் சொன்னார்… தேவ ஆவியால் தான் அபிஷேகம் பண்ணப்பட்டிருப்பதால்  தொடுகிற அனைத்தும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும் என்பதை அறிந்திருந்தார். அவர் கேயாசிடம் சொன்னார், “நீ உன் இடையை கட்டிக் கொண்டு இந்த ஊழியர்களை அழைத்துச் செல். நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள். வழியில் ஒருவனை சந்தித்தாலும் உனக்கு ஒருவன் வணக்கம் தெரிவித்தாலும் அவனுக்கு மறுமொழி சொல்லாமல், எந்த சமுதாய காரியங்களுக்காகவும் எங்கும் நிற்க வேண்டாம்”.  
இதைத்தான் தேவன் தம்முடைய வார்த்தையை கொண்டு செய்வது என்று  நான் நினைக்கிறேன். அது தான் அபிஷேகம் பண்ணப்பட்டது. அது அவருடையது. நாம் அவருடைய செய்தியாளர்கள்.  நாம் அவருடைய ஊழியர்கள் இப்படி செய்வதை நிறுத்துவதற்க்கும் அதைப் பற்றி விவாதிக்கவும் மற்றும், இதில் பிரச்சினை செய்வதற்கோ நமக்கு நேரம் கிடையாது. இந்த செய்தி மிகவும் அவசரமானது. ஜனங்கள் எல்லாரும் மரித்துக்  கொண்டிருக்கிறார்கள். நாம் சென்று அதைப் பற்றி பேசுவோம். நமக்குள்‌ இருக்கும் பல பிரிவுகளின் தடைகள் மற்றும் எல்லாவற்றையும் நிறுத்துவோம். அதுபோன்ற எல்லாவற்றையும் உடைத்தெறிவோம். ஆமாம் ஐயா. மரித்துக் கொண்டிருக்கும் இந்த உலகத்திற்கான செய்தியை பெறுவோம். இப்போது…அதைப் பற்றி பேச விரும்பவில்லை, நான்  பிரசங்கிக்க ஆரம்பிக்கிறேன்.
33. இப்போது எவ்வாறாயினும் அவர் தொடங்கினார். ஆனால், அந்த பெண்ணிடம் இருந்த ‌விசுவாசம் இந்த ஊழியர் களிடம் இல்லை. அந்த தீர்க்கதரிசி மீது அவள் நம்பிக்கை வைத்திருந்தாள். மேலும் அவள் சொன்னாள், “கர்த்தராகிய தேவன் இன்னும் ஜீவிக்கிறார். நம்முடைய  ஆத்துமா ஒரு போதும் மரித்து  போவதில்லை”. தேவன் என்றென்றும் உயிரோடே தான் இருப்பார் என்பதை அவள் அறிந்திருந்தாள்... நம்முடைய ஆத்துமா ஒரு போதும் மரித்து  போகாது. நான் உம்மை விட மாட்டேன்”. ஓ என்னுடைய… அது  அவ்வளவு தான். இப்போது நீங்கள் புரிந்துக் கொண்டீர்களா? அவரை பிடித்து கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவரை இப்படி பிடித்துக் கொள்ளுங்கள். மற்றும் அவரை ஒரு போதும் விட்டு விடாதேயுங்கள். “இன்று என்னுடைய கை அவரை பற்றிக் கொண்டது. நாளையும் அது எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. அது எப்போது வருகிறதோ அதுவரை நான் இறுக்கமாக அவரை பிடித்துக் கொள்ளுவேன்.. எனக்கு வேண்டியது வரும் வரை அவரை நான் பற்றிக் கொள்ளுவேன். நான் உம்முடைய வாக்குத்தத்தத்தை பெற்றுள் ளேன். நீங்கள் எனக்கு வாக்குதத்தத்தை கொடுத்திருக்கிறீர்கள். குணமடைந்த மற்றவர்களை பற்றியும் எனக்கு தெரியும். நானும் அதையே பற்றிக் கொள்ளுவேன். நான் உம்முடைய கரத்தில்  இருக் கிறேன் ஆமென்”. இப்போது ஏதோவொன்று நடக்க போகிறது.
34. நீங்கள் தேவனின் வாக்குத்தத்தை பிடித்து அதை பற்றிக் கொண்டிருக்கும் பொழுது “கர்த்தாவே நீர் சொல்லியிருக்கிறீர்   நான் மனம்திரும்புதலின் தகுதிகளை பெற்றுக் கொண்டேன். அதன் பின் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை எனக்கு தருவீர். அதை  எனக்கு தரும் வரை நான் உம்முடைய கரத்திலேயே இருக்கிறேன்.” 
எனது நண்பர் ராபின்சனுடைய சாட்சியையும் விரும்பு கிறேன். அவரின் சாட்சி எனக்கு பிடிக்கும். சோளம் விதைக்கப்பட்ட நிலத்தின் நடுவே நின்று கொண்டு சொன்னார். “நீங்கள் எனக்கு பரிசுத்த ஆவியை கொடுக்கவில்லை என்றால், நீங்கள் பூமிக்கு திரும்பி வரும் போது இங்கே எலும்புகள் குவிந்து கிடக்கும்” என்றார். எனக்கு இந்த சாட்சி பிடிக்கும். ஆமாம் ஐயா அப்போது தான் அவருக்கு அது கிடைத்தது. இப்படித்தான் நீங்களும் பெற்றுக் கொள்ள வேண்டியதுமான  வழியும்  இதுவே. அதையே பற்றிக் கொள்ளுங்கள்.
35. நான் அந்தப் பெண்னை பாராட்டுகிறேன். அவள் தீர்க்கதரிசி மீது நம்பிக்கை  வைத்திருந்தாள். அவள் அவரை பிடித்துக் கொண்டு சொன்னாள் ”நான் உம்மை விட்டு போவதில்லை.” மிகவும் நல்லது, அதுதான்… 
இப்போது, இயேசுவும் நமக்கு அதையே தான் கற்றுக் கொடுத்திருக்கிறார். எவ்வாறு அந்த “நியாயமற்ற நீதிபதி மற்றும் விதவையை பற்றிய காரியம். அவன் பழிவாங்க வில்லை, அவள் இரவும் பகலும் அழுத‌ போதிலும் அவளை தண்டிக்கவில்லை. ஏன்? அவர்..அவர்.. தன்னை அவளிடம் இருந்து விடுவிப்பதற்காக அவளுடைய எதிரிகளுக்கு தண்டனை வழங்கினான். சொன்னார்… உங்கள் பரலோக பிதாவும் தம்மிடம் பரிசுத்த ஆவியானவரை கேட்கும் அனைவருக்கும் எவ்வளவு அதிகமாய் கொடுப்பார். இது தான் நமக்கு வேண்டும்.
36. உங்களால்  பரிசுத்த ஆவியானவரை  உண்மை என்று விசுவாசிக்க  முடியவில்லை என்றால், தேவனின் வாக்குத் தத்ததை பிடித்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றி இருங்கள். அதனோடு தங்கி இருங்கள். அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். அதை விட்டு விடாதிருங்கள். அவர் குணமளிப்பவர் என்பதை நீங்கள் விசுவாசிக்கவில்லை என்றால்,உங்களுக்கு எந்த நோய் இருந்தாலும், எந்த பிரச்சனை இருந்தாலும் குணப்படுத்தும் நேரம் வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டாம். இப்போது இந்த நேரத்தை பற்றிக் கொண்டு சொல்லுங்கள். தேவனே “நான்  உம்முடைய கரங்களில் இருக்கிறேன்” என்று கூறுங்கள். 
 சாத்தான் சொல்லுவான், “நீ நன்றாக இல்லை”. 
அதைத்தான் அவன் என்னிடமும் கூறினான். நான் சொன்னேன் “இங்கேபார், பழைய சாத்தானே (old slewfoot) நீ இல்லை என்றாலும்.. உனக்கு வேண்டும் என்றாலும்.. நீ விரும்பினால் தேவனின் மகிமையை பற்றி நான் சாட்சி சொல்வதை நீ கேட்க விரும்பினால் இங்கேயே சுற்றி இரு. ஆனால், நீ என்னை அதிலிருந்து அசைக்க போவதில்லை. தேவனுடைய சாட்சியையும், மற்றும் தேவன் குணப்படுத்தும் புகழையும் நீ கேட்க விரும்பினால் இங்கேயே இரு. இங்கேயே சுற்றி நில்லு. என்னால் முடிந்த வரை அதை ஒலிக்க வைக்கப் போகிறேன். அதனுடன் இங்கேயே இரு. இங்கேயே சுற்றி ஒட்டிக் கொண்டிரு. அதைக் கேட்பதற்கு உன்னை நான் அழைக்கிறேன். சுற்றி இரு.”
முதல் நாள், எதும் சிறந்ததாக இல்லை; அடுத்த நாள், சிறந்ததாக இல்லை; அடுத்த நாள், சிறந்ததாக இல்லை. நான் அப்படியே தங்கியிருந்தேன். சாட்சி அளித்தேன். தேவனை புகழ்ந்து கொண்டிருந்தேன். கருத்த மேகங்களின் வழியாக தேவனை துதித்து கொண்டிருந்தேன். தேவன் ஒரு வாக்குறுதி அளித்தார். இறுதியாக அது நடந்தது. கொஞ்ச நேரத்திலேயே சாத்தான் சோர்வடைந்து ஓடி விட்டான்.
37. அதன் பின்பு, அந்த தீர்க்கதரிசி அவளை தன் கைகளில் இருந்து விலக்க முடியாது என்பதை நாம் காண்கிறோம். ஆகவே அவர் சொன்னார். “சரி, நான் என் இடையை கட்டிக் கொண்டு உன்னுடனே வருகிறேன்.” ஓ, நான்… பின்பு கேயாசி திரும்பி வருகிறதை அவர் பார்த்தார். அவளது விசுவாசம்… இப்போதும் அந்த… அந்த குச்சி தன்னுடைய வேலையை செய்திருக்கும். ஆனால் இதில் உங்கள் விசுவாசம் எங்கே இருக்கிறது. எனவே அவளுடைய விசுவாசம் அதில் இல்லை, ஆகவே  அது அந்த தீர்க்கதரிசி மேல் இருந்தது. 
எனவே அவர் அங்கு வருகிறார். அவர்கள் அனைவரும் துக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,  அவர்கள் கதறுகிறார்கள், அவர்களுடைய எல்லாவித நம்பிக்கையும் போய் விட்டது. எல்லா நம்பிக்கையும் போய் விட்டது. “ஸ்ஸ், ஸ்ஸ், ஸ்ஸ். அமைதியாக இருங்கள்” என்று அவர் சொல்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. அமைதியாக இருங்கள், அவர் என்ன செய்ய போகிறார்? 
நீங்கள் இதை கவனிக்க வேண்டும். அவர் அந்த குழந்தை படுத்திருக்கும் அறைக்குள் செல்கிறார். பின்னர், உள்ளே சென்று பின்னால் உள்ள  கதவை பூட்டிக் கொண்டார். இப்போது அவரும் அந்த குழந்தையும் மட்டும் இருக்கிறார்கள்.  நீங்கள் தேவனுடன் தனியாக இருக்கும் போதுதான் மிகவும் வெற்றிகரமான நேரங்களாக இருக்கும். பாருங்கள்? தேவனுடன் தனியாக இருங்கள். 
இயேசு சொன்னார் “நீயோ ஜெபம் பண்ணும் போது உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து உன் கதவை பூட்டி அந்தரங்கத்தி லிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய்  உனக்கு பலனளிப்பார்.” 
38. ஆகவே, என்னால் தீர்க்கதரிசியை காண முடிகிறது. இப்போது வேதாகமம் சொல்கிறது “அந்த மேலறையில் அவர் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார். கர்த்தாவே நான் இங்கே இருக்கிறேன். நான் என்ன செய்ய முடியும்?” மறுபடியும் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார். அவர் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்காக காத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து ஆவியானவர் அவர் மேல் இறங்கினர். அவர் மேலே சென்று அந்த குழந்தையின் மேல் படுத்துக் கொண்டார். குழந்தையின் உடல் அனலாகிற்று. மறுபடியும் நடக்க ஆரம் பித்தார். மறுபடியும் எழுந்திருந்து அங்கேயும் இங்கேயும் நடந்து கொண்டிருந்தார்.
அதன்பின்பு தேவனுடைய அபரிவிதமான அபிஷேகம் அவர் மேல் வருவதை அவர் உணர்ந்தார். எனவே  மறுபடியும் அவர் எழுந்து அறை வீட்டில் அங்குமிங்குமாக உலாவி திரும்ப கிட்ட போய் அவன் மேல் குப்புறப்படுத்தார்.அப்பொழுது அந்த பிள்ளை ஏழு தரம் தும்மி தன் கண்களை திறந்தான். அதன்பின் அவனை தூக்கிக் கொண்டு  வெளியே சுமந்து வந்து அவனுடைய தாயிடம் கொடுத்தார். 
ஓ, இந்தக் கதை சிறிய பர்திமேயுக்கு எவ்வளவு பிடித்திருக்கும். அவன் சொல்ல விரும்புவான்..?(ஒலி நாடாவில் காலியிடம்-ஆசி)
39.“பாருங்கள்,  தேவன்  தமது  நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். பர்திமேயு, பாருங்கள்? தேவன் ஏதாவது செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக அவர் யாரையாவது கொண்டு வர வேண்டும். அவர்தான் காரியங்களை நியமிக்கிறார்.” 
“ஓ,அம்மா, நீங்கள் மிகவும் அழகானவர்கள். நான் உங்களை நேசிக்கிறேன் அம்மா.”
“உனக்கு தெரியுமா, பர்திமேயு? நீ பிறப்பதற்கு முன்.…இது இப்போது உனக்கு புரியாது, தேனே. ஆனால் நீ பிறப்பதற்கு முன், நான் உன்னை தேவனுக்காக அர்ப்பணித்தேன். யேகோவாவுக்காக தான் தெரியுமா? உனக்கு என்னவென்று தெரியுமா? அது எனக்கு கொஞ்சம் கூட ஆச்சரியமாக இல்லை ஆனால், உன்னுடைய சிறிய கண்கள் அந்த மேசியாவைக் காணும்.” 
அவன் நினைத்தான். “ஓ, எலிசாவா…அவர் இப்போது  வந்தால் நான் பார்வையற்றவனாக‌ இருக்கிறேனே என்றான்.” 
“ஆனால் உனக்கு தெரியுமா, பர்திமேயு  தேவன் தமது மகிமையை வெளிப்படுத்துவதற்காக சிறுவர்களை பயன் படுத்துவார். அவருக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. ஆகவே உன்னுடைய வாழ்க்கையிலும் ஒரு நோக்கத்தை வைத்திருக் கிறார் என்று  நான் நம்புகிறேன்.” 
அதன்பின்பு பர்திமேயு அதை நினைத்தபடி, “ஓ‌, அது இப்போது அப்படி இருக்க முடியாது. இப்போது அது என்ன வென்று பாருங்கள். பாவம் அந்த ஏழைத்தாய் ஜெபம் பண்ணினாள், ஆனால் அவள் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே போய் விட்டாள். ஆனால் அவள் என்ன ஜெபித்தாலோ அதை இழந்து விட்டாள் என நான் நினைக்கிறேன். உங்களுக்கு தெரியுமா, அவர்கள் மீது இப்போது குழிகற்கள் தான் இருக்கிறது…”
40. இல்லை, இல்லை. இதுவரை ஒரு உண்மையான ஜெபம் எதுவும் ஏறெடுக்கப்படவில்லை!. ஆனால் அதற்கு என்ன பதில்! எனக்கு ஐம்பத்தொன்று வயது மற்றும் நான் ஊழியத்தில் முப்பத்தொன்று ஆண்டுகள் இருக்கிறேன். நான் தேவனின் வேதாகமத்திற்கு முன்‌  சொல்லுகிறேன் “நான் ஒருபோதும் உத்தமமாக எதுவும் கேட்க வில்லை! ஆனால் தேவன்  அதை எனக்கு கொடுத்தார். அல்லது அவரால் முடியாது என்பதற்கான காரணத்தை என்னிடம் கூறினார். கிறிஸ்துவின் ஊழியக் காரனான நான் இதை சொல்கிறேன்.  அது தான் சரி பல்லாயிரக் கணக்கான தடவைகள் நான் அவரிடம் பல விஷயங்களை கேட்டு இருக்கிறேன். மனதார‌‌ அவரிடம் எதையும் கேட்டிருக் கிறேன். ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றும் அவரிடம் அதை கேட்டிருக்கிறேன் ஒன்று அவர் என்னிடம் சொல்லி விடுவார். அவர் எனக்கு அதை கொடுப்பார் அல்லது ஏன் அவரால் கொடுக்க முடியாது என்று என்னிடம் சொல்லி விடுவார். ஆகவே அது எனக்கு கிடைக்கவில்லை என்றால் என்னால் அதை பெற்றுக் கொள்ள முடியா விட்டால்! அது எனக்கு நல்லது தான்! என்று  எனக்கு தெரியும். 
உங்களுடைய சிறு ஆண்குழந்தை உங்களிடம் சவரம் செய்வதற்கு உங்களுடைய  சவரன் கத்தியை கேட்டு அதை நீங்கள் அவனுக்கு  கொடுத்தால், நீங்கள் எவ்வளவு மோசமான தந்தையாக இருப்பீர்கள். அவன் தன்னைத்தானே காயப்படுத்தி கொள்வான் அல்லவா. அதைப்போல தான் நமக்கு எது நல்லது, எது நல்லது இல்லை என அவருக்கு தெரியும்.
41.அதன்பின்பு பர்திமேயு இப்படி நினைத்திருப்பான். “உங்களுக்கு ஒன்று தெரியுமா? இங்கே  கொஞ்சம் கீழே  இடம் இருக்கிறது. அங்கே  இஸ்ரேல்  தேசத்தை கடந்து செல்லலாம். சற்று யோசித்து பாருங்கள்! சிறிது நேரத்திற்கு முன்பு அந்த போதகர் எந்த சாலையில் நடந்து சென்றாரோ அதே சாலையிலே வல்லமை உள்ள தீர்க்கதரிசியான எலியா, எலிசாவுடன் கை கோர்த்து சாலையில் நடந்து வந்து யோர்தானுக்கு கீழே நடந்து வந்து அவளை உயிரோடே எழுப்புவார்.” (ஒலி நாடாவில் காலியிடம்-ஆசி)
42. பிறகு இஸ்ரவேலர் கடந்து வந்த நேரம் முதல் வல்லமையான தீர்க்கதரிசியான எலிசா வரை தேவன் சொன்னதும் மேலும்  தேவன்  கடல் பிளந்ததும், அவரால் தண்ணீரையும்  திறக்க முடியும் என அவன் நினைத்தான், “ஓ, நான் மட்டும் அந்த நாட்களில் வாழ்ந்திருந்தால் அந்த இரண்டு பெரிய தீர்க்க தரிசிகளும் கைகோர்த்து யோர்தானுக்குள் நடந்து வருகிறார்கள், அவர்களில் ஒருவர் திரும்பி வந்து கொண்டிருக் கிறார்‌. மற்றொருவர் மேலே சென்று கொண்டிருக்கிறார். அந்த வயதான தீர்க்கதரிசி யேசபேலுக்கும் ஆகாபுக்கும் உலகின் பாவங்களுக்கும் எதிராக சண்டையிட்டவர் . மற்றும், ஆற்றின் குறுக்கே... அங்கே ஏதோ ஒரு புதருக்குள்ளே ஒரு குதிரை கட்டப்பட்டு இருந்தது. அக்கினி ரதம் அவரை மகிமைக்கு அழைத்துச் சென்றது. அந்த இளம் தீர்க்கதரிசி(எலிசா) தனது ஊழியத்திற்கான‌ இரட்டிப்பான‌ பகுதியை பெறுகிறார். பெற்றுக் கொண்டு திரும்பி வரும் போது கைகோர்த்து நடந்து கொண்டு இருப்பார்கள்…” 
அவன் சொன்னான் “நான் மட்டும் அந்த இடத்தில் இருந் திருந்தால் நான் ஓடிச்சென்று...” (ஒலி நாடாவில் காலியிடம்-ஆசி)
 43. ஆகையால் “நீங்கள்  ஜனங்களை,  உண்மையான தேவனிடம் கொண்டு வரும் தேவ மனிதராய் இருப்பதால் யேகோவாவிடம் கேளுங்கள். அப்பொழுது நான் பார்வையை பெறுவேன்.  ஆனால், அந்த போதகர் என்னிடம் சொன்னார்... யேகோவா  பல ஆண்டுகளுக்கு முன்பே அப்படி செய்வதை விட்டு விட்டார்” என்றார். அவர்கள் இன்னும் அப்படித்தான் நினைக்கிறார்கள். ஆனால், அவர் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார். ஆமாம் யேகோவா  எப்படி இருந் தாரோ அப்படியே தான் இருக்கிறார். 
நான் கற்பனை செய்கிறேன். அவன் நினைத்திருப்பான் “நான் எப்போதாவது அங்கே நிறுத்தப்பட்டிருந்தால் ஏனெனில்  அவர்கள் தீர்க்கதரிசிகளே! அவர்கள்  எப்படியும் என்னை ஆசிர் வதித்திருப்பார்கள்! அவர்கள் நிச்சயமாக என்னை ஆசிர்வதித் திருப்பார்கள்!  நான் குணமாகிருப்பேன். ஆனால், இப்போது எல்லாம் முடிந்து விட்டது. அற்புதங்களின் நாட்கள் எல்லாம் கடந்து விட்டன. எனவே இதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது. நான் நினைக்கிறேன். ஆனால் இங்கு நான் பார்வை யற்றவனாக இருக்கிறேன். “
அப்போது காற்று வீசி அசைந்தது, பர்திமேயு தன்னை ஒரு வஸ்திரத்திற்க்குள் மூடிக் கொண்டான். இன்னும் அவன் இன்னொரு கதையை பற்றி சிந்திக்க தொடங்கினான், ஒரு நாள் சிறந்த யோசுவா அவன் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து நூறு அல்லது இருநூறு கெஜம் தூரத்தில், இஸ்ரவேலர்கள் அங்கே தான் மிகப்பெரிய நதியை அவர்களின் பெரிய இளவரசனாகிய யோசுவாவால் கடந்தனர்.
44. அதன்பின்பு அவனுக்கு மற்றுமொரு கதை நினைவுக்கு வந்தது, இஸ்ரவேலர்கள் அங்கே பாளையத்தில் தங்கியிருக்கும் பொழுது, தேவனின் பெரிய அக்கினி ஸஂதம்பத்தின் மேலே நிழலிடபட்டது. ஒரு நாள், யோசுவா, பெரிய படைத்தளபதி, எரிகோவின் சுவர்களை எப்படி வெளியே எடுப்பது என்பது பற்றி திட்டமிட வெளியே பார்க்க சென்றார். அவர் அங்கு மிங்கும் நடந்து கொண்டிருந்தபோது, அப்போது வெளியே யாரோ ஒருவர் அவரைச் சந்திப்பதற்கு இருப்பதைக் கண்டார். அவரும், மற்றொரு மாவீரர். யோசுவா தன் வாளை இழுத்தார், ஏனெனில் அவரும் ஒரு போர்வீரர். அவன் தனது வாளை மேலே சுழற்றிச் சொன்னார், "நீர் எங்களுக்காக இருக்கிறீரா, அல்லது நீர் எங்கள் எதிரிகளுக்காகவா?"
பின்னர் அந்த பெரிய மனிதர் தனது வாளை இழுத்தார், மின்னல் பறந்தது! அது முடிவடைகிறது. அவர் சொன்னார், “நான் கர்த்தருடைய சர்வ சேனைகளின் தலைவன்!. நான் தான் ஆணஂடவரின் படை தளபதி."
பெரிய வலிமைமிக்க யோசுவா தனது கேடயத்தை கீழே எறிந்தார், அவரது வாளை கீழே எறிந்தார், பிறகு தலைக் கவசத்தை கழற்றி, அவருடைய  காலில் விழுந்தார்.
45. ஓ, “நான் அந்த நாட்களில் வாழ்ந்திருந்தேனேனால் நானும் அவருடைய கால்களுக்கு முன்பாக விழுந்திருப்பேன் என்று இப்படி அவன் சொல்லியிருக்கலாம்” ஆனால், அவனுக்கு கொஞ்சம் தெரிந்திருக்கலாம். அதே சேனைகளின் கர்த்தர் அவனிடமிருந்து நூறு கெஜத்திற்கும் குறைவான தொலைவில், அதே  சேனை தலைவன். இந்த விஷயங்களை பற்றி அவன் யோசித்து கொண்டிருந்த போது…   
இன்று  நீங்கள் வழக்கமாக தேவனைப் பற்றி நினைக்கும் போது, அதாவது நீங்கள் வேறொன்றைப் பற்றி பொதுவாக நினைக்கும் போது, அல்ல‌து உலக விஷயங்களில் எப்படி நிறைய பணம் சம்பாதிக்க போகிறோம், அல்லது  எந்த வகை யான பெரிய ஐக்கிய அமைப்பை உருவாக்க போகிறோம் என்பது போன்ற முக்கியமான விஷயம்  தான்  இன்று உலகத்தில்   இருக்கிறது.‌  நாம் தேவனுக்கு பதிலாக உலக விஷயங்களில் நம்முடைய மனதை வைக்கிறோம். 
நாம் இப்போது தேவனைப் பற்றி சிந்திக்கலாமா. வேதாகமம் சொல்கிறது “நற்கீர்த்தி உள்ளவைகள் எவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ, அவைகளையே சிந்தித்து கொண்டி ருங்கள்.”ஆனால் நம்முடைய மனமோ எங்கெங்கோ உலாவுகிறது.  மேலும் முதல் காரியம் உங்களுக்கு தெரியுமா,  ‌நாம் ஏதோ ஒரு இடத்தில் தவறுகிறோம்,  நாம் மற்ற காரியங்களை குறித்து சிந்தித்து கொண்டிருக்கிறோம். இயேசுவை நம்முடைய இருதயத் திலும் நம்முடைய சிந்தனை யிலும்  இரவும் பகலும் மற்றும் நாள் முழுவதும் அவரையே‌ மனதில் வைத்திருப்போம். அதுதான் வழி!.        
46. அவன் அதுபற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது,  ஒரு சத்தத்தை  கேட்டான். அது விநோதமாக இருந்தது. இயேசு எங்கிருந்தாலும் அங்கு தான் பெரிய சத்தம் இருக்கும். அது  ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், அது பொதுவாக இருக்கிறது. மேலும் பெரிய சத்தம் உள்ளேயிருந்து வந்தது. முதல் விஷயம், அந்த வாயிற் கதவு வெடித்துச் சிதறியது, மேலும்... ஒரு பெரும் சத்தம் கேட்டது, ஜனங்கள்  ஓடுகிறார்கள், மற்றும் சிலர் உரத்த சத்தமிட்டு "ஓசன்னா, கலிலேயா தீர்க்கதரிசிக்கு ஓசன்னா," என்று பெண்கள், மற்றும் சில ஆண்கள் சொல்லி கொண்டு வந்தார்கள்.
அப்போது அவன் சில சப்தங்களையும், கேலியையும் அவரைப் பற்றி சொல்வதையும் கேட்க முடிந்தது. "நீங்கள் ஒன்றும் இல்லை போலியானவர்" என்று அழுகிய முட்டைகளும் பழங்களும் அவர் மீது  வீசப்பட்டது.
அவன் அந்த போதகரைக் குறித்து சிறிது காலத்திற்கு முன்பு,  அங்குள்ள ஆலோசனை சங்கத்தில்  “நீர் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்கிறீர்”, நாங்கள் கேள்விப்படுகிறோம்,  நீர் இறந்த மனிதனை கல்லறையிலிருந்து எழுப்பினீர் என்றும், நீர் போலியனவர், நாங்கள் உம்மை அறிவோம். உங்கள் சீடர்கள் அந்த மனிதனை அங்கே கிடத்தினார்கள் அது ஒன்றும் இல்லை அது போலி தான். இறந்தவர்களை உங்களால் எழுப்ப முடிந்தால், இங்கே மேலே ஒரு கல்லறை எங்களுக்கு இருக்கிறது. வாருங்கள், அந்த கல்லறையில் இருப்பவர்களை எழுப்புங்கள், நாங்கள் உம்மை நம்புவோம் என்றார்கள்.”
47. இயேசு பிசாசை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. அவர் ஒருபோதும் அப்படி செய்ததில்லை. அதே பிசாசு ஒருமுறை இயேசுவை நோக்கி “நீர் தேவனுடைய குமாரனா னால்  கல்லுகளை அப்பமாக மாற்றும்படி கட்டளையிடும்”  என்றது. அவர் அதை செய்திருக்க முடியும்.
   ஒரு நாள்  ஆலோசனை சங்கத்தில் ஒருவன் ஒரு துணியால் அவரது(இயேசு)  முகம் மற்றும் கண்களை சுற்றி தலையில்  குச்சியால் அடித்தான். பரியாசம் செய்தவர்கள்‌ “நீர் ஒரு தீர்க்கதரிசி என்றால், உம்மை அடித்தது யார்? என்று எங்களிடம் சொல்லுங்கள்” என்றனர். பாருங்கள் அதே பழைய பிசாசு.
அதே பழைய பிசாசு  தான்  இன்றும் வாழ்கிறது. “இங்கே இறங்கி வந்து இந்த வயதான மனிதனை குணப்படுத்துங்கள், அந்த மூலையில் இருக்கிறவரை குணமாக்குங்கள், அங்கே செல்லுங்கள், அங்கே சென்று அவர்களையும் குணப்படுத் துங்கள்,   இவர்களையும் குணப்படுத்துங்கள், என்பது நாங்கள்  பிசாசுகளின்  கட்டளைகளை  ஒரு போதும்  ஏற்பதில்லை. இயேசு சொன்னார், “நான்  என்ன செய்ய வேண்டும் என்று பிதா எனக்கு காண்பிக்கும் வரை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார். நானும் கிரியை செய்து வருகிறேன்”. மேலும் அவர் நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவராக  இருக்கிறார். 
எனவே யாராவது இப்படி ஏதாவதொன்றை சொல்வதை கேட்டால் விலகிச் செல்லுங்கள்! அதே பிசாசு தான்  நாம் சாத்தானிடமிருந்து கட்டளைகளை பெறுவதில்லை!  நாம் மேலே இருந்து வருவதை தான் ஏற்கிறோம். அவர் என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு காட்டும் போது அதை செய்வோம். இங்கு கடைசியில் இருக்கிற திரு. ஜோன்ஸ் குணமடைய வேண்டும் என அவர் விரும்பினால், தமது ஊழியரிடம் கூறுவார். அவர் அங்கு சென்று இவரை குணமடையச் செய்வார். (அது சரியே). அவருடைய கட்டளை யின் படிதான். பிதாவானவர் செய்ய குமாரன் காண்கிற தெதுவோ அதையேயன்றி, வேறோன்றையும் செய்ய மாட்டார். (யோவான்: 5.19).
48. இப்போது, அந்த ஆசாரியன் அவரைக் கூப்பிடுவதை என்னால் கேட்க முடிகிறது. “நீர் ஒன்றும் கிடையாது, ஆனால் ஒரு போலி.”
இயேசு, இந்த உலகத்தின் பாவங்களையும், சாபங்களையும் தன்னில் ஏற்றுக் கொண்டு அவர் சிலுவைக்கு நேராக சென்று கொண்டிருந்தார். எருசலேம் வரையிலும் கொண்டு செல்லப் பட்டு அங்குள்ள பாவமுள்ள மனிதர்களான புறஜாதியாரின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் அவரை சிலுவையில்  அறைய வேண்டும் என்று இருந்தார்கள். எல்லா பாரங்களுக் காகவும், மற்றும் பூமியில் இதுவரை செய்யப்படாத எல்லா பாவத்திற்காகவும் அல்லது எப்போதும் செய்யப்படும் பாவங் களுக்காகவும் எப்போதும் செய்யப்படும் பாவத்தின் சுமைகளும் அவர் மேல் இருந்தது. அங்கே அவர்கள் அவரைப் பார்த்து சிரித்தார்கள். அவரை வைத்து வேடிக்கை செய்தார்கள் மற்ற வர்களோ “தாவீதின் குமாரனான‌ கலிலேயாவின் தீர்க்க தரிசிக்கு ஓசன்னா” என்று  சத்தமிட்டார்கள்.
டெக்ஸாஸில்  பியூமன்டிலும் இன்றும் அதே நிலைமை தான். அவர்களில் சிலர் சிரித்தும், கேலியும் செய்வார்கள். சிலர் இந்த கதையை நம்புவார்கள்.‌ அது எப்போதுமே அப்படித்தான்  இருக்கிறது. முடிவு வரும் வரை அது எப்போதுமே அப்படித் தான் இருக்கும். அது அப்படியே இருக்கும், ஒரு கலப்புக் கூட்டம்.
49. ஒவ்வொரு எழுப்புதலும் இரட்டையர்களை கொண்டு வருகிறது. யாக்கோபு- அல்லது ஈசாக்கின் இரண்டு பிள்ளைகளும்  நமக்கு முன்னுதாரனமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு எழுப்புதல் வரும் போது, ஒரு ஏசா பிறக்கிறார் மற்றுமொரு யாக்கோபு பிறக்கிறார். இந்த உலகத்தில் மதவாதியாகிய ஒருவன் பயிற்றங்கூழையும், மற்றும் சில பாடசாலையின் அனுபவங் களையும் பெறுகிறான். மற்றவன்  அந்த பிறப்புரிமையை‌‌ பெற வேண்டும் எனவும், எதையும் பொருட்படுத்தாமல் அதை அவன் எவ்வாராயினும் பெற வேண்டும் என விரும்புகிறான். அது  அவனை ஒரு பரிசுத்த உருளையாகவோ அல்லது வேறு என்னவாயினும் தனது பிறப்புரிமையை பெற வேண்டும். அதை பற்றி ஒரு கவலையும் இல்லை. 
இப்போது உள்ள ஜனங்களுக்கு இதுதான் விஷயம். அவர்கள் அந்த பிறப்புரிமையை குறித்து  பயப்படுகிறார்கள். ஓ! அவர்கள் இதை எப்படி வெறுக்கிறார்கள். ஆனால், அது இரட்டையர்களை உருவாக்குகிறது. இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் மிகவும் மத ஆர்வம் உள்ளவர்கள் நல்ல காரியங்களை செய்கிறார்கள். ஆனால், பிறப்புரிமையை குறித்து எந்த கவலையும் படுவதில்லை. உலகம் தொடங்கியதிலிருந்து அந்த இரண்டு பிரிவுகளும் போராடி வருகின்றன. அவர்கள் இப்போதே ஒரு தலைவராக வர‌ தயாராக இருக்கிறார்கள். அதைப்பற்றி  இயேசு இப்படி சொன்னார் “அவர்கள்  மிகவும் அருகில் இருக்கிறார்கள். கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள்”. அது உண்மையாயிருக் கிறது. கவனியுங்கள். நாம்  எப்படிப்பட்ட ஏமாற்று பவர்கள் காலத்தில் வாழ்ந்து  கொண்டிருக்கிறோம்.
வார்த்தையுடன்  இணைந்திருங்கள் சகோதரரே. அந்த வார்த் தையை விட்டு விடாதிருங்கள். அது தான் சரி. அந்த வார்த்தை தனக்குதானே  பேசும்.
50.  இப்பொழுது,‌ அந்த ஏழை வயதான பர்திமேயு கீழிருந்து எழுந்திருக்க முயற்சிப்பதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். 
“இதெல்லாம் எதைப்பற்றியது?”
“அமைதியாக இரு.”
“அது என்ன சத்தமாயிருக்கிறது? ‌என்ன.. யாராகிலும் எதை யாவது செய்திருக்கிறர்களா?”
  ஒருவரும் அவனுக்கு உதவவில்லை. அவன் ஒரு குருடனாக இருந்தான். ஒரு ஏழ்மையான, வயதான பார்வையற்றவனை  சுற்றிலும் உள்ளவர்கள் தள்ளுவதை நான் பார்க்க வெறுக்கிறேன். அதன்பின்பு  முதல் விஷயம் உங்களுக்கு தெரியும்,‌‌ அங்கே யாராவது ஒருவர்  இருந்திருப் பார்கள் என நான் நினைத்துப் பார்க்கிறேன். அவனருகில் ஒரு இளம்பெண் இருந்திருக்க வேண்டும். அந்த வயதானவனை பின்னால் தள்ளி விட்டார்கள். அவன் தனது  முழங்காலை ஊன்றி எழுந்திருக்க முயன்றான். அவன் பழைய கந்தல் ஆடையை உடுத்தியிருந்தான். அவள் அவனுக்கு தன்னால் முயன்ற அளவுக்கு உதவி செய்தாள். அவள்  “ஐயா நீங்கள் குருடராக இருப்பதை காண்கிறேன்” என்றாள்.
“ஆமாம், ஸ்திரியே. நீங்கள் பார்வையற்றவரிடம்  மிகவும் கனிவாக இருக்கிறீர்கள்.”
“ஆமாம், பார்வையற்றவர்களுக்கோ அல்லது உதவி தேவைப் படுபவர்களுக்கோ உதவும் ஒரு உணர்வு இருக்க வேண்டும்.”
“ஸ்திரியே, நீங்கள் சொல்வீர்களா? யாரும் என்னிடம் சொல்லவில்லை. நான் கேட்கும் சத்தம்? அது என்ன?  நான் அனேக   ஆண்டுகளாக இங்குதான் இருக்கிறேன், இதுவரையில்  அத்தகைய சத்தத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஒவ்வொருவரும் ஓவ்வொன்றை  சொல்லுகிறார்கள், வேறு சிலர் வேறு காரியங்களை சொல்லுகிறார்கள்.”
“ஓ, ஐயா தீர்க்கதரிசியான‌‌ நாசரேத்தின் இயேசு கடந்து செல்கிறார் ‌என்பதை நீங்கள் ஒரு போதும் அறியவில்லையா?”
 “யார்?”
“ நாசரேத்தின் இயேசு” 
“ ஏன்? யார் அந்த  நாசரேத்தின் இயேசு”
“ நீங்கள் ஒரு யூதர் தானே? இல்லையா?”
 “ஓ‌, ஆமாம் நான் யூதன் …”
51. “நல்லது,  நீங்கள் வேத வசனங்களில் உள்ள  நம்முடைய தேவனாகிய கர்த்தர் மோசேயை போன்ற ஒரு தீர்க்கதரிசியை எழுப்பபோகிறார். அவரே மேசியா என்று அறிந்திருக்க‌ வில்லையா.”
“ஓ, ஆமாம் நான் அந்த காரியம் பற்றி தான் இப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். ஓ ஆமாம், அவர்தான் தாவீதின் குமாரானாக‌ இருப்பார்.”
“நல்லது சரி அவர் தான் கடந்து செல்கிறாரா”
“அவர் பெயர் என்ன?”
“நாசரேத்தின் இயேசு.  அவர் தான் அந்த  மேசியா  அவர் பார்வையற்றவர்களுக்கு பார்வை  கொடுப்பதை  நான் கண்டு இருக்கிறேன். ஓ, இன்று காலை நீங்கள் அவரை பார்த்திருக்க வேண்டும். அவர் நகரின் தெற்கு பகுதிக்கு வந்த போது அவர்தான் மேசியா என்பதை அவர் நிச்சயமாக நிருபித்தார். நீங்கள் அவரை பார்த்திருக்க வேண்டும். இந்த நகரத்தில் உள்ள சகேயு என்ற சிறிய நபரை உங்களுக்கு  நினைவிருக்கிறதா?”
“ஓ, ஆம், ரெபேக்காவின் கணவர்.”
“ஆமாம்.”
“அவர் எனக்கு பல முறை பிச்சை கொடுத்திருக்கிறார். அவர் ஒரு வியாபாரி.”
52. “ஊம்… நல்லது, சரிதான் அவர் பார்ப்பதற்கு மிகவும் குள்ளமானவராக இருப்பார். உங்களுக்கு தெரியும்?.  ரெபேக் காலும்  இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறாள்.  நானும் ‌ இந்த கர்த்தராகிய இயேசுவின் சீஷி மற்றும் நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கவும், அவருடைய சீஷர்களாகவும் மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் தயவாய் நடந்து கொள்ளவும் ‌‌உண்மையாய் இருக்கவும் கற்பிக்கப்படுகிறோம். அதை தான் எல்லா கிறிஸ்தவர்களும் செய்கிறார்கள் மற்றும் மரியாதை  காட்டுகிறார்கள். அதனால்தான் நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டுமென  நான் விரும்புகிறேன். ஐயா,  நான் இன்று காலை அவர்களோடு தான் இருந்தேன்.  ஏனென்றால் எங்களுக்கு தெரியும் அவர் வருவாரென்று. ரெபேக்காள் நீண்ட நேரமாக ஜெபம் செய்து கொண்டிருந்தாள் தன்னுடைய சகேயுவுக்காக…
அவர் ஒரு நல்ல மனிதர்.  ஆனால், அவர் ஒரு   தன்னுடைய  பானியில்  இருந்தார். ஏனெனில் அவர் ஜெப ஆலய காரியங் களில் விலகி இருந்தார்.  அங்குள்ள மதகுரு ரபி கபின்ஸ்கியை பற்றி நீங்கள் அறிவீர்கள். அவர்- அவருக்கு நாசரேத்தின் இயேசுவை‌ உண்மையில் பிடிக்கவில்லை. அவர்கள் அங்கே ஒரு ஆலோசனை சங்கம் வைத்திருக்கிறார்கள் . அவர்கள் இன்று காலையில்  நகரத்தில் இயேசுவை சந்தித்து அற்புதங்கள் செய்வதில் இருந்து தடுத்து - அவரை வெளியேற்றினார்கள், எனவே இயேசுவும் வெளியேறினார்.
“ஆனால் உங்களுக்கு தெரியுமா? ரெபெக்காள்‌ மிகுந்த  பெலமுள்ள ஜெபம் செய்தாள். தனது சகேயு கர்த்தராகிய‌ இயேசுவை மேசியா என்று நம்பும் படிக்கும் மேலும்  மேசியா ‌செய்த எல்லாவற்றையும் அவள் சொன்னாள். மற்றும்  அவர் இருதயத்தின் ரகசியங்களை‌ எப்படி வெளிப்படுத்து கிறவராயிருக்கிறார் என்றும், மேலும் பலவற்றை சகேயுவிடம் சொன்னாள். உங்களுக்கு தெரியுமா, சகேயு என்ன‌ செய்தார் என்று? அவர்  குள்ளமானவராக  இருந்ததால் அந்த நுழைவு வாயிலுக்கு மிகவும் சீக்கிரமாக வந்து விட்டார். உங்களுக்கு தெரியுமா? இப்போது, சகேயு மிகக் குள்ளமானவராக இருந்தார். ஆகவே, நான் நினைக்கிறேன்‌… ரெபெக்காவும் நானும் ஒருவருக்கொருவர் உறுதிமொழி செய்து கொண்டோம். அவர் இப்படியாக ஜெபம் செய்திருக்கலாம் என்று.  “இவர் மேசியா வாக இருந்தால் அவர் அந்த மேசியாவை அங்கீகரிப்பார்.”
53.“ஆகையால் நான் சகேயுவை கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் அல்லேலுயா தெருவில் இருந்து  மகிமையின் சாலை வரையில்  ஓடி வந்தார். உங்களுக்கு தெரியுமா அங்கே அத்தி மரங்கள் அதிகம் இருக்கும் மற்றொரு வார்த்தையில் காட்டத்தி மரம்? ”சகேயு அந்த மரத்திலே ஏறினான். பிறகு அவன் சொன்னான் “இங்கே ஒரு கிளையிலே நான் உட்கார்ந்து கொள்ள எனக்கு இடம் கிடைக்கும் நான் இங்கேயே உட்கார்ந்திருப்பேன், ஒரு கால் இந்த பக்கமாகவும் மற்றொரு கால் அந்த பக்கமாகவும் போட்டு உட்கார்ந்து கொள்வேன். அவர்(இயேசு)  இந்த பக்கம் திரும்பும் போது நான் அவரை பார்ப்பேன். ஏனெனில் அவர் எப்போதும் இந்த அல்லேலூயா தெரு பரிசுத்த சாலையின் வழியாக தான் நடந்து போவார். ‌அவர்களுடன் ‌ எப்போதும் இந்த வழியில் தான் தங்கி செல்வார். ஆகையால், அங்கே  நான் அவரைச்  சந்திப்பேன் என்று எனக்கு தெரியும். எனவே அவன் அந்த மரக்கிளைகளின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.”
 இப்போதும், அநேக ஜனங்கள் இந்த இரவில் இங்கேயும் வந்திருக்கின்றனர். தேவனின் வழியும் உங்களுடைய வழியும் ஒன்றாக இருக்க  வேண்டும், அந்த வழிக்கு இன்று ஒரு முடிவு எடுக்கப்பட‌ வேண்டும். இன்று இரவு இங்கேயும் நீங்கள் அதே நிலையில் இருக்கலாம். 
54.“நல்லது, அவன் அங்கு யோசித்து கொண்டிருக்க வேண்டும். சற்று நேரத்திற்கு முன்பு என்ன நடந்தது என்று அவர் சொல்லி கொண்டிருந்தாரே..”
“அதாவது ஆலோசனை சங்கத்தார் அவரை அந்த மண்டபத் திற்குள் சென்று கூட்டம் நடத்தக் கூடாது என்று சொன்னார்கள். ஆகவே அவன் அந்த மரத்தில் ஏறினான். மேலும் சகேயு கூறினான்.‌ ரெபேக்கா என்னிடம் சொன்னாள். “இந்த மனிதர், (இயேசு) இருதயத்தின் எண்ணங்களை அறிய கூடியவர், இப்போது எனக்கு நம்பிக்கை இல்லை.ரபி கவின்ஸ்கி என்னுடைய  போதகர், அது ஒருபோதும் நடக்காது என்றார்.”  இங்கு ஒரு ரபி கவின்ஸ்கி  என்பவர் இருந்தால் நீங்கள் என்னை மன்னியுங்கள். நான் இதை ஒரு எடுத்துக்காட்டாக பயன்படுத்துகின்றேன். பாருங்கள்? அல்லது  நான் மாநிலத்தின் போதக தலைவரோ,  அல்லது  ஏதாவது ஒரு மாவட்ட  கண் காணிப்பாளரோ, அல்லது, உங்களுக்கு தெரியும் அப்படி ஏதாவது ஒன்று. நான் என்ன  சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கு புரிகிறதா.
பிறகு அவன் “அது எவ்வாறு இருப்பினும் அவன்  அந்த மரத்தில் ஏறினான்..” (மருத்துவர்.Ph.D.,LL.D., அல்லது ஏதாவது ஒன்று படித்தவர், உங்களுக்கு தெரியும்.)  
 	“அவன் மரத்தில் ஏறி இருக்கிறான். அவன் சொன்னான். ‌ உங்களுக்கு தெரியும்? எனக்கு நிச்சயமாக தெரியும். அதாவது அந்த மனிதருக்கு என்னைப்பற்றி ஒன்றும் தெரியாது, ஆகவே அந்த மரத்தில் உள்ள எல்லா இலைகளையும் பிடித்து தன்னை சுற்றி இருக்குமாறு மூடிக் கொண்டான்.  அவன்  தன்னையே  ஏமாற்றி கொண்டான். அவன் ஒரு சிறிய பாவமான‌ மனிதன், எப்படியோ அந்த கிளையின்‌ முனையில் உட்கார்ந்து கொண்டான். உங்களுக்கும் தெரியும், இப்படித்தான் அவன் அந்த இலையால் ஒரு சிறிய  இடைவெளி  விட்டான். அதாவது அவன்-அது  ஒரு கதவை போல், அதன் வழியாக அவன் அவரை (இயேசு) அந்த அல்லேலுயா தெருவிற்கு திரும்பும் போது பார்க்க முடியும். மேலும் அந்த மகிமையின் சாலையில் ஏறும் போதும் அந்த சாலையின் ஓரத்தில்  மிக அருகாமையில் இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகும், அவன்  அங்கேயே இருந்தான்.” 
அவள் சொன்னாள் “நீங்கள் அவருடைய சாட்சிகளை கேட்டிருக்க வேண்டும் ஐயா.”
55. இயேசு அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். இந்த வயதான பார்வையற்றவர் கதையை கேட்டு கொண்டி ருந்தார். ஏனென்றால், மேசியா என்னவெல்லாம் செய் வார் என்பதை அவருடைய அம்மா அவருக்கு சொல்லி இருந்தார். எனவே அவன் இந்த கதைகளை கேட்டு கொண்டி ருந்தான். இயேசு நடந்து வந்து கொண்டிருந்தார். அவர்கள் அவரை நோக்கி பொருட்களை எறிந்து அவரை கேலி செய்தும், மற்றும் அவரிடம் சொன்னார்கள்  இறந்தவரை எழுப்புங்கள் அதில் எந்த விதமான ஏமாற்றுதலும் அதுவரை இல்லை என்பதை அவர்கள் பார்த்தார்கள். 
பின்பு - மேலும் அவர்கள் சொன்னது போல் “சகேயு இந்த இலைகளின் கீழ் மறைந்து இருப்பதாக சொல்லி இருந்தான். மேலும் அவன் ஒரு  சிறிய கதவை போல இடம்  விட்டிருந்தான். அதன்பின்பு  இப்போது, உங்களுக்கு தெரியும். நான் அவர் உள்ளே வரும் போது அவர்களை எட்டிப் பார்ப்பேன், நான் அவரை பார்த்து விடுவேன் என்று சொன்னான். எல்லோரும் அவரை பார்த்து கொண்டு இருப்ப தால் நானும் என்னுடைய கவுரவத்திற்காக  அவரை நான் பார்ப்பேன் அவரை நானும் பார்ப்பேன்.” எனவே அவர் தன்னை காணாதபடி அவன் மறைத்து கொண்டான்.
 “அவன் தனது திரையை  உயர்த்தினான்.  அதன்பின் அங்கே இயேசுவும், ஒரு பெண்ணும் வெளியே வந்தனர்.  மேலும் மிகப் பெரிய அப்போஸ்தலனாகிய சீமோன் பேதுருவும் அவருடனே கூட‌‌ பதினொரு‌ சீஷர்களும்‌ வந்து கொண்டிருந் தனர். அவர் சொன்னார், என்னை  மன்னியுங்கள். தீர்க்கதரிசி மிகவும் சோர்வாக இருக்கிறார். இப்போது நாங்கள் அவரை கூட்டிக் கொண்டு செல்கிறோம். அவர்-அவரால் இப்போது இங்கு கூட்டத்தை நடத்த முடியவில்லை. ஆகவே நாங்கள் இந்த நகரத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்றார்.”
56. “அப்போது சொன்னார் அவர் பார்த்து கொண்டிருந்தார். சில நிமிடங்களில் அவர் வந்து தனது திரையை கொஞ்சம் உயர்த்தி பார்த்து கொண்டிருந்தார்.  உங்களுக்கு தெரியும், நானும்  அந்த சக மனிதனின் தோற்றத்தை போலவே  இருக்கிறேன்”. அங்கே இன்னொன்றும் இருக்கிறது. நீங்கள் ஒருபோதும்  இயேசுவை நேராக பார்க்க முடியாது இனிமேல் அப்படி பார்ப்பது அதே மாதிரியாக அந்த உணர்வில் முடியாது. மேலும் அதைக்குறித்து  ஏதாவது, நீங்கள் அதை பிடித்துக் கொள்ளுங்கள். 
“எனவே அவன் தனது சிறிய இலையை இப்படியாக எடுத்து உயர்த்தி சொன்னான், ஊம் “இந்த சமயத்தில் நான் அவரை முட்டாளாக்கி இருப்பேன், நான் மரத்தில் தான் இருந்தேன். மேலும் இந்த மனிதர் தானே ஜனங்களின்  இருதயங்களின்  ரகசியங்களையும்?. ஊம்...  நல்லது,  அவர்- அவர் ஒருவேளை  தீர்க்கதரிசியாக இருக்கலாம், எனக்கும் தெரியும்  இப்படியாக அவன் எண்ணி சந்தோஷப்பட்டு  கொண்டிருந்தான்.”
“அவர் மரத்தின் அடியில் நின்று மேலே நோக்கி அவனைப் பார்த்து சொன்னார், “ சகேயுவே கீழே  இறங்கி  வா” என்றார். அவன் மரத்தில் இருப்பதை மட்டுமல்ல, அவனுடைய பெயரையும் அவர் அறிந்திருந்தார்.”
 “ஓ!”  பர்திமேயு  சொன்னான், “அது அவர் தான். அவர் தான் தாவீதின் குமாரன்.  ஓ, இயேசுவே ”தாவீதின் குமாரனே”, என்மேல் இரங்கும்  என்றான்.” அங்கே அவன் போகும்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ள அந்த கூட்டத்தில் சுமார் ஏழு அல்லது எட்டாயிரம் பேர் சத்தமிட்டு கொண்டிருந்தார்கள்.  ஒவ்வொருவரும் சத்தமிட்டனர் “இயேசுவே, தாவீதின் குமாரனே” எனக்கு இரங்கும் எனக்கு இரங்கும்.“நீர்தான் தாவீதின் குமாரனாய் தீர்க்கதரிசியாய் வரவிருக்கிறவர் என நான் நம்புகிறேன். ஓ  “தாவீதின் குமாரனே. 
57. இப்போது, அவன் அவரைத் தொட முடியவில்லை. (ஒலி நாடாவில் காலியிடம்-ஆசி) என்னால் தொடர்ந்து எளிதாகப் பிரங்கிக்க முடியும். ஓ, தேவனிடம் உள்ள   நம்பிக்கை அதை செய்யும்.  இது யாராக இருக்கும், இந்த போதகர் (Bishop), மாவட்ட பிரஸ்பைட்டர் (presbyter), டாக்டர் எல்.எல்.டி. ஜோன்ஸ் (Dr. LL.D. Jones)? இல்லை ஐயா. ஒரு பிச்சைக்காரன், கந்தல், குருடன், ஆனால் போதுமான நம்பிக்கை உள்ளவன் .
அவர் மீது இருந்த பாரம் அனைத்தையும் அவர் எதிர்கொள்வார்.  சந்தேகமில்லை. ஆனால், அவரது ஆடை களில் அழுகிய பழங்களின் துர்நாற்றம் இருந்தது, மற்றும் நாம்   விரும்பும் பொருட்கள்–காய்கறிகளையும், அவரின் மீது வீசினார்கள். ஆனால் அவர் முன்னோக்கி சென்றார். அவர் கல்வாரியை எதிர்கொள்வதற்கு, முழு உலகமும் அவரது தோள் களில் கிடந்தது. ஆனால் ஒரு குருடான பிச்சைக்காரனின் விசுவாசம் அவரை தடுத்து நிறுத்தியது. ஆமென். அதேபோல் யோசுவாவுக்காக சூரியனை நிறுத்திய சர்வ வல்ல சேனைகளின் கர்த்தரின் படை, யோசுவாவின் விசுவாசத்தால் அந்தச் சூ-ரி-ய-னை (s-u-n) நிறுத்தியது போல் இந்த பார்வையற்ற பர்திமேயு அந்தக் கு-மா—ர-னை  (s-o-n) விசுவாசத்தின் மூலம் நிறுத்தினான். அதே விசுவாசம் அவரை மகிமையிலிருந்து கொண்டு வரும். அவர் சூரிய குடும்பத்தையும் (Solar system) மற்றும் பிரபஞ்சத்தையும் (Universe) கட்டுப்படுத்துகிறார், இன்றும் இந்த கூடாரத்தில்  இரவு நேரத்தில் கொண்டு வரும் அந்த  குழந்தை போன்ற - விசுவாசம்.
58. அவர் நின்று சுற்றிப் பார்த்தார். அவர்கள் அவனை அழைத்து வந்தனர். அவர் சொன்னார்  “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது.” ஓ, என்னே. அப்போதே  அவர் நடந்து சென்றார். 
அந்தச் சிறு பெண்  அவனைக் கையால் பிடித்துக்கொண்டு,  அவள் கூறியிருக்க வேண்டும், “நீங்கள் அவர் சொன்னதைக் கேட்டீர்களா?”
“ஓ, ஆமாம். ஓ, யோசித்தேன் எனக்கு பார்வை கிடைக்கு மென்று அவர் என்னிடம் சொன்னார்.”
சாலையில் அவர் சென்று கொண்டிருந்தார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு  முன்னேறி மலையின் மீது சென்று கொண்டிருந்தார். அவர் சொன்னார்,“உன் பார்வையைப் பெற்றுக்கொள். உன் விசுவாசம் உன்னைக் இரட்சித்தது.”
அதே போலவே உங்கள் விசுவாசம் உங்களை நரகத்தி லிருந்து காப்பாற்றுகிறது. அதே கிரேக்க வார்த்தை "சோசோ" (Sozo) பயன்படுத்தப்பட்டது. ஆம், அதே நேரத்தில்-ஒவ்வொரு முறையும் அது மொழிபெயர்க்கப்படும்போதும், மாம்சரீதியாக இரட்சிக்கப்பட்டது அல்லது ஆவிக்குரியரீதியில் இரட்சிக்கப் பட்டது, அதே விசுவாசம் அதையே செய்கிறது. "உன் விசுவாசம் உன்னைக் இரட்சித்தது."
ஓ, அவனுடைய விசுவாசம் இயேசுவைத் தடுத்து நிறுத்தியது. எனவே அவன் கூறினான், "அவர் என்னிடம் சொன்னார்… அவர்தான் மேசியா. அவரிடம் இருந்தது... அவரிடம் மேசியாக்குரிய எல்லா அடையாளங்கள் உள்ளன, என்றும்  நான் என் பார்வையைப் பெறுவேன் என்றும் என்னிடம் கூறினார். நான்  பார்வைப்  பெறுவதில் திருப்தி அடைகிறேன் அது. ஓ, நான் திருப்தி அடைகிறேன். நான் திருப்தியாக இருக்கிறேன்." அவன் சொல்ல ஆரம்பிக்கிறான்…
நேரடியாக ஒரு நிழலைப் பார்த்தான். "ஊம், ஓ, எனக்கு பார்வை கிடைத்தது." அப்போது அவன் இறங்கி சாலையில் சென்றான். அவர் எதையாவது  கூறும்போதும், அதை அப்படியே நம்புங்கள். 
59. நான் ஒரு சிறிய கதையைப் படித்தேன் (ஒருவேளை கற்பனை கதை, இல்லாமல் இருக்கலாம், எனக்குத் தெரியாது) பர்திமேயு பற்றியது. அதில் அவனுடைய மனைவியும் ஒரு சிறு குழந்தையும் இருப்பதாகவும், ஒரு இரவு அவருடைய மனைவிக்கு உடல்நிலை  சரியில்லை என்றும், அதனால் அவன் வெளியே சென்று, “யேகோவா தேவனே,   நான் உங்களுக்கு தரக்கூடிய  ஒரே காரியம்…” அவர்களிடம் மற்றவர்களை தன்னிடம் ஈர்க்கும் படியான ஒன்று இருந்தது என்றும் அதை பிச்சைக்காரர்கள் வைத்திருப்பார்கள். இந்தியாவில் உள்ள  பிச்சைக்காரர்கள் வைத்திருப்பதுபோல். இந்தியாவில் உள்ள  பிச்சைக்காரர்கள் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கவும் ஏதாவது கிடைக்க வேண்டியும் வைத்திருப்பார்கள். இல்லாவிட்டால், வழிப்போக்கரிடம், அவன் ஒரு காசைக்கூட(Coin) பெற முடியாது: எப்போதாவது, எப்படியும்  அதை பெறவேண்டி தான்.  அவர்கள் தங்களிடம் குட்டி குரங்குகள் வைத்திருப் பார்கள். அந்த குரங்கு ஒரு பையனை அடிக்கும்,  அப்போது அவன் அங்குமிங்கும்  ஓடுவது போல அலறுவது, அழுவதுபோல செய்வான்.  அவர்களுக்கு ஒரு நாகப்பாம்பு அல்லது பாம்பு வைத்திருப்பார்கள், அந்த சிறிய விலங்கு சண்டைபோட்டு கொணஂடிருக்கும், மேலும் அவர்கள்- எப்படியாவது பொழுது போக்குக்காக ஏதாவதெல்லாம், மற்றவர்களிடமி௫நஂது ஒரு காசை பெறுவதற்காகவே செய்வார்கள்.
எனவே, பர்திமேயுடம் இரண்டு சிறிய காட்டுபுறாக்கள் இருப்பதாகவும் அவைகள் ஒன்றின் மேல் ஒன்று விழும். அவன் சொன்னான், “யேகோவா தேவனே, என்னிடம் அதிகமாக ஒன்றும்  இல்லை. ஆனால் நீங்கள் என் மனைவியை வாழ அனுமதிப்பீர்களானால்… மருத்துவர் அவள் மரிக்க போகிறாள் என்று கூறி கை விட்டு விட்டார். எனக்கு அவள் மிகவும் தேவையுள்ளவள்.  நீங்கள் அவள் உயிரை காப்பாற்றினால், நாளை காலையில் என் இரண்டு காட்டுப்புறாக்களை பலியாக தருகிறேன்." என்றான்.
60. அதன் பின்பு அவனது மனைவி நலம் அடைந்தாள். அவன் அந்த  காட்டு புறாக்களை பலி செலுத்தினான். சில வாரங்களுக்கு பிறகு,  அவனுடைய சுருள் முடியுள்ள மகளுக்கு    ஒரு நாள்  இரவு தனது வாழ்நாளில் பார்த்திராத அளவுக்கு  மிகவும் கடுமையாக நோய்வாய்ப்பட்டாள், ஒரு சிறந்த மருத்துவர் மீண்டும் வந்து அவர் சொன்னார்“பர்திமேயு, அந்த குழந்தைக்கு வலிப்புநோய் (hysterics) இருந்திருக்கிறது. குழந்தை இறந்து விடும் என நினைக்கிறேன்” என்றார். 
"ஓ,”அவன் கேட்டான்  "நல்ல மருத்துவரே, நீங்கள் உறுதியாக சொல்கிறீர்களா?”
“என்னுடைய மருத்துவ  அனுபவத்தின் அடிப்படையில் சொல்லுகிறேன். குழந்தை இறந்து கொண்டிருக்கிறது. இப்போது., காய்ச்சல் ஒரு நரம்புப் பிடிப்புகளை இழுக்கிறது (spasm), மேலும் அதை சரியாக்க எதுவும் செய்ய முடியாது.
அதன் பின்னர் அவர் வீட்டின் பக்கவாட்டின்  வழியாக நிலவொளியில் திரும்பி சென்றார்., அவன் தனிமையாய் இ௫ப்பதை உணர்நஂதான். அவன் சொன்னான் “யேகோவா தேவனே எனக்குக்  ஒன்றை தவிர வேறு எதுவும் இல்லை.”
அதை எந்த வகையான நாய் என்று  இன்று  அழைக்கிறார்கள் என  தெரியவில்லை, அது குருடர்களை வழிநடத்துகிறது. நான் மறந்துவிட்டேன். [யாரோ ஒருவர் கூறுகிறார், “பார்க்கும்-கண் நாய்.”] பார்க்கும் கண் நாய்… சரி, அந்த நாளில் பார்வை யற்றவர்களை வழிநடத்தும் நாய்க்கு பதிலாக, அவர்களிடம் பார்வையற்றவர்களை வழிநடத்தும் ஆட்டுக்குட்டி இருந்தது.
61. ஆகவே   பர்திமேயு, அவர்கள் சொன்னார்கள் ஒரு – ஒரு ஆட்டுக்குட்டி அவனை வழிநடத்தியது, அவன் சொன்னான், “யேகோவா தேவனே, நான் என் சிறு மகளை மிகவும் நேசிக்கிறேன். நீர் அவளை நலம் பெறவும் மரிக்காமலும் இருக்க பணஂணிணால், நாளை நான் -ஆலயம் சென்று, நான் - அந்த ஆட்டுக்குட்டியை பலியாக உமக்குக் கொடுப்பேன்" என்றான். அவனுடை  சிறு மகள் குணமடைந்தாள்.
மறுநாள் காலை அவன் ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு அந்த-அந்த  ஆட்டை பலி செலுத்துவதற்காக சாலையில் சென்று கொண்டிருந்தான். ஆசாரியன் வெளியே வந்து, "நீ எங்கே போகிறாய், பர்திமேயு? என்றார்.
அவன் சொன்னான் “ஓ, ஆசாரியரே தேவனுடைய ஊழியக்காரரே நான் என் ஆட்டுக்குட்டியை தேவனுக்கு பலிசெலுத்த போகிறேன்.” அவன்  தனது மகளுக்கு வந்த வியாதியை பற்றி சொன்னான்.“நான் யேகோவா தேவனுக்கு காணிக்கையாக தருகிறேன்... அவர் எனது மனைவியை சுகப்படுத்திய போது நான் காட்டுப் புறாக்களை பலி செலுத்தி னேன். இப்போது எனது மகள் உடல் நலம் பெற்றதால் நான் இந்த ஆட்டுக்குட்டியை பலிசெலுத்தப் போகிறேன்” என்றான்.
அவர் கூறினார், “ஓ, பர்திமேயு, நீ அந்த ஆட்டுக்குட்டியை பலி செலுத்த கூடாது. இதோ, நானே பணம் தருகிறேன், மேலும் உனக்காக ஒரு ஆட்டுக்குட்டியை காசுக்கு விற்பவர் களிடமிருந்து வாங்கு, நீ காசுக்கு ஒரு ஆட்டுக்குட்டி வாங்கு. அந்த காசு நான் தருகிறேன். ஆட்டுக்குட்டி வாங்கு என்றார். 
அவன் சொன்னான், “ஓ, ஆசாரியரே, அது ஒரு மோசமான காரியம். ஆனால் நான் ஒருபோதும் யேகோவாவுக்கு ஒரு ஆட்டுக்குட்டியை காணிக்கையாக சொல்லவில்லை; நான் அவருக்கு இந்த ஆட்டுக்குட்டியை  தான்   கொடுப்பேன்  என்றான்”. அது தான்  சகோதரரே,  நீங்கள் இப்போது ஆவிக்குரிய நன்மையான இடத்தை பெறுவீர்கள். "நான் அவருக்கு ஒருபோதும் ஒருஆட்டுக்குட்டியை அளிப்பேன் என்றல்ல ; நான் அவருக்கு இந்த ஆட்டுக்குட்டியை தான் அளிப்பேன் .”
"ஏன்," அவர் சொன்னார், "பர்திமேயு, நீர் அந்த ஆட்டுக்குட்டியைக் கொடுக்க கூடாது. அந்த ஆட்டுக்குட்டி உன்னுடைய கண்கள்." 
அவன்  சொன்னான், “ஓ, ஆசாரியரே, நான் யேகோவாவுக்கு நான் கொடுத்த வாக்குறுதிக்கு உண்மையாக இருந்தால், பர்திமேயுவின் கண்களுக்கு யேகோவா ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுப்பார்.” அதைத்தான் அவர் செய்தார். அவர் ஒரு ஆட்டுக் குட்டியைக் கொடுத்தார். இந்த வசந்தகால காலையில், யேகோவாவே  பார்வையற்றிருந்த பர்திமேயுவின் கண்களுக்கு ஒரு ஆட்டுக்குட்டியை வழங்கினார்.
62. இன்றிரவு காத்திருக்கும் என் சபைக்கு இதைச் சொல்கிறேன்: அதே ஆட்டுக்குட்டி இன்று இரவு உங்களுக்கும் அளிக்கப்படுகிறது. “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்”. ஆகவே நம்முடைய விசுவாசமே இன்றிரவு அதே தேவ ஆட்டுக்குட்டியானவர்  ஜனங்களுக்கு செய்த அற்புதங்களையும் அடையாளங்களையும் அவர் எரிக்கோ விற்கு முன்பு செய்தது போல்  நம்முடைய  நடுவில் கொண்டு வர முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஜெபம் செய்வோம்.
63. உலகத்தின் பாவங்களை சுமநஂது தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியே, நான் வருகிறேன் இப்போது என் முழு இருதயதுடன் இந்த நோய்வாய்ப்பட்ட மக்களுக்காக. அவர்கள் பொறுமையாக காத்திருக்கிறார்கள், அவர்களில் பலர் நின்று கொண்டிருக்கிறார்கள், அவர்களின் கை, கால்கள் வலிகளுடன் இருக்கிறார்கள். ஆனால் நீரே தேவன், நீரே அவர்களுக்கு பலன் அளிப்பீர்..
இங்கே அவர்கள் கைக்குட்டைகளையும், சிறிய பொருட் களையும்  வைத்திருக்கிறார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் என் கரங்களை அவைகள் மேல் வைத்து, உம்மூடைய வல்லமையும் ஆசீர்வாதங்களையும் அவர்களுடன் அனுப்பும்படிக்கு வேணஂடிகொள்கிறேன், ஒவ்வொரு நோயையும் குணப்படுத்தும் இவைகள் உமது பிரதிநிதிகளுக்கு -அந்த உடல்நிலை சரியில்லாத சிறு குழந்தை கூட சுகத்துகாக காத்திருக்கிறது. அந்த வயதான ஏழை, அந்த பார்வையற்ற தகப்பன் அங்குள்ள அந்த சிறிய வீட்டில் வெள்ளை பிரம்பால் கதவை அடித்துக் கொண்டிருந்தார். ஓ, யேகோவா தேவனே, அவர்கள் மத்தியில் செல்லும், ஆண்டவரே, அவர்களைக் குணமாக்கும். நீரே தேவன். 
இன்னும் பலர் அங்கு இருக்கிறார்கள்- மருத்துவ மனையிலும்  காத்திருக்கிறார்கள்; ஒரு நோய்வாய்ப்பட்டு, மரிக்கும் நிலையில் உள்ள நபர், எல்லா நம்பிக்கைகளும் போய்விட்டவர், நீர்  இன்றும் யேகோவா தேவனாக இருக்கிறீர். அவர்களால் இந்த  கூட்டத்திற்கு வர முடியவில்லை, ஆனால் அவர்கள் இருக்கும் இடத்திற்கு நீர் சென்று, தகப்பனே.. நீரே அதை செய்வீர் என ஜெபித்து கொள்கிறேன்.
64. உம்முடைய இரக்கம் இப்போது ஜனங்கள் மீது தங்கும்படி நான் ஜெபிக்கிறேன். இங்கிருக்கும் ஒவ்வொரு நோய்வாய்ப்பட்ட ஜனங்களை  குணப்படுத்தியருளும், இரட்சிப்பை இழந்த ஒவ்வொரு ஆத்துமாவிற்கும், ஒவ்வொரு விசுவாசிகளுக்கும்  பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெறவும் இந்த கூட்டம் தேவனுடைய  ஆட்டுக்குட்டியானவர் வழிநடத் துவதன் மூலம் ஒரு பெரிய மாற்றமும் நீதியின் பாதைககளில்  பெரிய சுகமாக்கும் ஊற்றினாலும், தேவ இரக்கத்திலும் நடத்தும், பெரிய இரட்சிப்பின் ஊற்றையும் பரிசுத்த ஆவியின்  மூலம் அளித்தருளும்  கர்த்தாவே.
நான் இப்போது அவர்களுடன் என்னையும் ஒப்படைத்துவிடுகிறேன், நீர் உம்மை வெளிப்படுத்தவும், இன்றிரவில்  எங்கள் விசுவாசம், பார்வையற்ற பிச்சைக் காரனைப் பற்றி பேசப்பட்டதும், அவர் அங்கே இருந்தபோது செய்த அதே அடையாளத்தைக் காட்டுவதற்காக, தேவ ஆட்டுக்குட்டியின் பிரசன்னத்தை எங்கள் மத்தியில்  கொண்டு வாரும். மேலும் எல்லா  ஜனங்களும் உம்மை விசுவாசிப் பார்களாக, தகப்பனே. நான் - நான் உறுதியுடனும், என் முழு மனதுடன் நம்புகிறேன். நாங்கள் உமக்காக காத்திருக்கிறோம். உமது ஆவியானவர் இந்த வார்த்தையை உறுதிப்படுத்தி  அடையாளங்களுடன் பின்வரும் என்று பிரசங்கிக்கப்பட்டது. ஆமென்.      
நான் அவரை நேசிக்கிறேன் (இப்போது அவரை தொழுதுக்  கொள்கிறேன்.), நான் அவரை நேசிக்கிறேன்,
ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார்
சம்பாதித்தார் என் இரட்சிப்பை  கல்வாரி மரத்தில்
65. ஓ, அவர் அற்புதமானவர் அல்லவா? [சகோதரர் பிரான்ஹாம் மெல்ல பாடுகிறார். “நான் அவரை நேசிக்கிறேன்” -ஆசி.] இன்றிரவு நம் கைகளை உயர்த்தி அவரை பாடுவோம். [சபையார்  " நான் அவரை நேசிக்கிறேன்" என்று பாடுகிறார்கள் - ஆசி.] இப்போது,  உங்களைச் சுற்றி  உள்ளவர்களிடம் கைகுலுக்கி கொள்ளவும் அவர்கள் எங்கிருந்து  பிரயாணமாக  வந்திருந்தாலும்   (Pilgrim).
நான்…
… சம்பாதித்தார் என் இரட்சிப்பை 
கல்வாரி மரத்தில்.
அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு செய்தது,
ஆலோசனைக் கர்த்தா, சமாதானப்பிரபு, வல்லமையுள்ள தேவன்      அவர்;
என்னைக் காப்பாற்றி, எல்லா பாவங்களிலிருந்தும் அவமானத்திலிருந்தும் என்னைக் காத்து,
என் மீட்பர் அற்புதர், அவருடைய நாமத்தைத் துதியுங்கள்.
ஓ, அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு, செய்தது, 
ஓ, ஆலோசனைக் கர்த்தா, சமாதானப்பிரபு, வல்லமையுள்ள    தேவன் அவர்: 
ஓ,என்னைக் காப்பாற்றி, எல்லா பாவங்களிலிருந்தும் அவமானத்திலிருந்தும் என்னைக் காத்தவரே,
என் மீட்பர் அற்புதர், அவருடைய நாமத்தைத் துதியுங்கள்.
நான் ஒரு காலத்தில் தொலைந்து போனேன், இப்போது நான் கண்டுபிடிக்கப்பட்டேன், தண்டனையிலிருந்து விடுபட்டேன்,
இயேசு சுதந்திரத்தையும் முழு இரட்சிப்பையும் தருகிறார்;
என்னைக் காப்பாற்றி, எல்லா பாவங்களிலிருந்தும் அவமானத்திலிருந்தும் என்னைக் காத்தார்,
அற்புதர் என் மீட்பர், துதியே. . .
ஓ, அதைப் பாடும்போது நம்முடைய கைகளை உயர்த்துவோம்.
ஓ, அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு செய்தது,
ஆலோசனைக் கர்த்தா, சமாதானப்பிரபு, வல்லமையுள்ள தேவன் அவர்: 
என்னைக் காப்பாற்றி, எல்லா பாவங்களிலிருந்தும் அவமானத்திலிருந்தும் என்னைக் காத்து,
என் மீட்பர் அற்புதர், அவருடைய நாமத்தைத் துதியுங்கள்.
66. ஓ, அவர் உங்களில்  நல்லுணர்வு தரவில்லையா? நான் உணர்கிறேன். உங்களுக்கு தெரியும் நான் ஏன் உங்களை பாட வைக்க வேண்டும் என்று? எனக்கு பாடப் பிடிக்கும். உங்களுக்கும் பாடுவதில் விருப்பம் இல்லையா? செய்திக்கு பிறகு, வார்த்தையான  தேவன் உங்களைத் சுத்திகரிப்பது  போல் உணர்கிறேன். பாருங்கள்? அதன் பின்பு நான் நல்ல பழைய பெந்தகோஸ்தே பாடலை விரும்புகிறேன். அதிகப்படியான பயிற்சி பெற்ற குரலை வெறுக்கிறேன். அது பாடலில்லை. நீங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு உங்கள் முகம் நீலமாகும் வரை, மற்றும் பிறகு மூச்சை விடுகிறீர்கள்.  எனக்கு நல்ல பழைய கால(Fashion) பாடல்  பாடுவது பிடிக்கும் ஓ,. நான் அதை விரும்புகிறேன்…
ஓ, அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு செய்தது ,
ஆலோசனைக் கர்த்தா, சமாதானப்பிரபு, வல்லமையுள்ள    தேவன் அவர்;
என்னைக் காப்பாற்றி, எல்லா பாவங்களிலிருந்தும் அவமானத்திலிருந்தும் என்னைக் காத்து,
என் மீட்பர் அற்புதர், அவருடைய நாமத்தைத் துதியுங்கள்.
67. அவர் அற்புதமானவர் அல்லவா? உங்களுக்கு தெரியும், நான் எப்போதும் விரும்பும் ஒரு பாடல் இருக்கிறது, "என் ஆத்துமாவிற்கும் இரட்சகருக்கும் இடையில் எதுவும் இல்லை." என்னால் எப்போதும் பாட முடியும். என்னால் பாடவே முடியவில்லை. ஆனால் இந்த நாட்கள் ஒன்றில் நீங்கள் அனைவரும் பரலோகத்தில் உள்ள உங்கள் பெரிய அரண்மனைக்கு வரும்போது (நான் கொடுக்கப் போகிறேன் உங்களுக்கு ஏதாவது ஒரு சிறிய பரிமாணம்(Insight), கீழே உள்ளவைகளும்... கீழே அவ்விடத்தில், நீங்கள் உங்கள் பெரிய அரண்மனை வாசலில் நிற்கும் போது, காலையில் வெளியே செல்லுங்கள். கீழே அவ்விடத்தில், மற்றும் அதன் நதியின் திருப்பத்தை எங்கும் சுற்றி மகிமையின் சிங்காசனத்திலிருந்து வெளியே வருகிறது, உங்களுக்குத் தெரியும், அங்கு கொஞ்சம் காடுகள் அமைக்கபட்டு இருக்கிறது, மேலும் ஒரு சிறிய மரத்தாளான அறை(Log cabin) உள்ளது. அது என்னுடையது. பின்பு, எப்பொழுது-எப்போதும் சில காலையில் நீங்கள் அங்கு இறங்கும் போது, உங்கள் நுழைவாயில் (Porch) நடந்து செல்லுங்கள்.  நீங்கள் கேளுங்கள். அந்த பழைய நுழைவாயில் கீழே நில்லுங்கள் …[ஒலி நாடாவில் காலியிடம் –ஆசி.] 
68.  “ஒரு காலத்தில் நான் தொலைந்து போனேன், ஆனால் இப்போது நான் கண்டுபிடிக்கப்பட்டேன்; குருடானாயி௫ந்தேன் ஆனால் இப்போது பார்க்கிறேன்.” உங்களுக்கு தெரியும் நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்று, "தேவனை துதியுங்கள், வயதான சகோதரர் பிரான்ஹாம் அதை செய்தார்.. அவர் இங்கே இருக்கிறார், இப்போது அங்கே இருக்கிறார்.” ஆமாம் ஐயா. ஓ.
நாம் அங்கே பத்தாயிரம் வருடங்களுக்கு மேல் இருப்போம், 
சூரியனைப் போல ஒளி மிகவும் பிரகாசிக்கிறது;
அவரைப் புகழ்ந்து பாடுவதற்கு நமக்குக் குறைவான நாட்கள் இருக்காது
நாம் முதலில் தொடங்கியதை விட.
நாமனைவரும் பாடுவோம்.
வியக்க வைக்கும் கிருபை! எவ்வளவு இனிமையான ஒலி,
     அது என்னைப் போன்ற ஒரு அயோக்கியனை காப்பாற்றியது!
நான் ஒருமுறை… [ஒலி நாடாவில் காலியிடம்-ஆசி.]  காணாமல் போனேன், ஆனால் இப்போது நான் கண்டுபிடிக்கப் பட்டேன். குருடானாயி௫ந்தேன் ஆனால் இப்போது பார்க்கிறேன்.
ஓ, நான் இயேசுவை எப்படி நேசிக்கிறேன்.
ஓ, நான் இயேசுவை எப்படி நேசிக்கிறேன்.
ஓ, நான் இயேசுவை எப்படி நேசிக்கிறேன்,
ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார்.
ஆமென், ஆமென். ஆவிக்குள்ளாக பாடுதல்; நான் அதை விரும்புகிறேன், நீங்கள் செய்கிறீர்களா… ஓ!  நான் மலையின் ஓரத்தில் உட்கார வேண்டும் அங்கே அந்த மரத்தின்  பக்கத்தில் ஒரு சிறிய புதர் இருக்கும்.  அதனுள்  ஜீவ நீரூற்று இருந்தது. நான் சிறந்ததை கேட்கிறேன், உங்கள் அனைவருடய ௭ல்லா அற்புத குரல்கள்; அந்த  தேவதூதர்கள் உங்களுடன் இணைந்து ஆற்றின் மறுகரையில் பாடுகிறார்கள். நான் அமர்ந்து பத்தாயிரம் ஆண்டுகள் கேட்க விரும்புகிறேன். ஓ, நான் அவரை எப்படி நேசிக்கிறேன். அவர் அற்புதமானவர் அல்லவா? நிச்சயமா யுள்ளது.
இப்போதும், நீங்கள் நன்றாக உணர்கிறீர்களா? இப்போது அதைத்தான் நான் பழைய பாணியில் பாடுகிறேன்; ஆவியில் நிறைந்து பாடுவது. இங்கு சிறிது சிறிதாக  பாடும் பாடல் நீங்கள் பாடுவதை விட பழைய  பாடல்களேயே விரும்புகிறேன். அவர்கள் பாடல்களைஎழுதும் போது எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தினார்கள் என்று நினைக்கிறேன். அதை போல அவர்கள் பாடல்கள்- எடி பெரோனெட்(Eddie Perronet) தனது பேனாவை எடுத்து ஆரம்ப  பாடலை எழுதியது போன்று. எல்லோரும் அவருடைய கவிதைகளையும்  மற்றும் பொருள்களை வாங்க மாட்டார்கள். ஒரு நாள் ஆவியானவர் அவர் மீது இறங்கிய போது, அவர் பேனாவைப் பிடித்து துவக்க பாடல் எழுதினார்:
இயேசுவின் நாமத்தின் வல்லமையை அனைவரும் போற்றுகிறார்கள்.
தேவதூதர்கள் சாஷ்டாங்கமாக விழநஂதனார்.
ராஜ கிரீடத்தை வெளியே கொண்டு வாருங்கள்,
அனைத்திற்கும் கர்த்தராகிய அவருக்கு முடிசூட்டுங்கள்.
மற்றொன்றையும்  எழுதினார்:
அதிசயமான சிலுவையை நான் நோக்கிப் பார்த்த போது,
மகிமையின் ராஜன் எனக்காக  இறந்தார்
என் புகழ் அனைத்தும் ஒன்றுமில்லை
மற்றொன்றையும்  எழுதினார்:
 உயிரோடு வாழஂகிறேன், அவர் என்னை நேசித்தார்;
மரணத்திலிருந்து, அவர் என்னை காப்பாற்றினார்;
புதைத்தார், அவர் என் பாவங்களை  சுமந்து வெகுதூரம் கொண்டு சென்றார்;
உயிர்த்தெழுந்தார், அவர் நியாத்தீர்ப்பினின்று என்றென்றும் சுதந்திரமாக இருக்கும் படி, 
ஒரு நாள் அவர் வருகிறார், ஓ அது மகிமையான நாள்.
நான் பார்வையற்ற ஃபென்னி கிராஸ்பியைப்(Fanny Crosby) பற்றி நினைக்கிறேன், “இயேசு எதைக் உனக்கு குறித்திருக்கிறார்?” [ஒலி நாடாவில் காலியிடம்-ஆசி.]
நீர் அழைக்கிறீர், என்னை விட்டு  கடந்து செல்லாதேயும்.
என் ஆறுதல்களின் நீரோடை நீர்,
என் உயிரை விடவும், அதிகமானவர் நீர் எனக்கு,
கர்த்தாவே உம்மைத் தவிர பூமியில் எனக்கு யார் இருக்கிறார்கள்? 
69. அவர் எவ்வளவு அற்புதமானவர். இப்போது, அற்புதமான கிறிஸ்துவானவர், அவரில் விசுவாசத்தில் நாம் பழைய கீர்த்தனை பாடல்களை பாடுகிறோம்,  நம் முன்னோர்கள்... ஸ்பர்ஜன், ஜான் வெஸ்லி மற்றும் சார்லஸ் வெஸ்லி...சகோதரர் மூர்.. (Spurgeon, John Wesley, and Charles Wesley, Moore) மேலும் நான் நீண்ட காலத்திற்கு முன்பு அவர்களின் கல்லறையில் நின்றேன். நான் மிகவும்  அழுதேன். நான் நினைத்தேன், "ஓ, தேவனே…” நான் வில்லியம் கோப்பரின் (William Cowper) கல்லறை அருகே நின்றபோது,  அவர் இருந்தபோது … அவர் ஒரு நரம்பியல் நோயாளி என்று நினைத்தார்கள். ஆவிக்குரிய எந்த மனிதனும் பைத்தியம் என கருதப்படுகிறார்கள்  (அது உங்களுக்கும் தெரியும்.), யாராக யிருப்பினும்.  
அவர் ஆவியில் நிறைநஂது அந்த பிரபலமான பாடலை எழுதினார்.
இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே,
இம்மானுவேலின் நரம்புகளிலிருந்து வரையப்பட்டது,
பாவிகள் வெள்ளத்தில் மூழ்கியபோது,
அவனது குற்றக் கறை அனைத்தையும் இழக்கவும்.
என்ன நடந்தது தெரியுமா? ஆவியானவர்  அவரை விட்டுச் சென்ற உடனேயே, அவர் ஆற்றில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றார். ஆம். ஆவி அவரை விட்டு வெளியேறிய போது; அவர் எங்கு இருக்கிறார் என்று அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் பெரிய மனிதர்கள், தவறாக புரிந்து கொணஂடார்கள்…
70. நான் அங்கேயே நின்றபோது, மேலும் நான் நினைத்தேன்… சார்லஸ் வெஸ்லி (Charles Wesley) நதியோரம் அந்நாட்களில் நின்ற போது, அல்லது அங்குள்ள ஏரியோரமோ, அல்லது அங்குள்ள சிறிய அறையிலோ ஒரு புயல் எழும்பியது. ஆகவே அவர் திரும்பிச் செல்ல முயன்றார். அவரிடம் ஒரு சிட்டு  குருவி பறந்து வந்து மடியில் விழுந்தது, அவர் புயல் முடியும் வரை அதை பிடித்து, வெளியே  செல்லாமல் அதை விரலின் இடையில்  வைத்தார். அப்பொழுது அவருக்கு உள்உணர்வு வந்து பாடினார் .
௭ன் நித்திய பிளவுண்ட மலையே,
உம்மில் என்னை மறைத்துக் கொள்ளும்;
தண்ணீர் புரளும் போதும்…?
சோதனை அதிகமாக இருக்கும் போதும்,
 புயலான வாழ்க்கை முடியும் வரையும்
என்னை மறையும், ஓ, என் இரட்சகரே, மறையும், உமது  மார்பில் பாதுகாப்பாக மேலி௫ப்பேன்...
ஓ, என்னுடைய, பெரிய மனிதர்களே.
பெரிய மனிதர்களின் வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது
நாம் வாழ்க்கையை உன்னதமாக்க முடியும்,
நம்மை விட்டு விடும் பிரிந்தவைகள் 
மணலில் மீது  உள்ள காலத்தின் கால்தடங்கள்.
கால்தடங்கள், ஒருவேளை மற்றொன்றை ,
வாழ்க்கையின் மகத்தான பாதையில் பயணம் செய்யும் போது,
நலிந்த மற்றும் உடைந்த கப்பலில் இருக்கும் சகோதரரை,
பார்க்கும்போது, மீண்டும் மனதிற்கு விருப்பமாய் இருக்கும். (எனக்கு அது பிடிக்கும்.)
எண்ணிக்கையில் சொல்லாதே துக்ககரமானதை,
அந்த வாழ்க்கை வெறும் வெற்றுக் கனவு!
ஆத்துமா இறந்துவிட்டது, அது தூங்குகிறது, 
மேலும்  காரியங்கள் பார்ப்பவைகள் போல் இல்லை.
ஆம், வாழ்க்கை உண்மையானது! மற்றும் வாழ்க்கை அக்கறையுள்ளது!
மற்றும் கல்லறை அதன் இலக்கு அல்ல;
நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கு திரும்புவாய்,
ஆத்துமாவைப் பற்றி பேசவில்லை. (ஓ, அது எனக்கும் விருப்பம்.)
நாம் எழுந்து செயல்படுவோம்,
எந்த போட்டத்தையும் முழு  இருதயத்துடன்,
ஊமையாய் அல்ல, ஓட்டப்படும் கால்நடைகளைப் போல் இருக்காதே! (அதின் உள்ளே செல்ல வேண்டாம்.)
போராட்டத்தில்  ஒரு வீரனாக இருங்கள். 
ஓ, என்னே, அவர்களுடைய  கவிஞர்களின்  மற்றும் காரியங்களையும் நான் படிக்கும்போது நிச்சயமாக என் உள்ளத்தில் சிலிர்க்க வைக்கிறது. அவற்றை எழுதிய அந்த தெய்வீக மனிதர்கள் - அங்குள்ள "வாழ்க்கையின்   சங்கீதம்" போலவும், நீண்ட ஐக்கியமும் . மற்றும் எப்படி அது …
தேவன் அவர்களுக்கு இந்த விஷயங்களை எழுதினார் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் பழைய மனிதர்கள், அது வேதாகமதில் கூறியது போல், பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு அந்த பழைய இரத்த சம்மந்தமான பாடல்களை எழுதினார், "நான் தேவாலயத்தில் இரத்தத்தின் கருஞ்சிவப்பு நீரோடை,” என்ற அனைத்து பிரபலமான பழைய பாடல்களும் பார்க்கிறேன்.  இன்று நமக்குள்ள பாடலை விட இந்த சிறியதும் வெட்டிய பாடல்கள் மிகவும் சிறந்தது சகோதரர்களே. நான் உங்களுக்கு சொல்கிறேன். நான் அந்த பழைய கால சமயப்பற்று மிகுந்த பாடல்களை விரும்புகிறேன், அனைத்து நல்ல பழைய விசுவாச பாடல் களையே விரும்புகிறேன்.
71. எல்லாம் சரி. பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கும்போது, நாம் ஜெப வரியை அழைப்போம், மேலும்  நோயுற்றவர்களுக்காக ஜெபம் செய்வோம்.இப்போது எல்லோரும் உங்கள் விசுவாசத்தில் இருங்கள், உங்கள் இருதயத்திலும்… அதை நீங்கள் உங்கள் வாயினால் சொல்ல வேண்டியதில்லை.  நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். உங்கள்-உங்கள்  சிந்தையானது, பூமியில் உள்ள குரலை விட வானத்தில் அதிகம் கேட்கும்.  பாருங்கள்?  இதை சொல்லுங்கள், "ஓ, இயேசுவே, தாவீதின் குமாரனே, என் மேல் இரக்கமாயிரும்." பாருங்கள், ஆனால் அவர் செய்வார்  அவனுக்கு செய்ததையே.
சகேயு, ஒரு முறை உன்னுடைய அத்தி இலையிலிருந்து வெளியே இழுத்து கீழே பார், பார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.பாருங்கள் அவர் அதை போல செய்ய வில்லை என்றால், அவர் உங்களை வெளியே இழுத்து, உங்களுடன் பேசுவார். மேலும் நல்ல காரியங்களுக்கு, அவர் இன்றிரவு உங்களுடன் வீட்டிற்கு  வருவார்; நீங்களும் உங்கள் மனைவியும் படுக்கைக்குச் செல்லும் முன்பு. முதலாவது அவருடன் பேசுங்கள். உங்கள்  வீட்டிலும்  மாற்றம் ஏற்படும். அது முன்பு இருந்தது போல இருக்காது, அவர் உங்களுடன் வீட்டிற்குள் வரும் போது.
72. பில்லி, நீ எந்தெடத்தில் இருக்கிறாய்? ஜெனி, லியோ, ஜெப அட்டைகளை யார் கொடுக்கிறார்கள்? நீங்களா? ஓ, ஒ, பில்லி? பில்லி எங்கேயிருக்கிறாய் ? என்ன? D -1 லிருந்து 100? ஜெப அட்டை D  இன்று கொடுக்கப்பட்டது. ஆகவே மற்றதை நம்மால் கலக்க முடியாது... நமக்கு  அங்கு போதுமான இடம் இருக்கிறதா? நம்மில் சில சகோதரர்கள் அங்கே நிற்கலாம் என்று நினைக்கிறேன். யாரிடம் D 1 உள்ளது? எல்லாம் சரி, ஸ்திரியே இங்கேயே இருங்கள்; இப்போது, உங்கள் அழைப்பிற்கு பதிலளிக்கவும். எண் 2?
73.  [ஒலி நாடாவில் காலியிடம் –ஆசி.]... இந்த இடத்தை அழகாக  வைக்கவும். ஒரு நபரும் அவரது மனைவியும் எனது கூட்டங்களில் முதல்முறையாக ஒன்று கூடினர்; அவர்கள் பார்வையாளர்கள் நடுவில் அமர்ந்திருந்தார்கள். ஒரு பெண் உள்ளே வந்து, அவர்களின்  பக்கத்தில் அமர்ந்தாள். அவர்களிட மிருந்து அந்த சிறிய பெண், மாற்றி அமர்ந்தாள். அந்த பெண்மணி மிகவும் அருகில் அமர்ந்தாள். ஏனெனில் அவள் தனது பாதையில் இருந்ததால் அது அவர்களை பின்வாங்க செய்தது. 
சிறிது நேரத்திற்கு பிறகு அந்த சிறு பெண் பின்னால் நகர்ந்தாள். இவர்கள் மேலும் பின்னோக்கி சென்றனர்.  அவள் மீண்டும் பின் சென்றாள். அதனால் அவள் ஜெபம் செய்தாள் “கர்த்தாவே,  அதை நான்  செய்திருக்க கூடாது, என்னை மன்னித்து விடும். நான் அதை வேண்டுமென்று செய்யவில்லை என்றாள். அதன்பின்பு முன் வரிசையில் உள்ள பெண் அவளிடம் சென்று “சகோதரியே மன்னிக்கவும் நான் அதை வேண்டுமென்று செய்யவில்லை ”என்றாள். மேலும் இந்த இருவரும், கணவர் மற்றும் மனைவி நோய்வாய்ப்பட்டு இருந்தார்கள்.  மற்றும் ஓ, அது முடிந்ததும் சிறிது நேரம் கழித்து, நான் பார்த்தேன் கர்த்தருடைய தூதன் அவர்கள் மேல் நின்று, அவர்களுடைய  பெயரைச் சொல்லி அழைத்து அவர்கள் இருவரையும் குணமாக்கினார், பிறகு அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.  சகோ. லேக்  சார்லஸ்க்கு (Lake Charles) அதைப் பற்றி தெரியும்.
74. [ஒலி நாடாவில் காலியிடம் –ஆசி.]...பின் இருக்கையில் அமருங்கள், சகோதரி, சகோதரர். ஒருவருக்கொருவர் முன்னு ரிமை  கொடுங்கள்.  21, 2, 3, 4, 5? எல்லாம் சரி. 21, 22, 23, 24.
75. [ஒலி நாடாவில் காலியிடம்-ஆசி.]… தேவ  ஆவியானவர் இறங்கி வந்து, நாள் முழுவதும் அவர் என்ன செய்தார் என்றும், என்ன செய்து கொண்டிருந்தார், அவருக்கு என்ன வேண்டும் என்றும், ஓ, என்னே. அதற்கு அவர், "இனி நான் சொல்ல வேண்டியது அவசியம் இல்லை" என்றார். பின்பு  கதவுக்கு வெளியே சென்றார். ஓ. 
நான் அவரை ஒருபோதும் கைவிடமாட்டேன்,
நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்... (அதை உண்மையாகவே சொல்கிறீர்களா?),
நான் அவரை ஒருபோதும் கைவிடமாட்டேன்,
ஏனெனில்   அவர் என்னை முதலில் நேசித்தார்.
என் இரட்சகர் மரித்த சிலுவையின் அடியில்,
கீழே... பாவத்திலிருந்து சுத்தப்படுத்துவதற்காக நான் அழுதேன்;
அங்கே என் இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது;
அவரின் நாமத்திற்கு மகிமை!
மகிமை… (இப்போது 40 முதல் 50 வரை. 41, 2, 3, 4, 5.)
மகிமை அவருடைய விலைமதிப்பற்ற நாமத்திற்கு!
அங்கே என் இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது;
அவருடைய நாமத்திற்கு மகிமை! (46, 47.)
[ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.]... பாவத்திலிருந்து  அற்புதமாக இரட்சிக்கப்பட்டேன்,
 இயேசு மிகவும் இன்பமயமாகஎன்னுள் தங்கி இருக்கிறார்,
  …அவர் என்னை அழைத்துச் சென்ற சிலுவையில்.
 அவரின்  நாமத்திற்கு மகிமை!
பாடுவது, அவருக்கே மகிமை...(இப்போது தலை வணங்குவோம் நாம் அதை அவருக்குப் பாடும்போது.)
மகிமை அவருடைய விலைமதிப்பற்ற நாமத்திற்கு!
அங்கே என் இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது;
அவரின்  நாமத்திற்கு மகிமை!
இப்போது, அமைதியாக. [சகோதரர் பிரான்ஹாம் பாட ஆரம்பிக்கிறார் “அவரின் நாமத்திற்கு மகிமை”—ஆசி.] இப்போது,ஆவிக்குள்ளாக  இருங்கள்.
76. என்ன... என்னுடைய இருதயத்தில் இருந்தது... (அனைத்து ஜெப அட்டைகளும் இப்போது உள்ளன? உங்கள் ஜெப அட்டைகளை பெற்றுக்கொணஂடீர்களா? வரிசைக்கு செல்லுங்கள்.  இப்பொழுது அமைதியாகவும், பயபக்தி யுடனும்.)
ஓ, வாருங்கள், இந்த நீரூற்று மிகவும் செழிப்பான  மற்றும் இனிமையானது;
இப்போது, உங்கள் பழைய ஆத்துமாவை இரட்சகரின் பாதத்தில் விட்டுவிடுங்கள்.
இன்றே மூழ்கி, முழுமையடையுங்கள்;
பாடுகள், அவரின் நாமத்திற்கு மகிமை!
அவரின் நாமத்திற்கு மகிமை!
மகிமை அவருடைய விலைமதிப்பற்ற நாமத்திற்கு!
என் இருதயம் இந்த இரத்தத்தால் பூசப்பட்டது;
அவரின் நாமத்திற்கு மகிமை!
77. விலைமதிப்பற்ற கர்த்தாவே, அந்த இசை கருவியில் அழகிய பழைய கீதத்தை இசைப்பது போல, இங்கே பலர் இருக்கிறார்கள் கர்த்தாவே, இந்த ஐக்கியத்தில் பங்குகொணஂடதின் மூலம், எங்கோ இருக்கிறது என்றும் அதை அறிய நமது பாவங்கள் விசுவாசத்தின் கீழே நாம் மூழ்கியபோது அனைத்தும் போய்விட்டன கருஞ்சிவப்பு ஓடையிலும், ஒளிரும் மின்னலில், இடி முழக்கங்களின் கூச்சலில், தேவ குமாரனின் இரத்தம், இம்மானுவேலின் நரம்புகளில் இரத்தம் வழிந்தது. அந்த மழை போல சிலுவை முழுவதும் கீழே ஊற்றப்பட்டு, இரத்தமும் தண்ணீரும் கலந்து, எங்கள் ஆத்துமாக்கள் மேல் ஊற்றப்பட்டது. கர்த்தாவே, விசுவாசத் தினால் நாங்கள் எப்போதும் "அவருடைய நாமத்திற்கு மகிமை" என்று பாடுவோம். இதற்காக நாங்கள் உமக்கு நன்றி சொல்கிறோம், தகப்பனே.
இப்போதும், என்னிடம் இருப்பது போல்… என் முரட்டுத்தனமான வழிகளை மன்னியுங்கள், கர்த்தாவே, உமது  வார்த்தையை கொண்டு, ஆனால் நான்... இதுவே என்னால் செய்யக்கூடிய சிறந்தது. மேலும் நான் ஜெபிப்பதால்  நீங்கள் அதைப் பெற்று, ஜனங்களின் இருதயங்களில் அதின் நோக்கத்தை விதைப்பீராகா தகப்பனே. அதுவே ஜனங்களுக்கு விசுவாசத்தை கொண்டு வரும்.
இப்போதும், நீர் என்னவாக இருக்கிறீர் என்பது அவர் களுக்குத் தெரியும். ஒவ்வொரு இரவும் நாங்கள் வேத வசனங்களால் நெருங்குகிறோம். அதை வெவ்வேறு இடத்தில் உம்மை நிரூபிக்கவும் அதுவே அவர்களுக்கு  மேசியா வினுடைய (Messianic) அடையாளங்கள்... வேதத்தில் எல்லா இடங்களிலும் அவைகள் நிறைந்துள்ளன, கர்த்தாவே. ஒருவேளை அவர்கள் இதற்கு முன் படித்ததில்லை என்றால், அதை சரியாகவும் அதிகமாக  படியுங்கள்.
அந்நாட்களில் இருந்த பரிசேயர்களும் சதுசேயர்களும், வேதபாதகர்களும்  அதை சரியாகப் படித்தார்கள், அவர்கள்  அப்படித்தான் இருக்க வேண்டும். அந்நாட்களில்  தான்  சிலுவையில் அறையப்பட்டார், சந்தேகமில்லை, அவர்கள் அந்த  காலை நேரத்தில் தேவாலயத்தில் சங்கீதம் 22-ஐ  பாடிருப்பார்கள்,  "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" ஓ  தேவனே, ஆவிக்குரிய கண்களை திறவுங்கள். நாங்கள் உம்மிடத்தில் அர்ப்பணிக்கும்போது, உம்மை புரிந்து கொள்ளவும், எங்களை உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறோம் இயேசுவின் நாமத்தில் ஆமென்.
78.  இப்போது, ஒரு நிமிடம், இந்த மாபெரும் ஜனங்களின் வரிசையைப் பார்க்கிறீர்கள். அங்கு செல்ல எனக்கு வழி இல்லை... யாராவது இதுவரை இங்கு நடக்கும் நமது பகுத்தறியும்(discernment)  கூட்டங்களில் பங்குபெற்று இருக் கிறார்களா…  (ஒலி நாடாவில் காலியிடம் –ஆசி) 
மேலும் - நான் செய்வது போலவும், நான் சாப்பிடுவது போல அவரும் செய்தார். அவர் என்னைப் போலவே சாப்பிடுவார். அவர் என்னைப் போலவே தூங்கினார். அநஂத-அநஂத ஒரு  மனிதரான இயேசு மரித்தார்.
இப்போது, கத்தோலிக்க திருச்சபையின் கோட்பாட்டை நான் கண்டிக்கிறேன் (அது சரிதான்.), ஆனால் கத்தோலிக்க மனிதனை  அல்ல. உண்மையில் நான் எப்போதாவது அந்த இடத்திற்கு வந்தால் என்னால் பெந்தெகொஸ்தேகாரர்களுடன் செல்வது போல் அவ்வளவு தூரம் செல்ல முடியாது. பிறகு நான் மீண்டும் கல்வாரியண்டைக்குத்  திரும்ப வேண்டும்; என்னி டத்தில் ஏதேனும் தவறு இருக்கிறதா?.  இயேசு வந்தது   ஒவ்வொருவருக் காகவும் தான் மற்றும். ஒருத்துவம், இருத்துவம், திரித்துவம் ஐந்துத்துவம்  எதுவாக இருந்தாலும் வித்தியாசம் இல்லை. எனக்கு  உங்களுடன் கைகோர்க்க வேண்டும் …
79.  நான் முதலில் ஒரு பாப்டிஸ்ட் ஊழியராக இதற்குள் வரும்போது, ஏன்? ஒரு குழுவினர், "வாருங்கள், எங்கள் குழுவில் சேருங்கள்"; மற்றவர்,“வாருங்கள் எங்கள் குழுவில் இணையுங்கள் என்றனர்”.
நான், சொன்னேன் “சகோதரர்களே, நான் உங்கள் இருவரையும் நேசிக்கிறேன்” 
"நீங்கள் ஒன்றுக்குள் வர வேண்டும். நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம்." என்றனர்.
நான் சொன்னேன், “ஓ, தேவன் அதை அனுமதிப்பார். ஆனால் பாருங்கள்? நான் உங்களுக்கு நடுவே நிற்பேன் இருபுறமும் கையை நீட்டி சொல்லுவேன், 'நாம் சகோதரர்கள்!' மீட்கப்பட்ட அன்பு என் நோக்கம், நான் மரிக்கும் வரை அதில் தான் இருப்பேன். அது தான் சரி. உங்கள் இருதயத்திலும் அன்பைப்  பெற்று கொள்ளுங்கள், மேலும் உண்மையாகவும் நேர்மை யாகவும் இருங்கள். மேலும் நீங்கள் சரியான நோக்கத்துடனும், சரியான குறிக்கோளுடனும் இருந்தால் அப்போது மீதமுள்ள வைகளை தேவன் பார்த்துக்கொள்வார். உங்கள் நோக்கம் சரியாக இருந்தால், உங்கள் குறிக்கோள் சரியாக இருக்கும்... உங்கள் குறிக்கோள் சரியாகவும், உங்கள் நோக்கம் தவறாக இருந்தால், அது வேலை செய்யாது. ஆனால் நீங்கள் எப்போது உங்களில்... அது தேவனின் சித்தம் என்று உங்களுக்குத் தெரிந்தால், உங்கள் நோக்கம் சரி, உங்கள் குறிக்கோள் சரி...
80. அதுபோலவும், இங்கேயும் ஒரு  ஜனக்கூட்டம் உள்ளது. நான் பேசிக்கொண்டிருக்கிற மேசியாவாக அவரை நீங்கள் தொடலாம். நான் அப்படி நினைப்பதால் அதைப் பற்றி பேசவில்லை; நான் அதைப் பற்றி பேசுகிறேன், ஏனென்றால் வேதாகமம் அவ்வாறு கூறியது. இப்போது,  அந்த காரணம்…
நீங்கள் சொல்லலாம் "சகோதரர் பிரான்ஹாம், நீங்கள் பயப்படவில்லையா அவர் செய்வார் என்று...?"
“இல்லை ஐயா. இப்போதும், நான் சொல்ல விரும்பினால், “இங்கு  கவனியுங்கள். என்னால் இதைச் செய்ய முடியும். நான் அவ்வளவு பெரிய ஆளா என்று பாருங்கள்?” இந்த  பீடத்தி லிருநஂது, நான் வாயை மூடிக்கொண்டு விலகிச் செல்வது நல்லது' ஏனென்றால் அது ஒருபோதும் வேலை செய்யாது. பாருங்கள்?
என் நோக்கம் என்னவாக இருக்கிறது? இந்த ஜனங்களை தேவ ஜனங்களாக ஒன்றிணைத்தல்,. தேவ ஜனங்களாக.. நான் சொல் கிறேன், எல்லா ஜனங்களும், நான் பாப்டிஸ்டைச்(Baptist) சேர்ந்தவன் என்று உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் அனைவரும் வாருங்கள், பாப்டிஸ்டுடன் சேருங்கள். "நான் ஒருமைவாதி.”(Oneness)."நான் ஒரு திரித்துவவாதி.” (Trinitarian) “நான் ஒரு திரியேகம்”(Thereness) அல்லது "இருத்துவம்” (Twoness) அல்லது உங்களுக்குள்  என்ன இருந் தாலும், எனக்குத் தெரியாது.  அது அனைத்தும் "நான் அந்த ஒருவருக்கே  சொந்தமானவன்."
இல்லை, ஐயா. நான் உங்கள் சகோதரன். நான் கிறிஸ்துவுக்கு சொந்தமானவன். நாம் இன்னொருவருக்கு சொந்தமானவர்கள். அது எனது நோக்கத்தையும், எனது குறிக்கோளையும் சரியானதாக ஆக்குகிறது. என் நோக்கம் சரியானது. ஆகவே, அவர் சொன்னார், “இந்த மலையை  பார்த்து, ‘அப்பாலே போ’ என்று சொல், சந்தேகம் வேண்டாம்…” நான் அதைச் செய்ய வேண்டும் என்பது தேவ சித்தம், அல்லது அவர் என்னை அனுப்பாமல் இருப்பார். அங்கு தான்  நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறீர்கள், மேலும் உங்கள் நோக்கம் மற்றும் குறிக்கோள் சரியானது, நீங்கள் எதையும் சொல்லலாம்... அது தேவ சித்தமானால், அதுவே நடக்கும்.
81. ஆனால் நான் சொல்ல வேண்டியது, கடின உடை அணிந்தது போல் இருக்கும். அது என்னை எதாவது ஒரு சிறந்த செயலுக்கு தயார்படுத்தும், அதை ஒளிப்பரப்பு செய்ய உலகளாவிய அல்லது ஏதோ. ஒன்று. இப்போது அது தவறானது. எனக்கு வேண்டாம்…
இயேசு ஒரு விஷயத்தில் குறைவாகக் காணப்பட்டார். அது என்ன என்று உங்களுக்கு தெரியுமா? காட்சிப்பொருளாக (Showmanship). அவர் ஒரு பகட்டாக காட்டும் திறமைசாலி இல்லை. பாருங்கள்? இல்லை, இல்லை. இல்லை. அவர்கள் சொன்னார்கள், “நீங்கள் ஏன் இந்த முட்டளான பரிசுத்த உருளை நண்பர்களுடன் இங்கு இருக்கிறீர்கள் இந்த மீன் பிடிப்பவன் மற்றும் இங்குள்ளவர்கள்?” 
அவருடைய சகோதரர்கள் சொன்னார்கள்,“முன் செல்வோம், பிரதான ஆசாரியரிடம் வாருங்கள். முன்னே வாருங்கள்,  உங்களை  வெளியே காட்டுங்கள், நீங்கள் இப்படி உள்ளவர் களுடன்  இருந்தால், உங்களால் என்ன செய்ய முடியும்? நீங்களும் இவர் மற்றும் இவர்களை போல. " 
அவர் (இயேசு) சொன்னார், “உங்கள் நேரம் எப்போதும் இருக்கிறது. என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை." அது தான்  சரி. அவர் அவர்களுடனே - கூடப் போகவில்லை. அவர் இன்றும் அப்படியே  இல்லையா. அவர் ஒரு பகட்டானவர் அல்ல; அவரே  தேவ குமாரன். ஆமென். நாம் அதை விசுவாசிக்கிறோம். ஓ, அவர் அற்புதமானவர் இல்லையா? இயேசுவே, தேவ குமாரன்...
82.  இப்போது, இந்த வரிசையில் என்னால் பகுத்தறிவுக்குள் இருக்க முடியாது (பாருங்கள்?), ஆனால் நாம் இப்போது ஜெபம் செய்ய போகிறோம். நான் அதைச் செய்வதற்கு முன்பு, நான் உறுதியாக இருக்க விரும்புகிறேன், என்னால் முடிந்தால்-பரிசுத்த ஆவியானவர் எனக்கு உதவினால் - தேவ வல்லமை இங்கே உள்ளது என்பதை அறியவும், அதனால் தேவ அபிஷேகத்தை நீங்கள் காணக்கூடும். 
இப்போது, பாருங்கள். இந்த பார்வையாளர்கள் அனைவரும்…  இன்றிரவு இதை ஒரு காட்சி இரவாக மாற்று வோம்- வெளியூர் பார்வையாளர்களும்  இங்கு இருக்கிறார்கள், ஒவ்வொருவரும் எனக்கு அந்நியர்களாக... இருக்கிறார்கள். ஒரே ஒரு நபர் மட்டும் இருக்கிறார்… இந்த இரண்டு இளம் பெண்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள்; அது என் நண்பரின் பிள்ளைகள்,  (Little Evans)சின்ன எவன்ஸ்னுடைய இளம் பெண்கள். சகோதரர் எவன்ஸ், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நான் உங்களை பார்க்க முடியவில்லை… 
நாம் காத்திருக்கும் இப்போது சகோதரர் எவன்ஸைப் (Evans) பற்றி உங்களுக்குச் சொல்லுகிறேன். நான்  சில காரியங்களுக்காக காத்திருக்கிறேன். நாங்கள் சில காலத்திற்கு முன்பு மீன்பிடித்து கொண்டிருந்தோம். நான் எப்படியாக அவர்களுடன்   அறிமுக மானேன் என்றால்,   இந்த நல்ல மனித மற்றும் அவரது மனைவி யையும் சகோதரர் மெர்சியர் இவர்களை எனக்கு அறிமுகப் படுத்தினார்.
நான் ஹோட்டலை விட்டு கிளம்புவதற்கு முந்தைய நாள் காலை... அது பிலடெல்பியாவில் இல்லையா? (Theo Jones)  தியோ ஜோன்ஸ் உடன் சந்திக்கும் போது தான் அப்போது சகோதரர் மெர்சியர்(Mercier) சொன்னார், “ஒரு நல்ல மனிதர் என்ற பெயரை  கொண்ட வெல்ச் எவன்ஸ்(Welch Evans) என்பவர்  உங்களை சந்திக்க விரும்புகிறார்.அப்பொழுது  எனது மனைவியும் கூட இருந்தார். நான்  அன்று காலை எழுந்தேன், என் கூடவே சிறிய பையன் ஜோசப்பும் இருந்தான்.
83. உங்கள் அனைவருக்கும் குட்டி ஜோசப் பற்றி தெரியும். அவன் பிறப்பதற்கு ஆறு வருடங்களுக்கு முன்பு நான் ஒரு தரிசனத்தில் அவனை  பார்த்தேன். என் மனைவிக்கு இன்னொரு குழந்தை பிறக்கவே முடியாது என்று டாக்டர் சொன்னார்கள். நான் "ஓ, ஆமாம்" என்றேன். 
அதனால் அடுத்த குழந்தை பிறந்தபோது, அது ஒரு பெண் குழந்தை. அவர்கள், “ஊஹூ. நீங்கள் சொன்ன, ஜோசப்பின்... 
நான் சொன்னேன், “நான் ஜோசப்பைக் குறிக்கிறேன். தேவன் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார்.” 
அதன் பின்பு சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவள்… மீண்டும் தாயாக போகிறாள் என்று எங்களுக்குத் தெரிந்தது. அவர்கள், "இவர் ஜோசப்பா?" 
நான் சொன்னேன் , “எனக்குத் தெரியாது” என்றேன்.
டாக்டர் சொன்னார், "அவளால் முடியாது, சகோதரர் பிரான்ஹாம்." 
நான், "அவளிடம் அந்த ஒன்று  இருக்கும்" என்றேன். 
நான் தரையில் கம்பளத்தின் மீது நடந்து கொண்டிருந்தேன்,  செவிலியர் கீழே வந்தபோது,  உங்களுக்கு தெரியும். போதகர் (Reverend) பிரான்ஹாம்? 
நான், "ஆமாம், அம்மா  (Madam)?" 
அவர் சொன்னார், "ஒரு நல்ல பையன் உங்களுக்கு   பிறந்துள்ளன்  , ஏழு பவுண்டுகள் மற்றும் மூன்று அவுன்ஸ் (சுமார் 3 ½ கி.) 
நான் சொன்னேன், “ஜோசப், இங்கு வர நீண்ட நாட்களாகி விட்டது . அப்பா உன்னை  பார்ப்பதில் மகிழ்ச்சி.
அதன்பின்பு, அவள், "நீங்கள் அவனை ஜோசப் என்று அழைத்தீர்கள்" என்றாள். 
நான், “அதுதான் அவன் பெயர்” என்றேன்.
84. பின்பு ஜோசப் அங்கு என்னுடன் இருந்தான், நான்கு வயதாயிருந்தான்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. இல்லை, மூன்று வயது. அவனுக்கு இப்போது ஐந்து வயது, அவன் தரிசனங்களைப் பார்க்கிறான். மேலும் அன்று அவன் காலை எழுந்தபோது, படுக்கையின் ஓரமாக உட்கார்ந்தான்… அவனும் நானும் ஒருவருக்கொருவர் கைகளை இணைத்து (Arms) ஒன்றாக தூங்குவோம், நாங்கள் உண்மையான நண்பர்கள். அவன் "அப்பா," என்று சொல்லி, "டேவிட் ஒரு மோட்டார் சைக்கிளில் காயப்படப் போகிறான். அவனின் கால் அந்த பக்கம் தோலுரிந்துவிட்டது என்றான். 
நான், "நீ கனவு கண்டீயா?" என்றேன். 
அவன், “இல்லை அப்பா. நான் அங்கேயே பார்த்தேன்." 
நாங்கள் அதை ஒரு புத்தகத்தில் குறித்து வைத்தேன். நாங்கள்  வீட்டிற்கு வந்ததும், எங்கள் வீட்டிற்கு வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு டேவிட் பக்கத்து வீட்டு சிறுவன் மோட்டார் சைக்கிளில் சிறிய பாதையில் வந்தான். அப்போது   அவனது கால்  பக்க வாட்டில் தோலுரிநஂதது, அவன்(ஜோசப்) சொன்னபடி அது  சரியாக இருநஂதது. 
இதை போன்ற  ஒரு  நாட்களில்  நான் போய்விடுவேன், நண்பர்களே. நான் உலகத்தை விட்டுப் போகிறேன். நான் தேவனிடம் ஜெபிக்கிறேன். அவர் அனுமதித்தால் ஆவியை எடுத்து,  இரட்டிப்பாக வைக்கும்படி, நான் போன பின்பு  ஒளியைப் பிரகாசிக்கவும், என் மகன் ஜோசப் மீது பங்கை வைக்கவும் ஜெபிக்கிறேன். 
அப்படியாக அதன் பின்பு... நான் பில்லியையும்  எதிர்பார்த்தேன்... பில்லி மிகச்சிறந்த பையன்களில் ஒருவனாய் இந்த உலகில் இருக்க முடியும்... அவன்  ஊழியத்திற்கு அழைக்கப்படவில்லை. இப்போது, நான் போன பின்பு  இந்த இடத்திற்கு ஏதாவதொரு பிரதிநிதி  இல்லாமல்  இருக்க  விரும்பவில்லை. 
85. பின்பு நான் புறப்பட ஆயத்தமாய் இருந்தோம். சகோதரர் வெல்ச் எவன்ஸைப் பார்த்தேன்... நான்  இதை சொல்லக் கூடாது, சகோதரி எவன்ஸ். நீங்கள் என்னை மன்னிப்பீர்களா? அவரும் நிறைய மீன்களை பிடித்தார், மற்றும் அவர் அவற்றை விளையாட்டுக் காவலரிடம்(Game warden) இருந்து மறைத்து வைத்திருந்தார். மேலும்  நான் அவரை அந்த தரிசனத்தில் பார்த்தேன்; அவர்கள் அவற்றை ஒரு சாக்கில் வைத்திருந் தார்கள்; மேலும் அவைகளை இரண்டு அல்லது மூன்று முறை மறைத்து வைத்தார். நான் சொன்னேன், "அது அதே மனிதனா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? அவரும் புளோரி டாவிலும் மீன் பிடிக்க விரும்புகிறார்  எனச்  சொன்னார்கள்.” 
ஆகையால் அன்று காலையில் நான் அங்கு சென்றேன். நான் உள்ளே நுழைந்ததும்... அங்கே சகோதரர் மெர்சியும் வந்தார், நாங்கள் ஒன்றாக நடந்தோம். நான் சொன்னேன், "அநஂத நபர் தான். அது அவரே  தான்.” 
"அவர் என்னை அவருக்கு அறிமுகப்படுத்திய பிறகு, நான் அழைத்தேன். “திரு. எவன்ஸ்?” நான் அவரிடம் பேசினேன். சிறிது நேரம் பேசிவிட்டு, கிளம்பத் தயாராவோம், "சகோதரர் எவன்ஸ், நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா?" என்றேன்.
அவர், “நிச்சயமாக ” என்றார். 
நான் சொன்னேன், “இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு நீங்கள் ஏதோ ஒரு வளைகுடாவில் மீன்பிடித்துக் கொண்டிருந் தீர்கள். உங்களிடம் ஒரு சாக்கு பை நிறைய மீன்கள் இருந்தன, அவற்றை விளையாட்டு காவலரிடம் மறைக்க முயன்றீர்கள்." 
அவர், "ஓ, நானா, நானா." 
நான் சொன்னேன், “நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். என்னையும் அங்கு மீன்பிடிக்க அழைத்துச் செல்லுங்கள். 
அவர், “சரி” என்றார். 
86. அவருடைய சகோதரர் ஒரு பாவியாய் இருந்தார், அவர்  நிலத்தினடியில் சத்ததுடன் செல்லும் ஒரு பாம்பினால் கடிக்கபட்டிருந்தார். கிரவுண்ட் ராட்லர்(Ground rattler) என்றால் என்ன என்று யாருக்காவது தெரியுமா? அவர் உண்மையில் தகுதியுள்ளவர். மேலும்  அவரது சகோதரர் மருத்துவமனையில் இருந்தார், நீண்டநாள் வளைகைத்தடியில் (Hook) நடந்தார், இல்லையா, சகோதரர் வெல்ச்? ஒரு வளைகைத்தடியில்… 
அதனால் நானும் சகோதரர் வெல்சும் அங்கு மீண்டும்  சென்றோம், அன்று பதினொரு பெரிய மீன்கள் கிடைத்தன. ஓ, என்ன, எவ்வளவு நன்றாக இருந்தது . எனக்கு ஒரு பெரிய கடல் வகை மீன் கிடைத்தது, என்னால் தாங்கி  பிடிக்க  முடியவில்லை அப்போது சகோதரர் வெல்ச் அங்கு வந்தார், அவரது கால்களில்  கால்சட்டை( அனைத்தும் மேலே சுருட்டப்பட்டு  இருந்தது. அவர் சொன்னார், "உங்களால் அவைகளை பிடிக்க முடியவில்லையா?"
நான் சொன்னேன், “அவைகள்  மிகுந்த எடையுள்ளவைகள். அது பதினான்கு, பதினைந்து பவுண்டுகள் எடையுள்ளதாக இருக்க வேண்டும்.” மேலும் நான் அவருடன் அங்கு  இருந்தேன், அவர் பட்டைகள்(Pads) மீது ஓடினார், சிறிய துளைபோடும் வண்டு களை மறுபடியும் எறிந்தேன்.. இதோ அது மீண்டும் வருகிறது. மீண்டும் , ஒரு வெற்றி, அது ஒரு நல்லதாய் இருந்தது, அவைகள் சுமார் எட்டு அல்லது பத்து பவுண்டுகள் எடையுள்ளது . ஆனால் என்னால் அவைகளை  பிடிக்க முடியவில்லை. மேலும் நான் ஒரு வகையான  சாட்டை கயிற்றின் வழியாக கீழே இறக்கி,அவைகளை கொண்டு வர ஆரம்பித்தேன். 
சகோதரர் வெல்ச், "நான் அவைகளை  பெற்றுவிடுவேன்" என்றார். மேலும் அவர் சிந்திக்காமல், மீனைப்பிடிக்க  வெறுங் காலுடன், அந்த துல்களிலும் (Tules) அந்தத் பட்டைகளின் (Pads) கீழே அங்கு குதித்தார். பின்பு நிலத்தினடியில் சத்ததுடன் செல்லும் ஒரு  பாம்பு அவரைப் பிடித்தது. அந்த பாம்பின் இடத்திற்கு சென்றதினால் … 
87. அவர் தனது கால்களை பிடித்துக் கொண்டு அங்கிருந்து குதித்தார். அது அவரது காலில் பிடித்திருந்தது. அங்கு அவரது   எலும்பு  உறைந்தது போனது, மேலும் பற்கள் இணைந் திருந்தது. அங்கே அவரது  கன்னங்களின் வழியாக கண்ணீர் ஓடி வந்தது… 
நான் பார்த்தபோது, இரண்டு இடங்களிலிருந்து  இரத்தம், அதிகளவில் வெளியேறியது.  ஓ, என்ன. நல்லது, நான்...அவர் பலசாலியான மனிதர். நான் எப்படி மூட்டையாகக் கட்டி(Pack) சதுப்பு நிலங்கள் வழியாக சுமார் இரண்டு அல்லது மூன்று மைல்கள் கொண்டு போக போகிறேன்? நான் நடந்தததை சிந்திக்கிறேன். நான், "ஓ, சகோதரர் எவன்ஸ், ஓ, என், சகோதரர் எவன்ஸ்" என்றேன். 
அப்போது ஏதோ ஒன்று என்னிடம் கூறினது, “நான் இதுபோன்ற பிரச்சனை நேரத்தில் மிகவும் உதவியாக இருக்கிறேன்.” நான் முன் எப்போதும் பார்த்ததில்லை. 
நான் என் கைகளை அவர் கால்களில் வைத்து, “இப்போது,  சகோதரர் எவன்ஸ், ஒருசில –சில  நிமிடம் சரியாக.” 
பின்பு நான் சொன்னேன், “பரலோகத் பிதாவே, நாங்கள் அவசர நிலையில் இருக்கிறோம். மேலும் நான்- நான் அறிவேன் உம் வார்த்தை சொல்கிறது, அது இவைகள் - தேள் மற்றும் பாம்புகளின் தலைகள் மிதிக்கும்போதும், அது அவர்களை ஒன்றும் சேதப்படுத்தமாட்டாது. இந்த மனிதன் ஒரு விசுவாசியாக இருக்கிறார். அவர் உங்களுடைய   பிள்ளை. மேலும் நான்  அவர் மேல் என் கையை வைக்கிறேன். அந்த பாம்பிலிருந்து வந்த நஞ்சு விஷத்தை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கடிந்து கொள்கிறேன்.“
பின்பு -அவர் முனகுவதை நிறுத்தக் கேட்டேன். நான் கையை எடுத்தேன். அவர், “எனக்கு வலிக்கவில்லை என்று கூறினார்." அன்று முழுவதும் நாங்கள்  மீன்பிடிக்கச் சென்றோம். அந்த இரவில்   அவர்கள் உள்ளே வரும்போது, அங்கு அவர்கள் சுற்றி பேசிக்கொண்டிருந்தனர். எங்களிடம் மிக பெரிய கடல் மீன் வகைகள் இருந்தது. (Blackbass),அது நீளமானதும், தொங்கிக் கொண்டும் இருந்தது.  
88. அங்கு சுமார் பதினொரு மணியளவில் அவரது சகோதரர் வெளியே வந்தார். அவர் அப்படியே சிறிது நொண்டிக்கொண்டு  இருந்தார். அவர் ஒரு விசுவாசி அல்ல. அவர் ஒரு பாவியான பையன்: ஒரு நல்ல தோழர், மிகவும் நல்ல மனிதர்.  அடுத்த முறை நான் அவரிடம் செல்லும் பொழுது  நான் அவரை கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்ல எதிர்பார்க்கிறேன். அங்குள்ள குளங்களில் ஒன்றில் அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்க போகிறேன். 
ஆதலால், பின்னர் ஒரு நாட்களில் … நாங்கள் அங்கு சென்றோம். அவர் ஒரு தூண்டில் கடை வைத்திருக்கிறார். நாங்கள் தெருவில் ஒரு சிறிய உணவறையில் (little motel across) ஒரு இடத்தில் இருந்தோம். அதன் அருகில் கோட்டை-ஃபோர்ட் பியர்ஸ்(Fort—Fort Pierce) உள்ளது. பின்பு அவரது சகோதரர் அங்கு வந்தார். நான் அவரது சகோதரரிடம் அதைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது  அவர் அந்த பாம்பு கடியை பார்த்தார். 
அவர் சொன்னார் "இப்போது, சகோதரரே, தேவ பக்தியாக இருப்பது நல்லது, ஆனால் முட்டாள்தனமாக அல்ல" என்றார்.. அவர் "நீங்கள் இப்போதே ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது" என்றார். “உங்களுக்கு தெரியுமா, அது என்னை எப்படி ஒரு மருத்துவமனையில் படுக்க வைத்திருந்தது” என்றார். 
சகோதரர் எவன்ஸ் சொன்னார், “நான் இன்று காலை பதினொரு மணிக்கு கடிக்கபட்டேன். இன்றிரவு இது பதினொரு மணியை நெருங்குகிறது. மேலும் தேவன் என்னை  இவ்வளவு நேரமும்  கவனித்து இருந்தார். அவருடைய கிருபையினாலே, இனிவரும்   காலமும் வழியையும் அவரே கவனித்துக்கொள்வார். இனி எந்த ஒரு பொருளையும் தேய்க்கவும் முகரவும் கூடாது.  இது -நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய அற்புதமான கிருபை. 
89. சகோதரன் மற்றும் சகோதரி எவன்ஸை (Sister Evans) மேலும் அந்தச் சிறுமிகளையும் எனக்குத் தெரியும். சகோதரர் வில்லி இங்கே அமர்ந்திருக்கிறார் என நான் நம்புகிறேன்.. அவர்களை பற்றிய படங்களை வரைந்த கலைஞர் அவற்றில்… தேவாலயம் உள்ளது. அது நீங்களா…[ ஒலி நாடாவில் காலியிடம்-ஆசி] அந்த சுவரில் அக்கினிஸஂதம்பம், நீங்கள் அங்கு இருந் ர்களா, நீங்கள்? வில்லி? அதைப் பாருங்கள். சகோதரர் எவன்ஸ்? சகோதரி எவன்ஸ்?   இந்த கட்டிடத்தில் உள்ள எத்தனை பேர்  அன்று காலை தேவாலயத்தில், அதைப் பார்த்தீர்கள்?  எல்லாம் சரி. அது  சுமார்  பதினைந்து நிமிடங்களுக்கு அங்கேயே நின்று, காட்சியளித்தது.  அங்கு கிட்டத்தட்ட நானூறு பேருக்கு  முன்பாக அது நின்றிருந்தது  அதனைப் பார்த்தார்கள் . ஆமென். அது சரி.
அவர்தான் கர்த்தராகிய இயேசு, அதே கர்த்த௫டைய தூதன் இப்போதும் இங்கும் இருக்கிறார். தேவனில் விசுவாசம் வையுங்கள்.    
90. இப்போது, உங்களுக்காக, நாங்கள் அந்த வரிசையை சுமார் பத்து நிமிடங்களில் கொண்டு வர முடியும், பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதல் நமக்குள் பெற்று விட்டால் நம்மால் முடியும். தேவன் அறிவார் உங்கள் விசுவாசத்தை நீங்கள் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே நான் சாட்சி கூறுகிறேன்.
நான் அவரைப்பற்றி சொல்ல ஆரம்பித்தால் அவர் செய்ததைப்பற்றி - என் ஊழியத்தில், இயேசு கிறிஸ்து என் கண்களுக்கு முன்பாக செய்ததை நான் பார்த்திருக்கிறேன், அவர்கள் புத்தகங்களின் தொகுதிகளை உருவாக்க முடியும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும்... நீங்கள் சகோதரர் மூரிடம்(Moore), இதை  கேட்கலாம். இங்கு சுற்றியுள்ள இவர்களும்   செல்லுவார்கள்.  எங்கும், எந்த இடத்திலும், அது எப்போதும் எல்லா நேரத்திலும்; வீட்டில் வெளியே, எங்கும், பரி. ஆவியானவரை  தான் காட்டுகிறது, என்னை இந்த  இடத்தி லிருந்து கொண்டு, என்னை இங்கேயிருந்து கொண்டு செல் லுங்கள், இங்கேயிருந்து. நீங்கள் அவ௫க்கு உங்களை ஒப்புக்கொடுத்தால்..  பாருங்கள்? அது தான் சரி. 
அந்த சகோதரர்கள் அறிந்திருக்கிறார்கள், கூட்டங்களிலும் இருந்தார்கள், தெரிந்த அல்லது கூட்டங்களில் என்னுடன் சுற்றி இருந்த, மேல்-வீட்டின் மேலே மற்றும் எல்லா இடங்களிலும் மற்றபடி, அந்த விஷயங்கள் அப்படித்தான், சகோதரர்களே? அப்படி இருந்தால் உங்கள் கைகளை உயர்த்துங்கள். அது சரி. ஆயிரக்கணக்கானோர் அதற்கு சாட்சியாக இருக்கிறார்கள்.
91. இப்போது, விசுவாசமாயிருங்கள், பரிசுத்த ஆவியானவர் நமக்குக் காண்பித்தால்... எவைகள் என்று ...இரண்டு அல்லது மூன்று பேர் சாட்சிகள். அது சரியா? இரண்டு அல்லது மூன்று பேர் சாட்சிகள். இப்போது விசுவாசம் வையுங்கள் . இப்போது மீண்டும் உங்கள் கைகளை உயர்த்துங்கள், நான் அதை பார்க்க முடியும்.  
அங்கே ஜெப அட்டைகள் இல்லை. உங்களிடம் ஜெப அட்டைகள் இருந்தால், வரிசைக்கு செல்லுங்கள். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கலாம், எனக்கு உங்களைத் தெரியாது, அல்லது உங்கள் இ௫தயத்தில் ஒரு வேண்டுகோள் இ௫க்கலாம், அல்லது  வேறு ஏதாவது, உங்கள் கைகளை உயர்த்திப் பிடிக்கவும்: திடமாய். உங்களுக்கு  ஒன்று கிடைத்ததா? உங்களுக்கு? நீங்கள்? நீங்கள் இடங்கொடுங்கள் மற்றும் நான் பேசுகிறேன்; நீங்கள் எனக்கு மிக அருகில் இருக்கிறீர்கள். 
நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் நம்புகிறீர்களா? என்னை நம்புகிறீர்களா? என்னால் முடிந்தால், பரிசுத்த ஆவியானவர் மூலம், உங்கள் தொந்தரவு  என்ன என்பதை உங்களுக்கு வெளிப்படுத்துவார், அது தேவனிடத்திலிருந்தது என்று, நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இங்குள்ள  மற்றப் பார்வை யாளர்களும் அதையே செய்வீர்களா? (தேவனே, இது உமது மகிமைக்கே) உங்களின்  முழங்கால்கள் மற்றும் கால்களில் பிரச்சனை ஏற்பட்டது. அது சரியா? உங்கள் கையை அசைக்கவும். எல்லாம் சரி, வீட்டிற்குச் சென்று உங்கள் சுகத்தை பெறுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை நலமாக்குகிறார்.
92. இனி வேறு யாராவது உங்கள் முழு இ௫தயத்துடன் விசுவாசிக்கிறீர்களா? காத்திருங்கள். இதோ செல்கிறது. இதோ இங்கே. ஒரு நிமிடம் பொறுங்கள். அந்த மனிதன் அங்கு உட்கார்ந்து இருக்கிறார், மருத்துவமனையில்  உள்ள அவரது தாயா௫க்காக ஜெபிக்கிறார்: இருதயக்கோளாறுக்காக அவர்கள் குணமடைவார்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, சகோதரனே? எல்லாம் சரி ஐயா. தேவன் உங்களை ஆசிர் வதிப்பார். நான்  அந்த மனிதனுக்கு அந்நியனாய் இருக் கிறேன். எனக்கு அவரை தெரியாது. அது சரி, உங்கள் கையை உயர்த்துங்கள். அது சரி. அது உண்மை, இருப்பினும், இல்லையா? நீங்கள் இப்போது விசுவாசிக்கிறீர்களா? என்ன - அவர்கள் என்ன தொடுகிறார்கள்? 
இங்கே ஒரு சிறிய பெண் உட்கார்ந்து தன் முழு இருதயத்தோடும் ஜெபம் செய்கிறாள்; அது அவளுக்காக அல்ல: தனது கணவனின் இரட்சிப்புக்காக. அது சரியாக இருந்தால்,  நீங்கள் எழுந்து நின்று,  பெண்ணே. எல்லாம் சரி. நீங்கள் தேவனை மட்டும் நம்பினால்...
அங்கே பின்னால்  அது ஒரு குடலிறக்கம், இருதயக் கோளாறும் இருக்கிறது. ஓ, என்னே. அது தான் எல்லா இடங்களிலும். நீங்கள் இப்போது விசுவாசிக்கிறார்களா? எத்தனை பேர் உங்கள் முழு இருதத்துடன் விசுவாசிக்கிறார்கள் இப்போது? உங்கள் கையை உயர்த்துங்கள். அது சென்றுக் கொணஂடி௫க்கிறது... என்னால் அதற்குள் நுழைய செல்ல முடியவில்லை. அது  மிக ஆழமானது, 'என்னால் வரிசையாக எடுக்க முடியவில்லை.  
93. அவர் அங்கே தேவனாயிருந்தால்? அவர் இங்கேயும் தேவனாயிருக்கிறார்? அவரே பரலோகத்தில் தேவன். அவரே பூமியிலும் தேவன். அவரே எல்லா இடங்களிலும் தேவன். (எனக்கு ஒரு நிமிடம் போதும், சகோதரர் ஜாக், இந்த வழியில் செல்லவும் பாருங்கள்?) நீங்கள் கேட்டதையும் மற்றும் பார்த்ததையும்  விசுவாசிக்கிறீர்களா? இது தேவனிடமிருந்து வந்ததாக நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அங்கு வெளியுள்ள மக்களும்  அதையே செய்யுங்கள்  அதே  விசுவாசித்தில்? 
இந்த  பெண்ணை பற்றி தேவன் வெளிப்படுத்தினால் அவளுக்கு என்ன தொந்தரவு உள்ளது என்றும், அல்லது அது எதுவாக இருந்தாலும், எனக்கு அது  தெரியாது. நாங்கள் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் நான் நினைக்கிறேன். நீங்கள் தான் ஒரு அந்த.. அவளிடம் ஜெப அட்டை  உள்ளதா, அவளிடம் இருக்கிறதா? எல்லாம் சரி.
 அந்த ஜெப அட்டை… சிறுவர்கள் வந்து இந்த ஜெப அட்டைகளை கலந்து விட்டனர், நீங்கள் அதிலிருந்து  ஒன்றை வைத்தீர்கள். அவ்வளவுதான். பா௫ங்கள்? நீங்கள் பார்க்கலாம்.  அவர் வெளியரங்கமாக என்ன செய்ய முடியும் என்றும்,  இப்போதும், அதே அடையாளம் தான் இயேசு என்று காட்டியது மற்றும் அவர் நிரூபித்தார் அதை அவரே மேசியா என்பதை அவர் இந்த பூமியில் இருந்தபோதும்? நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்களா? நீங்களும்  செய்யுங்கள்.
94. மேலும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா இயேசு இங்கும் பூமியில் இன்றிரவு ஆவியின் ரூபத்தில் இருக்கிறார், பரிசுத்த ஆவியானவர் என்று அழைக்கப்படுகிறார்? மேலும் அவர் தேவாலயத்தில் அவரது தியாகத்தின் வழியாகவும்  இரத்தத்தின் மூலமாய் இருக்கிறார்.  அவர்  அந்த  திரையை கிழித்து தமது  இரத்ததினால் நீயும் நானும் ஷெகினா மகிமையிடம் (Shekinah Glory) சென்று வர வழி செய்தார், அவர் இங்கே பேச முடியும், என் உதடுகளை எடுத்து உன்னிடம் இரண்டு விசுவாசிகளை போல பேச முடியும். நம் நடுவில் நடந்து, பேசுவார். எனக்கு வெளிப்படுத்துவார். அவர் அங்கு செய்த பெரியதான  விஷயங்களையும் அவர் தான்  என்பதையும்  நிரூபிக்க மரிக்கவில்லை. ஆனால் அவர் என்றென்றும் உயிருள்ளவராய்  இருக்கிறார்.
நீங்கள் குணமடையாமலி௫நஂதால்; இப்போது நீங்கள் குணமடைந்திருப்பீர்கள். அது தான்  சரி. ஆனாலும் நீங்கள் உங்கள் கணவருக்காக இங்கே இருக்கிறீர்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் என்னிடம் சொல்ல முடியும் அவருடைய தொந்தரவு என்னவேன்று? எல்லாம் சரி. அவருக்கு வயிற்றில் பிரச்சனையுள்ளது. அது சரி. உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். ஆகையால்தான் நீங்கள் இன்னும் கையை  உயர்த்தி நிற்கிறீர்கள் உங்கள் மகனுக்கு என்ன பிரச்சனை என்று நான் சொல்ல வேண்டுமா? அவனுடைய  தோள்பட்டையில் பிரச்சனை உள்ளது. அங்கு தான் சரியாக இருக்கிறது.
மேலும் நான் வேறு சில  பையனைப் பார்க்கிறேன். அது உங்கள் மருமகன். ஆமாம் ஐயா. தேவனால் அவனுடைய கஷ்டத்தை சொல்ல முடியும் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? எல்லாம் சரி. உங்கள் மருமகனுக்கு வயிற்று பிரச்சனையும்  மற்றும் அவர் பதட்டமாகவும்  இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இரண்டு பொதுவான காரியங்கள் தேவை, அது தான் இரட்சிப்பு, ஏனெனில் அவர்கள் இருவரும் பாவிகளாயிருக்கிறார்கள். இது “கர்த்தர் உரைக்கிறதாவது”. இப்போது உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள்.
95. தேவப் பிதாவே, இந்த அன்புள்ள  சிறுமி... நீங்கள் அனைவரும் என்னுடன் பிரார்த்தனை செய்யுங்கள். தயவுசெய்து, இப்போது இங்குள்ள மக்களுக்காக, தகப்பனே, நான் ஜெபிக்கிறேன். நீ குணமடையவும்  சின்ன  விஷயத்திலும்   மேலும் அவளைக் குணமாக்குங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே. ஆமென்.
அது நல்லது, சகோதரியே   தேவன்  கிறிஸ்து நாமத்தில் உள்ளார்  சுகமாக்க ...?...
வாருங்கள், சகோதரியே. அனைவரும் இப்போது ஜெபம் செய்கிறார்கள். இப்போது, சகோதரியே, என்னால் முடிந்தால் உன் கையை நேராக்க, நான் செய்வேன். என்னால் முடியாது, ஆனால் என்னால் ஜெபிக்க முடியும். பரலோக பிதாவே, நீர் அவளை குணமாக்க ஜெபிக்கிறேன். இந்தக் கை நேராக வரட்டும். அவள் பர்திமேயுவைப் போல போகட்டும், தன் கண்களால், இயேசுவின் நாமத்தை நம்பி இந்த மேடையிலிருந்து செல்லட்டும். ஆமென். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக.
எங்கள் பரலோக பிதாவே, நான் இந்தப் பெண்ணின் கையைப் பிடித்து ஜெபிக்கிறேன். நீர் அவளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் குணப்படுத்தும். ஆமென். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக.
96. இப்போதும், அது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். என்ன தவறு உன்னிடம் உள்ளது என்றும். ஆனால் அதை  நான் சொன்னால்  தான்  அல்லது தெரியாது, எப்படியாயினும்  அதை விசுவாசிக்கிறாயா? பாருங்கள், நான் தொடர்ந்து செல்வேன், அனைவரும் வாருங்கள், பகுத்தறிவு பேசுங்கள், அது என்ன செய்கிறது  என்று தெரியுமா? என்னை உடைத்து போடுகிறது. ஆனால் நாற்காலியில் உட்கார்ந்து இ௫க்கும் போதே உன்னுடைய  முதுகுவலி சரியாக குணமடைந்தது பார்? நீ வீட்டுக்கு போகலாம்…?
நீ முழு இருதயத்துடன் விசுவாசித்தால், மூட்டுவலி (Arthritis) இனி உன்னை தொந்தரவு செய்யாது. செல்லுங்கள், தொடர்ந்து விசுவாசியுங்கள் .
கர்த்தாவே, நீர் அவளைக் குணமாக்கி, அவளைக் நலமடைய செய்யும் என்று இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென். அதை விசுவாசிக்கிறீர்களா…?…
எங்கள் பரலோக பிதாவே, நான் என் சகோதரியின் மீது கைகளை வைக்கும் போது, நீர் அவளை குணமாக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன் இயேசுவின் நாமத்தில். ஆமென்.
தொடர்ந்து ஜெபித்து கொண்டிருங்கள். தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். உங்கள் ஜெபம், நண்பர்களே, நீங்கள் தான் தேவனின் ஆலயமாய் இருக்கிறீர்கள். இந்த ஜனங்களுக்காக ஜெபம் செய்யுங்கள். அதாராயினும் தாயாக இருந்தால் என்ன, தந்தை, உங்கள் கணவர், மனைவி?
எங்கள் பரலோக பிதாவே, நான் ஜெபிக்கிறேன் நீர் அவரைக் குணமாக்கி,அவரை நலமடைய செய்யுங்கள், இயேசுவின் நாமத்தில் நான் கேட்கிறேன், ஆமென்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இப்போது வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கும்போது, தேவன் உங்களைக் குணப்படுத்துவார். அதை   உங்களால் விசுவாசிக்க முடிகிறதா?நீங்கள் அதை விசுவாசியுங்கள்?
97. என்னை - என்னை... கவனிங்கள், நண்பர்களே. நான் உங்களை ஒரு நிமிடம் அமைதிப்படுத்தினால், கவனிங்கள். எங்கு இருந்தாலும் பரவாயில்லை... பா௫ங்கள், பரிசுத்த ஆவியானவர் இங்கிருந்து சென்றுவிட்டார் என்று நீங்கள் நினைக்க கூடாது. நான் ஒவ்வொருவருடனும் பேசாததால். நான்... அப்படி இருந்திருந்தால் அவர்கள் என்னை வெளியே அழைத்துச் சென்றிருப்பார்கள். எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள் . அதாவது கர்த்தரை ஒரு ஸ்திரி  அவருடைய ஆடையை தொட்டபோது,  அவரிடமிருந்து வல்லமை புறப்பட்டதை உணர்ந்தார்? 
[ஒலி நாடாவில் காலியிடம்-ஆசி.]... எத்தனை பேருக்கு தெரியும் தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்ட தானியேல் (Daniel), ஒரு தரிசனத்தைக்  கண்டார், மேலும் அது  அவரின்  தலையில் பல நாட்கள் கலங்கப்பண்ணி கொண்டிருந்தது ?  
எனக்கு அந்த நபர்களை தெரியும் என்று எப்படி நினைக்கிறீர்கள், அவர்களை பற்றி எல்லாம் இது போன்ற விஷயங்கள், அது தரிசனத்தில் இல்லையென்றால்?அதை  நான் எப்படி தெரிந்து கொள்ள முடியும் அதை? பின்பு நான் என்ன குறிப்பிடுகிறேன் என்றும் பார்க்கிறீர்கள்? அந்த வல்லமை ...நான்... நான் என்றால்... நான் ஜனங்கள்  வருவதை பார்க் கிறேன் அந்த அதிர்வு அவர்களைத் தாக்குவதை உணர்கிறீர்கள், பின்னர் நீங்கள் செய்ய வேண்டும்…நீங்கள் உங்கள் தலையைத் திருப்பி, உங்கள் கைகளை அவர்கள் மேல் வைக்க வேண்டும் மற்றும் தொடர்ந்து ஏன் பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார்; அவரும் அதே வேலையைச் செய்கிறார். கர்த்தர் அதை வெளிப்படுத்துவார். அது ஒருவர் கடந்து சென்றதாலோ என்னவோ அல்ல.
98. இங்கே, அடுத்தது எங்கே? இதுவா…? இங்கே. எல்லாம் சரியே. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள்,அல்லவா? உன்னை எனக்குத் தெரியாது; உனக்கும் என்னை தெரியாது. அது சரியென்றால்... நான் முன்பு பிரசங்கித்ததை நீ கேட்டிருப்பாய். ஆனால் உன்னைப் பற்றி  அறியவும், நீங்கள் எங்கேயோ  அநேகமாக பார்வையாளராய் அமர்ந்திருக்கலாம். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று நீ விசுவாசிக்கிறாயா?  நானும்  இருப்பேன் என்றால் தேவ கிருபையால், தேவ ஆவியால் உனக்கு  அதை வெளிப்படுத்த முடியும், அந்த விஷயங்களை…
நீ சொன்னாய், “என்னைப் பற்றி என்ன பேசுகிறீர்கள், சகோதரரே? ஏன்…?”
நான் உன்னுடைய ஆவியைப் பற்றி அறிகிறேன், சரியாகவே அவர் கிணற்றில் இருந்த அந்த பெண்ணிடம் செய்ததைப் போலவே. அதற்கு நீ என்னுடைய பேச்சைக் கேட்க வேண்டும். ஆனால் அது சரி என்று அவர் அறிவித்தால், பிறகு அது சரியே. நான் உண்மையைச் சொல்கிறேன். பா௫ங்கள்? அதன் பின்பு, அது நான் அல்ல என்று நான் கூறினால், அவர் தான், நான் உண்மையைச் சொன்னேன். அவருடைய வார்த்தை அதை அறிவிக்கிறது. பா௫ங்கள்? அது  அவருடைய அனுமதிக்கும் சித்தத்தால் நான் அதைச் செய்வேன். பா௫ங்கள்? அதைச் செய்ய அவர் என்னை அனுமதிக்கிறார்.
இப்போது, நீ உண்மையான பதட்டத்துடன் தவிக்கிறாய். அது சரியே. நீ ஒரு அறுவை சிகிச்சை செய்துள்ளாய், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தாய், அது மிகவும் சரியே. நீ இந்த நகரத்தைச் சேர்ந்தவள் அல்ல; விடோர் அல்லது அது போல ஏதே  ஒரு இடத்திலிருந்து. சரி. நீ யார் என்று தேவன் சொல்ல முடியும் என்று விசுவாசிக்கிறாயா? எல்லாம் சரி, மிஸ் பீச்(Miss Beech), நீ வீட்டிற்கு திரும்பலாம், நலமுடன்  இரு.
99.   நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருங்கள். இந்த மக்கள் கடந்து செல்லும் வரை ஜெபத்தில் இருங்கள். ஜெபித்துக்கொண்டே இருங்கள்.
கர்த்தராகிய இயேசுவே, இந்த மனிதரை குணமாக்குங்கள், நான் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசிர்வதிப்பார். இப்போது மகிழ்ச்சியுடன்  உங்கள் பாதையில் (Road) செல்லுங்கள்.
எங்கள் பரலோகத் பிதாவே, எங்கள் சகோதரியைக் குணமாக்கும்படி நான் ஜெபிக்கிறேன்.
[ஒலி நாடாவில் காலியிடம்- ஆசி.]…இது, நான் ஜெபம் செய்கிறேன், விசுவாச ஜெபம் இயேசுவின் நாமத்தினாலே என் சகோதரரே.
[ஒலி நாடாவில் காலியிடம்-ஆசி.]...     இப்போது, உங்கள் முழு இருதயத்துடன் சந்தேகம் வேண்டாம். முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள், நீங்கள் சுகமாய் இருப்பீர்கள்.
[ஒலி நாடாவில் காலியிடம்- ஆசி.]... ஒரு நபர், ஒரு நல்ல ஆவியைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நீங்கள் ஒரு கிறிஸ்தவர். உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறார்களா, உங்களுக்கு என்ன பிரச்சனை என்று தேவனால் சொல்ல முடியும்? உங்கள் கணவர் சரியாகிவிடுவார் என்று நினைக் கிறீர்கள், அநஂத கண் பிரச்சனை, ஒவ்வாமை உள்ளதா, மற்றும் பல? விசுவாசத்துடன் இப்போது செல்லுங்கள், அவ௫க்கு எல்லாம் சரியாகிவிடும்.
[ஒலிநாடாவில் காலியிடம்-ஆசி.]... அவரை குணப்படுத் துங்கள்  இயேசுவின்  நாமத்தில் ஆமென்.
[ஒலிநாடாவில் காலியிடம்-ஆசி.]… தேவன் உங்களை ஆசிர்வதிப்பார், சகோதரியே. எங்கள் பரலோக பிதாவே, நான் ஒரு குகை அறைக்குள் ஜெபிக்க சென்ற நேரம் எனக்கு நினைவிருக்கிறது நெருக்கடி நிலை இருந்தபோது, அவர்களின் வீட்டில் எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தீர்கள். நான் பிரார்த்தனை ஜெபிக்கிறேன், பிதாவே, இப்போதும் என்ன தவறு என்று தெரிந்துகொண்டு, நான் ஜெபிக்கிறேன் நீர் ஆசீர்வாதங்களையும் மேலும் அவளுடைய இ௫தயத்தின் விருப்பத்தையும் த௫வீர் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
[ஒலிநாடாவில் காலியிடம்- ஆசி.]
100. அவர் உங்களை சுகமாக்குவார் என்று விசுவாசிக் கிறார்களா? ஆம். அந்த அறுவை சிகிச்சையில் இ௫நஂது காக்கும், உங்களை குணமாக்கும், நீங்கள் அதை விசுவாசித்தால். அது என்னவென்று நினைக்கிறீர்கள்? நல்லது, நீங்கள் நினைத்தீர்கள் அது ஒரு  மூளை கட்டி(Tumor). வளர்ச்சி அடைந்திருக்கிறது. நீங்கள் நினைத்தீர்கள் அது ஒரு  மூளை கட்டி, புற்றுநோய் என்றும்.  உங்களிடம் நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால் அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது அவர் அதை குணப்படுத்துவது போல்? அது சரியா? உங்களுக்குத் தெரியும், தேவையானது என்னவென்றால் உங்களை மேலும் அதிகரிக்க தக்கதான விசுவாசம், அது சரிதானே? உன்னை மேலே வரச் செய்யவுமே. சாரா(Sarah), நீ வீட்டிற்குச் செல், சுகமாக இரு.
பிதாவாகிய தேவனே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தி னாலே, அவரைக் குணமாக்குங்கள். தேவனின் கருணை குழந்தையுடன் இருக்கட்டும். அவனை குணப்படுத்தும். அவனின் அம்மா அப்படியொரு வித்தியாசத்தைக் காணட்டும், கர்த்தாவே … [ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.] இயேசுவே, அப்படி இருக்கட்டும் …
[ஒலிநாடாவில்காலியிடம்-ஆசி.]... கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், என் சகோதரி குணமாகட்டும். ஆமென். கேளுங்கள் மேலும் அது…
[ஒலி நாடாவில்  காலியிடம்-ஆசி.]... அவருக்கு உம்முடைய ஆசிர்வாதத்தையும், தைரியத்தையும் நம்பிக்கையும் மற்றும் விசுவாசத்தையும் கொடுங்கள். காலை உணவு வேளை  முதல் அவன் மீது வைத்துள்ளீர் கர்த்தாவே, நீர் அவனை பார்க்கும்படி ஜெபிக்கிறேன், மேலும் நீட்டின நரம்புகள் சீர்படுத்த  இயேசுவின் நாமத்தில், ஆமென். சந்தேகம் வேண்டாம். செல்லுங்கள்,  விசுவாசியுங்கள். எனது  சகோதரனே.
எங்கள் பரலோக பிதாவே, நான் அவள் மீது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கைகளை வைக்கும்போது, அதுவே… அவளுடைய அன்பானவர்கள் அவளை வழிநடத்து கிறார்கள், இந்நேரமுதல் கிறிஸ்துவே வழிநடத்தட்டும், அன்பான தேவனே, அவளைக் குணமாக்குங்கள், அவளை மீண்டும் மீட்டெடுத்தருளும். ஆமென். சந்தேகம் வேண்டாம். வாருங்கள், விசுவாசித்திருங்கள்.
101. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அனைவரும்  உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா? போதுமான விசுவாசம் வையுங்கள். 
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? இளமையின் வலிமை, ஆரோக்கியமான தோற்றம், ஆனால் எப்போதும் அப்படி உங்களால் செய்ய முடியாது. பரிசுத்த ஆவியானவர் உங்கள் பிரச்சனையை என்னிடம் சொல்ல முடியும் என்று நினைக் கிறீர்களா? நீங்களும் நினைக்கலாம்? பார்வையாளர்களும் அதையே விசுவாசிக்கிறீர்களா? கிறிஸ்து கிறிஸ்துவாகவே இருந்தால், அது முடியும். 
ஏதோ ஒன்று உங்களைப் பற்றி விசித்திரமாய் உள்ளது. அதனால் அவர் என்னை நிறுத்தியதற்குக் காரணம். ஓ, நான் உங்களை பாராட்டுகிறேன். இப்போது, குணப்படுத்தவும், என்னால் குணப்படுத்த முடியாது, பெண்ணே நான் ஒரு மனிதன். ஆனாலும் வாழ்க்கையை இப்போதும் மறைக்க முடியாது. வேறொருவருடைய உடல்நிலை சரியில்லை என்று நீங்கள் ஆபத்தான முறையில் இங்கே இருக்கிறீர்கள். இரத்த ஓட்டத்தில் புற்றுநோய் என்கிறீர்கள். சரியான பெயர் லுகேமியா (Leukemia). அது ஒரு மருத்துவமனையில்; இங்கே இல்லை, லூசியானாவில் உள்ளது… அது சரியே. அது நல்லது ஒரு பாவிக்கு இருக்க வேண்டிய விசுவாசம். இப்போது இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் செய்யுங்கள்? எல்லாம் சரியே. உங்கள் கைகளை உயர்த்துங்கள். உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்படட்டும்.[சபையார் ஜெபித்தும் மற்றும் ஆராதனை செய்து கொண்டிருந்தார்கள்-ஆசி.]…?...
ஆமென். நீங்கள் விசுவாசிக்கிறார்களா? இங்குள்ள எத்தனை பேர் கிறிஸ்துவைப் சுகமளிப்பவராய் ஏற்றுக்கொள்ள தயாராய் இருக்கிறீர்கள்? அதை நம்பும்படி நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். உங்கள் விசுவாசம் அவரை நிறுத்த முடியும்? நீங்கள்  இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் குணமடைய விரும்புகிறீர்களா ஒவ்வொருவரும் உங்களுடைய இடத்தி லேயே எழுந்திருங்கள். உங்களிடம் என்ன தவறு  உள்ளது என்று எனக்கு கவலையில்லை. உங்கள் சுகத்தை எழுந்து நின்று ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய  கைகளை உயர்த்துங்கள்.
102. ஓ, தேவனாகிய கர்த்தாவே, வானங்களையும் பூமியை யும் படைத்தவரே, நித்திய ஜீவனை உடையவரே (Author), ஒவ்வொரு நல்ல வரங்களையும் அளிப்பவரே, நான் பிசாசுக்கு சவால் விடுகிறேன். சாத்தானே, இந்த ஜனங்களை விட்டு வெளியே போ. நீ போரில் தோற்றுவிட்டாய். இயேசுவின் நாமத்தாலே, அவர்களை விட்டு போய்விட்டாய். 
இப்போது உங்கள் கைகளை உயர்த்தி, அவரைத் துதியுங்கள்.
நான் அவரைப் புகழ்வேன், நான் அவரைப் போற்றுவேன்...
உங்கள் கைகளை உயர்த்தி, அவரைத் துதியுங்கள். ஜனங்களே, அவரை மகிமைப்படுத்துங்கள். நீங்கள் அவரை ஏற்றுக்கொள்கிறீர்களா? “ஆமென்”  என்று சொல்லுங்கள். அவர் உங்களை குணப்படுத்துபவார் என்று நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? அவரை சொந்த இரட்சகராக நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படியானால் உங்கள் கைகளை உயர்த்தி சொல்லுங்கள். “தேவனுக்கே துதி”...?...  இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ...  ஆமென்.